திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

736 திருவாசக ஆராய்ச்சியுரை 262 கோலால மாகிக் குரைகடல்வா யன்றெழுந்த ஆலால முண்டா னவன் சதுர்தா னென்னேடீ ஆலால முண்டிலனே லன்றயன் மா லுள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. ப - ரை. ஏ டீ - தோழீ . குரைகடல் வாய் கோலாலம் அன்று எழுந்த - ஒலிக்கின்ற பாற்கடலின் கண் பலவகைப் பேரொலி யோடு அக்காலத்தில் தோன்றிய. ஆலாலம் உண்டான் - ஆலகால விடத்தை உண்டான்; அவன் சதுர்தான் என் - அதனால் அவ்விறைவ னது திறமை புலப்படுமாறு என்னையெனின். அன்று ஆலாலம் உண்டி லனேல் - அக்காலத்தில் இறைவன் அவ்வாலகாலவிடத்தை உண்டில னாயின்; அயன் மால் உள்ளிட்ட மேலாய தேவர் எல்லாம் வீடுவர் சாழலோ - பிரமனையும் திருமாலையும் உள்ளிட்ட மேலாகிய தேவர்க ளெல்லாரும் அந்த ஆலகால விடத்தால் அழிந்தொழிவர். அதனால் அவர்களை அழிந்தொழியாமற் காத்தமையே அருள் திறமாம் என்று சாழல் கொட்டுவோம். கீதக்கமுகை ஏடீ, பாற்கடற்கண் பேரொலியோடு அன்று எழுந்த ஆலால விடத்தை இறைவன் உண்டான். அதனால் அவ்விறைவனது திறமை தான் புலப்படுமாறு என்னையெனில், அன்று ஆலகாலவிடத்தை உண் டிலனாயின் அயன் மால் உள்ளிட்ட மேலாய தேவர்கள் எல்லோரும் அவ்விடத்தில் அழிந்தொழிவர். அவர்களை அழியாமற் காத்தமையே அருள் திறம் என்று சாழல் கொட்டுவோம் என்பதாம். கோலா கலம் என்பது கோலாலம் என்றாயது. கோலாகலம்- பலவகைப் பேரொலி கோலாலமாகி எழுந்த ஆலாலம் என இயையும் 'கோல காலமய் உலகெல்லாம் அருந்தொழில் கொண்ட ஆலகாலம் எனக் கந்தபுராணத்து (ததீசி யுத்தரப். 322) என வருதலுங் காண்க, குரைகடல் - ஒலிக்கின்ற கடல். அன்று என்பன ஆலகாலவிடம் எழுந்த காலத்தைச் சுட்டிய பண்டறிசுட்டு. சதுர் - திறமை. அயனும் திருமாலும் தேவருட் சிறந்தோராதலின் "அயன் மா லுள்ளிட்ட தேவர்" என்றார். மேலான தேவர் என்றார் நரகர்கதி மக்கட்கதியினும் தேவர்கதி மேலானமையின். வீடுவர் - அழிவர். இறைவன் ஆலகாலம் உண்டதனால் அவன் திறமை எங்ஙனம் புலப் படுகின்றது என்ற வினாவுக்கு அவன் உண்ணாதொழியின் திருமால் பிரமன் உள்ளிட்ட மேலான தேவர்கள் எல்லாரும் அவ்வாலகால லிடத்தால் அழிந்தொழிவர். அங்ஙனம் அழிந்தொழியாமல் அவர் களைப் பாதுகாத்தமையே இறைவன் அருள் திறமாம் என விடை யிறுத்தவாறு. "சிற் றுயிர்க்கிரங்கிக் காய்சின வாலமுண்டாய்'' நீத்.50 "உம்பரும் இம்பரும் உய்யவன்று போனக மாகநஞ் சுண்டல் பாடி" சுத பொற், 17 என இந்நூலினும்.
736 திருவாசக ஆராய்ச்சியுரை 262 கோலால மாகிக் குரைகடல்வா யன்றெழுந்த ஆலால முண்டா னவன் சதுர்தா னென்னேடீ ஆலால முண்டிலனே லன்றயன் மா லுள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ . - ரை . டீ - தோழீ . குரைகடல் வாய் கோலாலம் அன்று எழுந்த - ஒலிக்கின்ற பாற்கடலின் கண் பலவகைப் பேரொலி யோடு அக்காலத்தில் தோன்றிய . ஆலாலம் உண்டான் - ஆலகால விடத்தை உண்டான் ; அவன் சதுர்தான் என் - அதனால் அவ்விறைவ னது திறமை புலப்படுமாறு என்னையெனின் . அன்று ஆலாலம் உண்டி லனேல் - அக்காலத்தில் இறைவன் அவ்வாலகாலவிடத்தை உண்டில னாயின் ; அயன் மால் உள்ளிட்ட மேலாய தேவர் எல்லாம் வீடுவர் சாழலோ - பிரமனையும் திருமாலையும் உள்ளிட்ட மேலாகிய தேவர்க ளெல்லாரும் அந்த ஆலகால விடத்தால் அழிந்தொழிவர் . அதனால் அவர்களை அழிந்தொழியாமற் காத்தமையே அருள் திறமாம் என்று சாழல் கொட்டுவோம் . கீதக்கமுகை ஏடீ பாற்கடற்கண் பேரொலியோடு அன்று எழுந்த ஆலால விடத்தை இறைவன் உண்டான் . அதனால் அவ்விறைவனது திறமை தான் புலப்படுமாறு என்னையெனில் அன்று ஆலகாலவிடத்தை உண் டிலனாயின் அயன் மால் உள்ளிட்ட மேலாய தேவர்கள் எல்லோரும் அவ்விடத்தில் அழிந்தொழிவர் . அவர்களை அழியாமற் காத்தமையே அருள் திறம் என்று சாழல் கொட்டுவோம் என்பதாம் . கோலா கலம் என்பது கோலாலம் என்றாயது . கோலாகலம் பலவகைப் பேரொலி கோலாலமாகி எழுந்த ஆலாலம் என இயையும் ' கோல காலமய் உலகெல்லாம் அருந்தொழில் கொண்ட ஆலகாலம் எனக் கந்தபுராணத்து ( ததீசி யுத்தரப் . 322 ) என வருதலுங் காண்க குரைகடல் - ஒலிக்கின்ற கடல் . அன்று என்பன ஆலகாலவிடம் எழுந்த காலத்தைச் சுட்டிய பண்டறிசுட்டு . சதுர் - திறமை . அயனும் திருமாலும் தேவருட் சிறந்தோராதலின் அயன் மா லுள்ளிட்ட தேவர் என்றார் . மேலான தேவர் என்றார் நரகர்கதி மக்கட்கதியினும் தேவர்கதி மேலானமையின் . வீடுவர் - அழிவர் . இறைவன் ஆலகாலம் உண்டதனால் அவன் திறமை எங்ஙனம் புலப் படுகின்றது என்ற வினாவுக்கு அவன் உண்ணாதொழியின் திருமால் பிரமன் உள்ளிட்ட மேலான தேவர்கள் எல்லாரும் அவ்வாலகால லிடத்தால் அழிந்தொழிவர் . அங்ஙனம் அழிந்தொழியாமல் அவர் களைப் பாதுகாத்தமையே இறைவன் அருள் திறமாம் என விடை யிறுத்தவாறு . சிற் றுயிர்க்கிரங்கிக் காய்சின வாலமுண்டாய் ' ' நீத் .50 உம்பரும் இம்பரும் உய்யவன்று போனக மாகநஞ் சுண்டல் பாடி சுத பொற் 17 என இந்நூலினும் .