திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருச்சாழல் ப-ரை, ஏ டீ - பெண்ணே, அன்று ஆலின் கீழ் இருந்து - அந்நா ளில் கல்லால விருட்சநீழலின் கண் தென்முகத் தெய்வப் பரமாசாரிய ராய் இருந்து, நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை - சனகர், சனாதனர், சனற்குமாரர், சனந்தனர் என்னும் இருடிகள் நால்வர்க் கும் நான்கு வேதங்களின் தத்துவப்பொருளை, நன்றாக அறம் உரைத் தான் காண் - செவ்விதாக அறவுரையாய் உபதேசித்தருளினான்; அங் ஙனம் அறமுரைக்கும் தன்மை மாத்திரம் உடையனோவெனின்; அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும் - அந்நாளில் கல்லால விருட்சநீழலின் கண் இருந்து அங்கு அறவுரை கூறினனாயி னும், புரம் மூன்றும் கூட்டோடே கொன்றான் காண் சாழலோ- தனது மறக்கருணையால் முப்புரங்களையும் அடியோடு அழித்த ஆற்ற லுடையான் என அறிக என்று சாழல் கொட்டுவோம். 749 ஏடீ! அந்நாளில் ஆலின் கீழிருந்து நால்வர்க்கு நான்கு வேதங் களின் உட்பொருளை நன்றாக அறமுரைத்தான்; அங்ஙனம் அறமுரைக் கும் தன்மை மாத்திரம் உடையனோவெனின் அன்று ஆலின்கீழிருந்து அறமுரைத்தானாயினும் தனது மறக்கருணையால் முப்புரங்களையும் கூட்டோடே கொன்ற ஆற்றலுடையான் என அறிக என்று சாழல் கொட்டுவோம் என்பதாம். நன்றாக - செவ்விதாக. "ஆல நீழல் அன்றிருந்தறநெறி, நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை'' எனப் பதினொராந் திருமுறையில் (திருவெழுகூற்றிருக்கை 32-3) வருதல் காண்க. இனி, நன்மையுண் டாக எனினுமாம். நால்வர் சனகாதியர், நான்மறையின் உட்பொ ருள் என்றது அறம் பொருள் இன்பம் வீட்டினை. "அருந்தவருக்காலின் அறமுதலா நான்கினையும் இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ" (சாழல் 20) என அடிகள் அருளியமையுங் காண்க. ஆல் திருக்கைலாயத்தின் தென் திசைக்கணுள்ள ஆலவிருட்சம். "மறைநான்கும் கல்லால் நிழற் கீழ்ப் பன்னிய வெங்கள் பிரான்" (சுந். 22-1) எனத் தேவாரத்தும் வருதல் காண்க. பொருளை அறமுரைத்தான் - பொருள் நான்கினை யும் அறவுரையாகக் கூறினான். "அன்றால நிழற்கீழ் அருமறைகள் தானருளி" (பூவல்லி 13) "ஆலின்கீழ் அநமோர் நால்வருக் கருளி" (ஞான. 41-7) 'அன்றாலின் கீழிருந்தங் கறம் புரிந்த அருளாளர்" (ஞான 323 -5) "அன்றாலின் கீழிருந்தங் கறஞ் சொன்னானை" (நாவு.263-3) "அன்றாலின் கீழிருந்து மறைப்பொருள் நால்வர்க் கருள் செய்தானை (நாவு. 297-1) என வருவனவுங் காண்க.
திருச்சாழல் - ரை டீ - பெண்ணே அன்று ஆலின் கீழ் இருந்து - அந்நா ளில் கல்லால விருட்சநீழலின் கண் தென்முகத் தெய்வப் பரமாசாரிய ராய் இருந்து நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை - சனகர் சனாதனர் சனற்குமாரர் சனந்தனர் என்னும் இருடிகள் நால்வர்க் கும் நான்கு வேதங்களின் தத்துவப்பொருளை நன்றாக அறம் உரைத் தான் காண் - செவ்விதாக அறவுரையாய் உபதேசித்தருளினான் ; அங் ஙனம் அறமுரைக்கும் தன்மை மாத்திரம் உடையனோவெனின் ; அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும் - அந்நாளில் கல்லால விருட்சநீழலின் கண் இருந்து அங்கு அறவுரை கூறினனாயி னும் புரம் மூன்றும் கூட்டோடே கொன்றான் காண் சாழலோ தனது மறக்கருணையால் முப்புரங்களையும் அடியோடு அழித்த ஆற்ற லுடையான் என அறிக என்று சாழல் கொட்டுவோம் . 749 ஏடீ ! அந்நாளில் ஆலின் கீழிருந்து நால்வர்க்கு நான்கு வேதங் களின் உட்பொருளை நன்றாக அறமுரைத்தான் ; அங்ஙனம் அறமுரைக் கும் தன்மை மாத்திரம் உடையனோவெனின் அன்று ஆலின்கீழிருந்து அறமுரைத்தானாயினும் தனது மறக்கருணையால் முப்புரங்களையும் கூட்டோடே கொன்ற ஆற்றலுடையான் என அறிக என்று சாழல் கொட்டுவோம் என்பதாம் . நன்றாக - செவ்விதாக . ஆல நீழல் அன்றிருந்தறநெறி நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை ' ' எனப் பதினொராந் திருமுறையில் ( திருவெழுகூற்றிருக்கை 32-3 ) வருதல் காண்க . இனி நன்மையுண் டாக எனினுமாம் . நால்வர் சனகாதியர் நான்மறையின் உட்பொ ருள் என்றது அறம் பொருள் இன்பம் வீட்டினை . அருந்தவருக்காலின் அறமுதலா நான்கினையும் இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ ( சாழல் 20 ) என அடிகள் அருளியமையுங் காண்க . ஆல் திருக்கைலாயத்தின் தென் திசைக்கணுள்ள ஆலவிருட்சம் . மறைநான்கும் கல்லால் நிழற் கீழ்ப் பன்னிய வெங்கள் பிரான் ( சுந் . 22-1 ) எனத் தேவாரத்தும் வருதல் காண்க . பொருளை அறமுரைத்தான் - பொருள் நான்கினை யும் அறவுரையாகக் கூறினான் . அன்றால நிழற்கீழ் அருமறைகள் தானருளி ( பூவல்லி 13 ) ஆலின்கீழ் அநமோர் நால்வருக் கருளி ( ஞான . 41-7 ) ' அன்றாலின் கீழிருந்தங் கறம் புரிந்த அருளாளர் ( ஞான 323 -5 ) அன்றாலின் கீழிருந்தங் கறஞ் சொன்னானை ( நாவு.263-3 ) அன்றாலின் கீழிருந்து மறைப்பொருள் நால்வர்க் கருள் செய்தானை ( நாவு . 297-1 ) என வருவனவுங் காண்க .