திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இடபம் உகந்து ஏறிய ஆறு-ஏற்றினை விரும்பி ஏறியதன்காரணம். "ஏறுகந் தேற வல்லானும்" "ஏறுகந் தேறினானே" "ஆனுகந் தேறுவானே" ''பெற்றமே உகந்தங்கேறும் பெருமையையுடையர் போலும்'' (நாவு. 4 - 3; 51 - 3; 57 - 2; 68 - 9) எனத் தேவாரத்தும் "விடையுகந்தேறும் பிரானை" எனப் பெரியபுராணத்தும் (திருநாவு. 1380) வருவன காண்க. 748 வாகனங்களாகக் கொள்ளப்படுவன பலவுளவா கவும் அவற்றைக் கொள்ளாது மற்று எவரும் எவ்விடத்தும் வாகனமாகக் கொள்ளாது இடபத்தை வாகனமாகக் கொண்டது என்னை என்பது புத்தன் வினா. திரிபுரதகனத்துக்கு அமைந்த தேர், ''தச்சு விடுத்தலும் தாமடியிட்டலு மச்சு முறிந்த தென் றுந்தீபற” (திருவுந்தியார் 3) என்றவாறு முறிந்துபோக. இறைவனுக்கு அப்போது உண்டாகிய சிரிப்பினாலாய அக்கினியே திரிபுரங்களை அழித்ததாக, ஊர்தியின்றி நின்ற இறைவனைத் திருமால் இடபவூர்தியாகத் தாங்கினான் என்பது ஊமைப்பெண் விடை. "திரியுமுப்புரந் தீப்பிழம்பாகச் செங்கண்மால் விடைமேற்றிகழ்வானை" (சுந்:61- 3) எனத் தேவாரத்தும் வருதலும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது. இறைவனுக்கு இயல்பாக அமைந்த ஊர்தி தருமதேவதையாகிய இடபமாதலின் அத்தேவதையின் அம்சமாகிய திருமாலும் இடப வுருக்கொண்டு தாங்கினான் என்க. இதனை, "வீறார் தருமக் கடவுட் சின வேள்விடைக்கோர் கூறாதலின் மாயனு முப்புரங்கொன்ற அஞ்ஞான் றேறாய் எமைத் தேரொடுந் தாங்கினன்" (தழுவக்.79) எனக் காஞ்சிப்புராணத்து வருதலானுந் தெளிக. (01-LES அவை என்றது பண்டறிசுட்டு. அந்நாளில் என்பதும் பண்டறி சுட்டு. இதன்கண் "தடமதில்கள் அவை மூன்றுந் தழலெரித்த வந் நாளில்" என்பதனால் சிவனுடைய காருணியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 270 நன்றாக நால்வர்க்கும் நான்மறையி னுட்பொருளை அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தா னாயிடினுங் கொன்றான் காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ. 15
திருவாசக ஆராய்ச்சியுரை இடபம் உகந்து ஏறிய ஆறு - ஏற்றினை விரும்பி ஏறியதன்காரணம் . ஏறுகந் தேற வல்லானும் ஏறுகந் தேறினானே ஆனுகந் தேறுவானே ' ' பெற்றமே உகந்தங்கேறும் பெருமையையுடையர் போலும் ' ' ( நாவு . 4 - 3 ; 51 - 3 ; 57 - 2 ; 68 - 9 ) எனத் தேவாரத்தும் விடையுகந்தேறும் பிரானை எனப் பெரியபுராணத்தும் ( திருநாவு . 1380 ) வருவன காண்க . 748 வாகனங்களாகக் கொள்ளப்படுவன பலவுளவா கவும் அவற்றைக் கொள்ளாது மற்று எவரும் எவ்விடத்தும் வாகனமாகக் கொள்ளாது இடபத்தை வாகனமாகக் கொண்டது என்னை என்பது புத்தன் வினா . திரிபுரதகனத்துக்கு அமைந்த தேர் ' ' தச்சு விடுத்தலும் தாமடியிட்டலு மச்சு முறிந்த தென் றுந்தீபற ( திருவுந்தியார் 3 ) என்றவாறு முறிந்துபோக . இறைவனுக்கு அப்போது உண்டாகிய சிரிப்பினாலாய அக்கினியே திரிபுரங்களை அழித்ததாக ஊர்தியின்றி நின்ற இறைவனைத் திருமால் இடபவூர்தியாகத் தாங்கினான் என்பது ஊமைப்பெண் விடை . திரியுமுப்புரந் தீப்பிழம்பாகச் செங்கண்மால் விடைமேற்றிகழ்வானை ( சுந் : 61- 3 ) எனத் தேவாரத்தும் வருதலும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது . இறைவனுக்கு இயல்பாக அமைந்த ஊர்தி தருமதேவதையாகிய இடபமாதலின் அத்தேவதையின் அம்சமாகிய திருமாலும் இடப வுருக்கொண்டு தாங்கினான் என்க . இதனை வீறார் தருமக் கடவுட் சின வேள்விடைக்கோர் கூறாதலின் மாயனு முப்புரங்கொன்ற அஞ்ஞான் றேறாய் எமைத் தேரொடுந் தாங்கினன் ( தழுவக் .79 ) எனக் காஞ்சிப்புராணத்து வருதலானுந் தெளிக . ( 01 - LES அவை என்றது பண்டறிசுட்டு . அந்நாளில் என்பதும் பண்டறி சுட்டு . இதன்கண் தடமதில்கள் அவை மூன்றுந் தழலெரித்த வந் நாளில் என்பதனால் சிவனுடைய காருணியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 270 நன்றாக நால்வர்க்கும் நான்மறையி னுட்பொருளை அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தா னாயிடினுங் கொன்றான் காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ . 15