திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருச்சாழல் பொருந்துவது யாது காரணத்தால் எனின் மற்றொருத்தியாகிய கங்கை நீருருவாக அவ்விறைவன் சடையில் பாய்ந்திலளாயின் தரணி எல்லாம் அவள் வேகத்தில் எதிர்ப்பட்டு பாதாளத்தின் கண்ணே விழுந்து போக அதனால் பெருங்கேடு உண்டாகும் என்று சாழல் கொட்டுவோமாக என்பதாம். மலைமகள் - உமையம்மை. ஓர் பாகம் - இடப்பாகம், "மகிழ்ந் தானை மலைமகளோர் பாகம் வைத்து" (தே.நா.281--10) என வருதலும் காண்க. அவன் சடையிற் பாயும் என்ற குறிப்பினால் மற் றொருத்தி என்றது கங்கையைக் குறித்தது. "நிலைதளர ஆயிரமா முகத்தினோடு பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக்கண்டு" "கங்கை சடைமேலே பாய நின்றான்" 735 எனத் தேவாரத்து வருவன காண்க. நாவு.306-1 ஞான.103-10 சலம்-நீர். முகம் - ஈண்டு உருவுக்காயிற்று. சலமுகத்தால் என்பதற்குக் கோபங்காரணமாக என்ற பொருளும் உண்டு. இறை வன் மலைமகளாகிய சத்தியை ஒருபாகத்தில் வைத்தலும் மற் றொருத்தியாகிய கங்கை கோபத்தால் அவன் சடையிற் பாய்ந்தாள் என நகைச்சுவை தோன்றுமாறு அடிகள் அருளிய திறம் எண்ணி இன்புறத்தக்கது. "நேர்ந்தொருத்தி யொருபாகத் தடங்கக் கண்டு நிலைதளர வாயிரமா முகத்தினோடு, பாய்ந்தொருத்தி படர்சடை மேற் பயிலக்கண்டு" (தே. நாவு. 306-1) என்பது ஈண்டைக்கேற்ப அறியற்பாலது. கங்கையின் பிரவாகத்தினை இறைவன் சடையிற் தாங்காது ஒழி வனேல் என்பதனையே 'சடையிற் பாய்ந்திலளேல்" என உரைக்கப் பட்டது. பிலம் - பாதாளம் தரணியெல்லாம் பிலமுகத்தே பாய்ந்து பெருங்கேடாம் எனக் கூட்டி கங்கையின் வீழ்ச்சியால் பூமியெல்லாம் தாக்குண்டு பாதாளத்தில் வீழ்ந்துபோக அதனாற் பெருங்கேடு உண் டாகும் என்றவாறு. அதனை நீக்கும் பொருட்டே இறைவன் கங்கை யைச் சடையிற் றாங்கினான் என்க. ''வானவர் வணங்கி வாழ்த்த முற்றவோர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர்' (நாவு 58-2) என வருதலுங் காண்க. சடையே நீர கந் ததும்பி நெருப்புக் கலிக்கும்மே" (சிவபெருமான் திருமும்மணிக். 4) என இளம்பெருமான் அடிகள் அரு ளிச் செய்தமையும் ஈண்டறியற்பாலது. இதன் கண் "அவன் சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப் பாய்ந்து பெருங்கேடாம்"; அதனை நீக்கியருளிய மையால் சிவனுடைய காருணியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண் 7
திருச்சாழல் பொருந்துவது யாது காரணத்தால் எனின் மற்றொருத்தியாகிய கங்கை நீருருவாக அவ்விறைவன் சடையில் பாய்ந்திலளாயின் தரணி எல்லாம் அவள் வேகத்தில் எதிர்ப்பட்டு பாதாளத்தின் கண்ணே விழுந்து போக அதனால் பெருங்கேடு உண்டாகும் என்று சாழல் கொட்டுவோமாக என்பதாம் . மலைமகள் - உமையம்மை . ஓர் பாகம் - இடப்பாகம் மகிழ்ந் தானை மலைமகளோர் பாகம் வைத்து ( தே.நா.281--10 ) என வருதலும் காண்க . அவன் சடையிற் பாயும் என்ற குறிப்பினால் மற் றொருத்தி என்றது கங்கையைக் குறித்தது . நிலைதளர ஆயிரமா முகத்தினோடு பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக்கண்டு கங்கை சடைமேலே பாய நின்றான் 735 எனத் தேவாரத்து வருவன காண்க . நாவு.306-1 ஞான.103-10 சலம் - நீர் . முகம் - ஈண்டு உருவுக்காயிற்று . சலமுகத்தால் என்பதற்குக் கோபங்காரணமாக என்ற பொருளும் உண்டு . இறை வன் மலைமகளாகிய சத்தியை ஒருபாகத்தில் வைத்தலும் மற் றொருத்தியாகிய கங்கை கோபத்தால் அவன் சடையிற் பாய்ந்தாள் என நகைச்சுவை தோன்றுமாறு அடிகள் அருளிய திறம் எண்ணி இன்புறத்தக்கது . நேர்ந்தொருத்தி யொருபாகத் தடங்கக் கண்டு நிலைதளர வாயிரமா முகத்தினோடு பாய்ந்தொருத்தி படர்சடை மேற் பயிலக்கண்டு ( தே . நாவு . 306-1 ) என்பது ஈண்டைக்கேற்ப அறியற்பாலது . கங்கையின் பிரவாகத்தினை இறைவன் சடையிற் தாங்காது ஒழி வனேல் என்பதனையே ' சடையிற் பாய்ந்திலளேல் என உரைக்கப் பட்டது . பிலம் - பாதாளம் தரணியெல்லாம் பிலமுகத்தே பாய்ந்து பெருங்கேடாம் எனக் கூட்டி கங்கையின் வீழ்ச்சியால் பூமியெல்லாம் தாக்குண்டு பாதாளத்தில் வீழ்ந்துபோக அதனாற் பெருங்கேடு உண் டாகும் என்றவாறு . அதனை நீக்கும் பொருட்டே இறைவன் கங்கை யைச் சடையிற் றாங்கினான் என்க . ' ' வானவர் வணங்கி வாழ்த்த முற்றவோர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர் ' ( நாவு 58-2 ) என வருதலுங் காண்க . சடையே நீர கந் ததும்பி நெருப்புக் கலிக்கும்மே ( சிவபெருமான் திருமும்மணிக் . 4 ) என இளம்பெருமான் அடிகள் அரு ளிச் செய்தமையும் ஈண்டறியற்பாலது . இதன் கண் அவன் சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப் பாய்ந்து பெருங்கேடாம் ; அதனை நீக்கியருளிய மையால் சிவனுடைய காருணியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண் 7