திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருச்சாழல் முடிவு செய்யும் பொருட்டு அழித்தருளி, தரித்தனன் சாழலோ- அவர்கள் எலும்புக்கூட்டினைத் தரித்துக்கொண்டு தானே முழுமுதல் இறைவன் என்பதை யாவரும் அறியும் வண்ணம் செய்தனன் என்று அறிவாயாக என்று சாழல் கொட்டுவோம். 741 ஏடி பெண்ணே, நரம்போடு எலும்பு அணிந்து எலும்புக் கூட்டி னைத் தோண்மேலே விரும்பி அணிந்து கொண்டான். இது என்ன தவ வேடமோ எனின், இறைவன் அணிந்த எலும்புக்கூடு வந்த விதத்தி னைச் சொல்லக் கேட்பாயாக. சர்வசங்கார காலத்தில் தேவத் தலை வர்களாகிய திருமால் பிரமன் என்னும் இருவரின் வாழ்நாளை முடிவு செய்யும் பொருட்டு அழித்தருளி அவர்கள் எலும்புக் கூட்டினைத் தரித் துக்கொண்டு தாமே முழுமுதல் இறைவன் என்பதை யாவரும் அறி யும் வண்ணம் செய்தனன் என்று அறிவாயாக என்று சாழல் கொட்டு வோம் என்பதாம். ஏ டீ நங்காய் என இயைத்து ஏடீ பெண்ணே எனப் பொருள் கொள்ளப்பட்டது. ஈதென்ன தவம் எனற்பாலது எதுகை இன்பம் நோக்கி இதென்ன தவம் என நின்றது. நரம்பு ஓடு எலும்பு அணிந்து கங்காளம் தோண்மேலே காதலித்தான், இதென்ன தவம் என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க. திருமாலின் கூர்மாவதாரத் தில் அக் கூர்மத்தின் செருக்கையடக்கி அதன் ஓட்டைப் பறித்து அணிந்த இறைவன் என்க. "வரைபுக்கு மார்பிலொ ராமை வாங்கி யணிந்தவர்" (ஞான.39-4) "ஏழிட்டிருக்கு நல்லக்கு மரவு மென் பாமையோடும்'" (நாவு. 111-6) "ஆமையும் எலும்பும் ஈடு தாங்கிய மார்புடையானே" (சுந்-70-9) எனத் தேவாரத்து வருவன காண்க. நரம்போடெலும்பணிந்து என் பதற்கு நரம்போடு கூடிய எலும்பை அணிந்து என்று பொருளுரைப் பாருமுளர். கங்காளம் - எலும்புக்கூடு. தோண்மேலே காதலித்தான் - தோண் மேலே விரும்பியணிந்தான். ' எலும்பா லணியிறை யம்பலத்தோன்'' (197) எனத் திருக்கோவையாரினும் வருதல் காண்க. ஆமாறு என்பது ஆமா என ஈறு கெட்டது. காலாந்தரம் - காலமுடிவு. சர்வசங்கார காலம். இருவர் - திருமால் பிரமன். காலஞ்செய்ய அழித்து என ஒரு சொல் வருவித்துரைத்து முடிக்க. தரித்தனன் - அவர்கள் எலும்புக் கூட்டினைத் தரித்தான். "பெருங்கடல் மூடிப் பிரளயங்கொண்டு பிரமனும் போய் இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
திருச்சாழல் முடிவு செய்யும் பொருட்டு அழித்தருளி தரித்தனன் சாழலோ அவர்கள் எலும்புக்கூட்டினைத் தரித்துக்கொண்டு தானே முழுமுதல் இறைவன் என்பதை யாவரும் அறியும் வண்ணம் செய்தனன் என்று அறிவாயாக என்று சாழல் கொட்டுவோம் . 741 ஏடி பெண்ணே நரம்போடு எலும்பு அணிந்து எலும்புக் கூட்டி னைத் தோண்மேலே விரும்பி அணிந்து கொண்டான் . இது என்ன தவ வேடமோ எனின் இறைவன் அணிந்த எலும்புக்கூடு வந்த விதத்தி னைச் சொல்லக் கேட்பாயாக . சர்வசங்கார காலத்தில் தேவத் தலை வர்களாகிய திருமால் பிரமன் என்னும் இருவரின் வாழ்நாளை முடிவு செய்யும் பொருட்டு அழித்தருளி அவர்கள் எலும்புக் கூட்டினைத் தரித் துக்கொண்டு தாமே முழுமுதல் இறைவன் என்பதை யாவரும் அறி யும் வண்ணம் செய்தனன் என்று அறிவாயாக என்று சாழல் கொட்டு வோம் என்பதாம் . டீ நங்காய் என இயைத்து ஏடீ பெண்ணே எனப் பொருள் கொள்ளப்பட்டது . ஈதென்ன தவம் எனற்பாலது எதுகை இன்பம் நோக்கி இதென்ன தவம் என நின்றது . நரம்பு ஓடு எலும்பு அணிந்து கங்காளம் தோண்மேலே காதலித்தான் இதென்ன தவம் என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க . திருமாலின் கூர்மாவதாரத் தில் அக் கூர்மத்தின் செருக்கையடக்கி அதன் ஓட்டைப் பறித்து அணிந்த இறைவன் என்க . வரைபுக்கு மார்பிலொ ராமை வாங்கி யணிந்தவர் ( ஞான.39-4 ) ஏழிட்டிருக்கு நல்லக்கு மரவு மென் பாமையோடும் ' ( நாவு . 111-6 ) ஆமையும் எலும்பும் ஈடு தாங்கிய மார்புடையானே ( சுந் - 70-9 ) எனத் தேவாரத்து வருவன காண்க . நரம்போடெலும்பணிந்து என் பதற்கு நரம்போடு கூடிய எலும்பை அணிந்து என்று பொருளுரைப் பாருமுளர் . கங்காளம் - எலும்புக்கூடு . தோண்மேலே காதலித்தான் - தோண் மேலே விரும்பியணிந்தான் . ' எலும்பா லணியிறை யம்பலத்தோன் ' ' ( 197 ) எனத் திருக்கோவையாரினும் வருதல் காண்க . ஆமாறு என்பது ஆமா என ஈறு கெட்டது . காலாந்தரம் - காலமுடிவு . சர்வசங்கார காலம் . இருவர் - திருமால் பிரமன் . காலஞ்செய்ய அழித்து என ஒரு சொல் வருவித்துரைத்து முடிக்க . தரித்தனன் - அவர்கள் எலும்புக் கூட்டினைத் தரித்தான் . பெருங்கடல் மூடிப் பிரளயங்கொண்டு பிரமனும் போய் இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்