திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை அழுந்தி நிற்றல். 'அழிவின்றி நின்றதோர் ஆனந்த வெள்ளத்திடை யழுத்தி" (திருவாசகம் பாண்டிப்.8) எனவும், ''ஆனந்த வெள்ளத் திடைமூழ்கி" (பெரியபுரா.திருநாவு,101) எனவும் வருவன காண்க. இறைவன் அடிகளை ஆனந்த வெள்ளத்தழுத்தியமை புத்தன் வினாவன் றாயினும் சிவபெருமானே எல்லாவுயிர்க்கும் வீடுபேற்றினையருளும் முதல்வனாவன் என்பதனைப் புத்தனுக்கு அறிவிக்கும் பொருட்டு இங்ங னம் கூறப்பட்டதென்க. 740 ளிச் எனப் ஆனந்த வெள்ளத்தழுத்துவித்த திருவடிகள் என்றது அத்திருவடி யாகிய அருள் இறைவனோடு அபேதமாதல் பற்றியாகும். வானுந்து தேவர் - வானுலகில் அறச்சிறப்பாற் செலுத்தப்பட்டுத் தேவரான உயிர்கள். உந்துதல் - செலுத்துதல், "தானந்தோறும் உந்திடுங் கரணந் தன்னிற் செயல் தொறும்" என்னும் சிவஞான சித்தியார் உரையில் (4-36) உந்தி - செலுத்தி எனச் சிவஞானசுவாமிகள் அரு செய்தமையுங் காண்க. இனி, உந்துதல் - உயர்தல் பொருள் கொண்டு வானுலகிலுள்ள தேவர்களில் உயர்ந்தவர்கள் எனவும் பொருள் கொள்ளலாம். ஓர் வான்பொருள் - ஒப்பற்ற பெரிய பொருள் என்றது அத்தேவர்களும் அத்திருவடிகளாலேயே தேவர்களாயினர் என்பதையும் வீடுபேற்றினை யடைதற்குரியது என் பதனையும் விளக்கும் பொருட்டாகும். இதனால் புத்தர் முதலாகிய சமயத் தலைவர்கள் உயர்ந்த பதவிகளையோ வீடு பேற்றினையோ. கொடுக்கும் ஆற்றலுடையரல்லர் என்பது விளங்கவைத்தமை காண்க வான் - பெரிய(திருக்கோவையார் 10 உரை). இதன் கண், 'ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான்" என்பதனால் சிலனுடைய காருணியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 265 நங்காயி தென்னதவம் நரம்போ டெலும்பணிந்து சங்காளத் தோண்மேலே காதலித்தான் காணேடீ சங்காள மாமாகேள் காலசந் தரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. 10 ப-ரை. ஏடீ நங்காய் -ஏடீ பெண்ணே, நரம்பு ஓடு எலும்பு அணிந்து - நரம்பினையும் ஆமையோட்டினையும் எலும்பினையும் அணிந்து, சங்காளம் தோள் மேலே காதலித்தான் - எலும்புக்கூட்டி னைத் தோண்மேலே விரும்பி அணிந்துகொண்டான். இது என்னதவம்- இது என்ன தவவேடமோ எனின். கங்காளம் ஆம் ஆறு கேள் - இறை வன் அணிந்த எலும்புக்கூடு வந்தவிதத்தைக் கேட்பாயாக. காலாந் தரத்து இருவர் தம் காலம் செய்ய - சர்வ சங்கார காலத்தில் தேவத் தலைவர்களாகிய திருமால் பிரமன் என்னும் இருவரின் வாழ்நாளை
திருவாசக ஆராய்ச்சியுரை அழுந்தி நிற்றல் . ' அழிவின்றி நின்றதோர் ஆனந்த வெள்ளத்திடை யழுத்தி ( திருவாசகம் பாண்டிப் .8 ) எனவும் ' ' ஆனந்த வெள்ளத் திடைமூழ்கி ( பெரியபுரா.திருநாவு 101 ) எனவும் வருவன காண்க . இறைவன் அடிகளை ஆனந்த வெள்ளத்தழுத்தியமை புத்தன் வினாவன் றாயினும் சிவபெருமானே எல்லாவுயிர்க்கும் வீடுபேற்றினையருளும் முதல்வனாவன் என்பதனைப் புத்தனுக்கு அறிவிக்கும் பொருட்டு இங்ங னம் கூறப்பட்டதென்க . 740 ளிச் எனப் ஆனந்த வெள்ளத்தழுத்துவித்த திருவடிகள் என்றது அத்திருவடி யாகிய அருள் இறைவனோடு அபேதமாதல் பற்றியாகும் . வானுந்து தேவர் - வானுலகில் அறச்சிறப்பாற் செலுத்தப்பட்டுத் தேவரான உயிர்கள் . உந்துதல் - செலுத்துதல் தானந்தோறும் உந்திடுங் கரணந் தன்னிற் செயல் தொறும் என்னும் சிவஞான சித்தியார் உரையில் ( 4-36 ) உந்தி - செலுத்தி எனச் சிவஞானசுவாமிகள் அரு செய்தமையுங் காண்க . இனி உந்துதல் - உயர்தல் பொருள் கொண்டு வானுலகிலுள்ள தேவர்களில் உயர்ந்தவர்கள் எனவும் பொருள் கொள்ளலாம் . ஓர் வான்பொருள் - ஒப்பற்ற பெரிய பொருள் என்றது அத்தேவர்களும் அத்திருவடிகளாலேயே தேவர்களாயினர் என்பதையும் வீடுபேற்றினை யடைதற்குரியது என் பதனையும் விளக்கும் பொருட்டாகும் . இதனால் புத்தர் முதலாகிய சமயத் தலைவர்கள் உயர்ந்த பதவிகளையோ வீடு பேற்றினையோ . கொடுக்கும் ஆற்றலுடையரல்லர் என்பது விளங்கவைத்தமை காண்க வான் - பெரிய ( திருக்கோவையார் 10 உரை ) . இதன் கண் ' ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் என்பதனால் சிலனுடைய காருணியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 265 நங்காயி தென்னதவம் நரம்போ டெலும்பணிந்து சங்காளத் தோண்மேலே காதலித்தான் காணேடீ சங்காள மாமாகேள் காலசந் தரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ . 10 - ரை . ஏடீ நங்காய் -ஏடீ பெண்ணே நரம்பு ஓடு எலும்பு அணிந்து - நரம்பினையும் ஆமையோட்டினையும் எலும்பினையும் அணிந்து சங்காளம் தோள் மேலே காதலித்தான் - எலும்புக்கூட்டி னைத் தோண்மேலே விரும்பி அணிந்துகொண்டான் . இது என்னதவம் இது என்ன தவவேடமோ எனின் . கங்காளம் ஆம் ஆறு கேள் - இறை வன் அணிந்த எலும்புக்கூடு வந்தவிதத்தைக் கேட்பாயாக . காலாந் தரத்து இருவர் தம் காலம் செய்ய - சர்வ சங்கார காலத்தில் தேவத் தலைவர்களாகிய திருமால் பிரமன் என்னும் இருவரின் வாழ்நாளை