திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருச்சாழல் (ஞான.98-8) வருதல் காண்க. பலிதிரிதல் செருக்குற்ற தேவர் களின் செருக்கினை அடக்குவதாகலின் அதுவும் இறைவனது மறக்கரு ணையை விளக்குவதாகும். ''மனமுலாம் அடியவர்க்கருள் புரிகின்ற வகையலாற் பலிதிரிந்துண்பிலான்" (தே. ஞான. 76 - 6) என ஆளு டைய அடிகள் அருளியமையுங் காண்க. Co Cae நம்பன் - சிவபெருமான். இறைவன் இயல்பினை முழுவதும் அறிய முடியாது ஏத்தினவெனின், அம்பலத்தே யாடும்கூத்தின் உண்மையினை யும் அமுது செயப் பலிதிரியும் உண்மையினையும் நாம் அறியுமாறு என்னே? இறைவன் கூத்தாடுவது பொருள் தேடற்கெனவும். அக்கூத் தின் சிறப்பின்மையாற் பொருள் கிடைத்தில தெனவும், அதனால் அமுது செய்தற்குப் பிச்சையேற்றுத் திரிவானாயினன் எனவும் நம்மள வில் உணர்ந்து இகழுதல் பேதைமையாம் என்க. 751 இதன்கண் "அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதிரியும்" என்பதனால் சிளனுடைய காருணியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 17 272 சலமுடைய சலந்தரன்றன் உடல் தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளிவா றென்னேடீ நலமுடைய நாரணன்றன் நயனமிடந் தரனடிக்கீழ் அலராக இடவாழி பருளினன்காண் சாழலோ. ப-ரை. ஏடி - பெண்ணே, சலம் உடைய சலந்தரன் தன் உடல் தடிந்த நல் ஆழி - போரில் தணியாத கோபத்தினையுடைய சலந்தரா சுரனுடைய உடலினை அழித்த சக்கராயுதத்தை, நலம் உடைய நார ணற்கு அன்று அருளிய ஆறு என் - காத்தற்றொழிலாகிய நன்மையைச் செய்யும் நாராயணனுக்கு முன்னர்க்காலத்தில் கொடுத்தருளிய காரணம் என்னையெனின், நலம் உடைய நாரணன் தன் நயனம் இடந்து அரனடி கீழ் அலராக இட - நன்மையையுடைய நாரணன் தன் கண்களில் ஒன்றைத் தோண்டி இறைவன் திருவடியில் தாமரை மலராக இட்டு வழிபட, ஆழி அருளினன் சாழலோ - அத் திருமா லுக்கு அச் சக்கரப்படையை அளித்தருளினன் என்று சாழல் கொட்டு வோமாக. ஏடீ, கோபத்தையுடைய சலந்தராசுரனுடைய உடலைத் தடிந்த நல்ல சக்கராயுதத்தினை நாரணனுக்கு அந்நாளில் அருளிய காரணம் என்னையெனில், நாரணன் தன் கண்களில் ஒன்றைத் தோண்டி இறை வன் திருவடியில் மலராக இட்டு வழிபட அச் சக்கராயுதத்தினைக் கொடுத்தருளினன் என்று சாழல் கொட்டுவோமாக என்பதாம்.
திருச்சாழல் ( ஞான.98-8 ) வருதல் காண்க . பலிதிரிதல் செருக்குற்ற தேவர் களின் செருக்கினை அடக்குவதாகலின் அதுவும் இறைவனது மறக்கரு ணையை விளக்குவதாகும் . ' ' மனமுலாம் அடியவர்க்கருள் புரிகின்ற வகையலாற் பலிதிரிந்துண்பிலான் ( தே . ஞான . 76 - 6 ) என ஆளு டைய அடிகள் அருளியமையுங் காண்க . Co Cae நம்பன் - சிவபெருமான் . இறைவன் இயல்பினை முழுவதும் அறிய முடியாது ஏத்தினவெனின் அம்பலத்தே யாடும்கூத்தின் உண்மையினை யும் அமுது செயப் பலிதிரியும் உண்மையினையும் நாம் அறியுமாறு என்னே ? இறைவன் கூத்தாடுவது பொருள் தேடற்கெனவும் . அக்கூத் தின் சிறப்பின்மையாற் பொருள் கிடைத்தில தெனவும் அதனால் அமுது செய்தற்குப் பிச்சையேற்றுத் திரிவானாயினன் எனவும் நம்மள வில் உணர்ந்து இகழுதல் பேதைமையாம் என்க . 751 இதன்கண் அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதிரியும் என்பதனால் சிளனுடைய காருணியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 17 272 சலமுடைய சலந்தரன்றன் உடல் தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளிவா றென்னேடீ நலமுடைய நாரணன்றன் நயனமிடந் தரனடிக்கீழ் அலராக இடவாழி பருளினன்காண் சாழலோ . - ரை . ஏடி - பெண்ணே சலம் உடைய சலந்தரன் தன் உடல் தடிந்த நல் ஆழி - போரில் தணியாத கோபத்தினையுடைய சலந்தரா சுரனுடைய உடலினை அழித்த சக்கராயுதத்தை நலம் உடைய நார ணற்கு அன்று அருளிய ஆறு என் - காத்தற்றொழிலாகிய நன்மையைச் செய்யும் நாராயணனுக்கு முன்னர்க்காலத்தில் கொடுத்தருளிய காரணம் என்னையெனின் நலம் உடைய நாரணன் தன் நயனம் இடந்து அரனடி கீழ் அலராக இட - நன்மையையுடைய நாரணன் தன் கண்களில் ஒன்றைத் தோண்டி இறைவன் திருவடியில் தாமரை மலராக இட்டு வழிபட ஆழி அருளினன் சாழலோ - அத் திருமா லுக்கு அச் சக்கரப்படையை அளித்தருளினன் என்று சாழல் கொட்டு வோமாக . ஏடீ கோபத்தையுடைய சலந்தராசுரனுடைய உடலைத் தடிந்த நல்ல சக்கராயுதத்தினை நாரணனுக்கு அந்நாளில் அருளிய காரணம் என்னையெனில் நாரணன் தன் கண்களில் ஒன்றைத் தோண்டி இறை வன் திருவடியில் மலராக இட்டு வழிபட அச் சக்கராயுதத்தினைக் கொடுத்தருளினன் என்று சாழல் கொட்டுவோமாக என்பதாம் .