திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

738 திருவாசக ஆராய்ச்சியுரை நெறியிற் சென்று விண்ணுலகில் அடைந்து விடுவர்; பின்னர் உயிர்த் தோற்றங்கள் உளவாகா, அவ்வுயிர்த்தோற்றங்கள் உளவாகி உயிர் கள் மேற்கதியடையும்பொருட்டுப் பிரபஞ்ச சிருட்டி நிகழவேண்டுத லின் இறைவன் யோகிபோலாகப் பெண்பாலுகந்தான் என்று சாழல் கொட்டுவோம். ஏடீ, தென்பாலுகந்தாடும் தில்லைச் சிற்றம்பல முடையான் பெண்ணைத் தன் இடப்பாகத்தில் விரும்பி வைத்துக்கொண்டான்; அதனால் அவன் பெரும்பித்துக்கொண்டவனாவான் அல்லவா எனின்; பெண்ணை இடப்பாகத்தில் ஏற்றுக்கொள்ளாதொழிவனேல், பேதாய், இருநிலத்திலுள்ளவர்கள் சென்று விண்ணுலகில் அடைந்துவிடுவர் என்று சாழல் கொட்டுவோம் என்பதாம். யோகநெறியிற் தென்பாலுகந்தாடும் தில்லைச்சிற்றம்பலவன் அங்கே மாத்திரமன் றித் திருவாலங்காட்டு இரத்தினசபையிலும், திருவாலவாயின் வெள் ளிச்சபையிலும், திருநெல்வேலியில் தாமிரசபையிலும், திருக்குற்றாலத் தில் சித்திர சபையிலுமாகத் தெற்கு நோக்கி அடுக்க வந்து வந்து ஆனந்தக் கூத்தாடுதலின் 'தென்பாலுகந்து' என்றார். தென்பாலுகந் தாடும் தில்லைச்சிற்றம்பலவன் என்றது, 'கடுக்கவின்பெறு கண்டனும் தென்றிசை நொக்கி அடுக்கவந்துவந் தாடுவான் ஆடலினிளைப்பு mate விடுக்க ஆரமென்கால் திருமுகத்திடை மாந்தி மடுக்கவுந் தமிழ்த் திருச்செவி மாந்தவு மன்றோ" என்ற காஞ்சிப்புராணப்பாடலுக்கு மூலமாயுள்ளது. தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண் திருக்கூத்து இயற்றும் இறை வன் பெண்ணை இடப்பாகத்திற் கொண்டானெனின் அவன்பெரும் பித்தனாகானோ என்ற கேள்விக்கு, 'அறிவிலியே' அவ்விறைவன் பெண் பால் உகந்திலனேல் இப்போது இந்நிலவுலகத்திலுள்ளோர் யோகு நெறியால் அவ்விறைவன் சாரூபத்தை அடைவர், பின்னர் உலகில் உயிர்த்தோற்றங்கள் உளவாகா. அதனால் உயிர்கள் தோன்றி வினை செய்து வினைப்பயன்களை அனுபவித்துப் பக்குவமுற்றபோது மேற்கதி யடையமாட்டா. அங்ஙனமாகிய அவலநிலையினீங்கி உலகியல் எப் பொழுதும் நிகழும் வண்ணம் இறைவன் பெண்பாலுகந்தான்' என விடையிறுத்தவாறு காண்க. பெண்பாலுகந்திலனேல் இருநிலத்தோர் யோகு எய்துவர் என்பது, "வில்லாடன் மாரனிருப்பவும் மோகம் விளைந்த வந்நாட் டில்ல திருந்தன எல்லாவுயிருந் தம் போகத்தையே'' என்பதனாலுமறிக.
738 திருவாசக ஆராய்ச்சியுரை நெறியிற் சென்று விண்ணுலகில் அடைந்து விடுவர் ; பின்னர் உயிர்த் தோற்றங்கள் உளவாகா அவ்வுயிர்த்தோற்றங்கள் உளவாகி உயிர் கள் மேற்கதியடையும்பொருட்டுப் பிரபஞ்ச சிருட்டி நிகழவேண்டுத லின் இறைவன் யோகிபோலாகப் பெண்பாலுகந்தான் என்று சாழல் கொட்டுவோம் . ஏடீ தென்பாலுகந்தாடும் தில்லைச் சிற்றம்பல முடையான் பெண்ணைத் தன் இடப்பாகத்தில் விரும்பி வைத்துக்கொண்டான் ; அதனால் அவன் பெரும்பித்துக்கொண்டவனாவான் அல்லவா எனின் ; பெண்ணை இடப்பாகத்தில் ஏற்றுக்கொள்ளாதொழிவனேல் பேதாய் இருநிலத்திலுள்ளவர்கள் சென்று விண்ணுலகில் அடைந்துவிடுவர் என்று சாழல் கொட்டுவோம் என்பதாம் . யோகநெறியிற் தென்பாலுகந்தாடும் தில்லைச்சிற்றம்பலவன் அங்கே மாத்திரமன் றித் திருவாலங்காட்டு இரத்தினசபையிலும் திருவாலவாயின் வெள் ளிச்சபையிலும் திருநெல்வேலியில் தாமிரசபையிலும் திருக்குற்றாலத் தில் சித்திர சபையிலுமாகத் தெற்கு நோக்கி அடுக்க வந்து வந்து ஆனந்தக் கூத்தாடுதலின் ' தென்பாலுகந்து ' என்றார் . தென்பாலுகந் தாடும் தில்லைச்சிற்றம்பலவன் என்றது ' கடுக்கவின்பெறு கண்டனும் தென்றிசை நொக்கி அடுக்கவந்துவந் தாடுவான் ஆடலினிளைப்பு mate விடுக்க ஆரமென்கால் திருமுகத்திடை மாந்தி மடுக்கவுந் தமிழ்த் திருச்செவி மாந்தவு மன்றோ என்ற காஞ்சிப்புராணப்பாடலுக்கு மூலமாயுள்ளது . தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண் திருக்கூத்து இயற்றும் இறை வன் பெண்ணை இடப்பாகத்திற் கொண்டானெனின் அவன்பெரும் பித்தனாகானோ என்ற கேள்விக்கு ' அறிவிலியே ' அவ்விறைவன் பெண் பால் உகந்திலனேல் இப்போது இந்நிலவுலகத்திலுள்ளோர் யோகு நெறியால் அவ்விறைவன் சாரூபத்தை அடைவர் பின்னர் உலகில் உயிர்த்தோற்றங்கள் உளவாகா . அதனால் உயிர்கள் தோன்றி வினை செய்து வினைப்பயன்களை அனுபவித்துப் பக்குவமுற்றபோது மேற்கதி யடையமாட்டா . அங்ஙனமாகிய அவலநிலையினீங்கி உலகியல் எப் பொழுதும் நிகழும் வண்ணம் இறைவன் பெண்பாலுகந்தான் ' என விடையிறுத்தவாறு காண்க . பெண்பாலுகந்திலனேல் இருநிலத்தோர் யோகு எய்துவர் என்பது வில்லாடன் மாரனிருப்பவும் மோகம் விளைந்த வந்நாட் டில்ல திருந்தன எல்லாவுயிருந் தம் போகத்தையே ' ' என்பதனாலுமறிக .