திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை சலம் - தணியாக் கோபம். "சலம் புரி தண்டு" என்னும் பரி பாடலினும் (15-58) இப்பொருட்டாதல் காண்க. சலந்தரன் - சலத் தினாற் றாங்கப்பட்டவன். சலம் - கடல். தரம் -தரித்தல். ஒருநாள் இந்திரன் சிவபெருமானை வழிபடும் பொருட்டுச் செருக்கோடு திருக் கயிலாயத்துக்குச் சென்றான். பூதவடிவங்கொண்டு வாயிலில் நின்ற சிவபெருமானைப் பார்த்து யான் சிவபெருமானை வழிபடும்பொருட்டு வந்தேன்; அவர் எழுந்தருளியுள்ள சமயம் எப்படி? என்று வினவ, அப் பெருமான் யாதொன்றும் கூறாது நின்றார். இந்திரன் சினங்கொண்டு எறிந்த குலிசப்படை அவர்மீது பட்டுத் துகளாகி அழிந்தது. சிவபெரு மான் உருத்திர வடிவத்தொடு பெருஞ்சினங்கொண்டு நிற்க இந்திரன் அஞ்சித் தன்குற்றத்தைப் பொறுத்தருளுமாறு பன்முறைவேண்டினான். சிவபெருமான் தம்முடைய சினத்தைக் கடலில் வீசினார். அச்சினம் ஒரு குழந்தையாயிற்று. சலத்தினாற் றாங்கப்பட்டமையின் அக்குழந் தைக்குச் 'சலந்தரன்' என்னும் பெயர் உண்டாயிற்று; இதனை "போற்றிப்பன் முறைதாழும் புரந்தரனை அஞ்சலென்று புரிந்துநோக்கி மேற்றிக்கில் வீழ்கின்ற செங்கதிரோ இதுவென்ன வேலைமேற்றன் சீற்ற தீ யினைவீசி ஆங்கவற்கு விடைகொடுத்துச் செல்கென் றேவி ஏற்றிற்செய் அரியணைமேல் உறையுள் புகுந் துமையோடும் வீற்றிருந்தான் எங்கோன்" (ததீசியுத். 211) "கூற்று வன்தனிக் கூற்றன் மத்திரம் வீற்றி ருந்திடும் வேலை வாய்தனில் ஆற்றல் சேர்புனற் கரசன் பால்விடு சீற்ற மானதோர் சிறுவன் ஆனதே" என்னுமாத்திரத் திவன்த னக்கு நீ நன்ன லந்திகழ் நாமம் ஒன்றினைப் பன்னு நென்னநீ பரித்த லால் இவன் தன்ன தொண்பெயர் சலந்தரன்எனா என வரூஉம் கந்தபுராணச் செய்யுள்களானுமறிக. 752 (ததீசியுத். 212) (ததீசியுத்.229) சலந்தரனை வருணன் அன்பாக வளர்த்து வந்தான். சலந்தரன் பருவம் வந்தபோது எல்லாவுலகங்களையும் வென்று ஆந்தரம் என்னும் நகரினை உண்டாக்கி அதனை ஆண்டுவந்தான். காலநேமி மகளான விருந்தையை விவாகஞ் செய்துகொண்டு வாழ்ந்துவந்தான். சலந் தரன் தேவர்களோடு போர் செய்தற்கு அவர்கள் சென்றிருந்த மேரு மலைக்குச் சென்றான். தேவர்கள் அஞ்சித் திருமாலை வேண்டினர். திருமால் சலந்தரனோடு கடும் போர்செய்து வெல்லமுடியாமல் அவன் ஆற்றலைப் புகழ்ந்து சென்றான். *சலந்தராகரனின் ஆற்றலைக் கண்டு * '' சலந்தர என்னும் பெயர்த் தறுக்கட்டானவன்'' கந்த. ததீசியுத். 2
திருவாசக ஆராய்ச்சியுரை சலம் - தணியாக் கோபம் . சலம் புரி தண்டு என்னும் பரி பாடலினும் ( 15-58 ) இப்பொருட்டாதல் காண்க . சலந்தரன் - சலத் தினாற் றாங்கப்பட்டவன் . சலம் - கடல் . தரம் -தரித்தல் . ஒருநாள் இந்திரன் சிவபெருமானை வழிபடும் பொருட்டுச் செருக்கோடு திருக் கயிலாயத்துக்குச் சென்றான் . பூதவடிவங்கொண்டு வாயிலில் நின்ற சிவபெருமானைப் பார்த்து யான் சிவபெருமானை வழிபடும்பொருட்டு வந்தேன் ; அவர் எழுந்தருளியுள்ள சமயம் எப்படி ? என்று வினவ அப் பெருமான் யாதொன்றும் கூறாது நின்றார் . இந்திரன் சினங்கொண்டு எறிந்த குலிசப்படை அவர்மீது பட்டுத் துகளாகி அழிந்தது . சிவபெரு மான் உருத்திர வடிவத்தொடு பெருஞ்சினங்கொண்டு நிற்க இந்திரன் அஞ்சித் தன்குற்றத்தைப் பொறுத்தருளுமாறு பன்முறைவேண்டினான் . சிவபெருமான் தம்முடைய சினத்தைக் கடலில் வீசினார் . அச்சினம் ஒரு குழந்தையாயிற்று . சலத்தினாற் றாங்கப்பட்டமையின் அக்குழந் தைக்குச் ' சலந்தரன் ' என்னும் பெயர் உண்டாயிற்று ; இதனை போற்றிப்பன் முறைதாழும் புரந்தரனை அஞ்சலென்று புரிந்துநோக்கி மேற்றிக்கில் வீழ்கின்ற செங்கதிரோ இதுவென்ன வேலைமேற்றன் சீற்ற தீ யினைவீசி ஆங்கவற்கு விடைகொடுத்துச் செல்கென் றேவி ஏற்றிற்செய் அரியணைமேல் உறையுள் புகுந் துமையோடும் வீற்றிருந்தான் எங்கோன் ( ததீசியுத் . 211 ) கூற்று வன்தனிக் கூற்றன் மத்திரம் வீற்றி ருந்திடும் வேலை வாய்தனில் ஆற்றல் சேர்புனற் கரசன் பால்விடு சீற்ற மானதோர் சிறுவன் ஆனதே என்னுமாத்திரத் திவன்த னக்கு நீ நன்ன லந்திகழ் நாமம் ஒன்றினைப் பன்னு நென்னநீ பரித்த லால் இவன் தன்ன தொண்பெயர் சலந்தரன்எனா என வரூஉம் கந்தபுராணச் செய்யுள்களானுமறிக . 752 ( ததீசியுத் . 212 ) ( ததீசியுத் .229 ) சலந்தரனை வருணன் அன்பாக வளர்த்து வந்தான் . சலந்தரன் பருவம் வந்தபோது எல்லாவுலகங்களையும் வென்று ஆந்தரம் என்னும் நகரினை உண்டாக்கி அதனை ஆண்டுவந்தான் . காலநேமி மகளான விருந்தையை விவாகஞ் செய்துகொண்டு வாழ்ந்துவந்தான் . சலந் தரன் தேவர்களோடு போர் செய்தற்கு அவர்கள் சென்றிருந்த மேரு மலைக்குச் சென்றான் . தேவர்கள் அஞ்சித் திருமாலை வேண்டினர் . திருமால் சலந்தரனோடு கடும் போர்செய்து வெல்லமுடியாமல் அவன் ஆற்றலைப் புகழ்ந்து சென்றான் . * சலந்தராகரனின் ஆற்றலைக் கண்டு * ' ' சலந்தர என்னும் பெயர்த் தறுக்கட்டானவன் ' ' கந்த . ததீசியுத் . 2