திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

13 திருப்பூவல்லி மாயாவிசம நீக்குதல் திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது ஒரு பொழிலின்கண் பொய்தல் ஆடும் சிறுமியருட் சிலர் குளத்தி லுள்ள அல்லிப்பூமலர்களைப் பாடிக்கொண்டு கொய்து விளையாடு தலைக்கண்ட அடிகள், இதனைப் பா க்கொண்டு விளையாடுமாறு அவர் கள் கூற்றாக இப்பகுதியை அருளிச்செய்தனர். இதன் உட்பொருள் "மாயாவிசய நீக்குதல்" என்றது மாயையின் வெற்றியை ஒழித்தல். இப்பகுதி நாலடித் தரவுகொச்சகக் கலிப்பாவாலானது. தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் 275. இணையார் திருவடி யென்றலைமேல் வைத்தலு ே துணையான சுற்றங்க எத்தனையும் துறந்தொழிந்தேன் அணையார் புனற்றில்லை யம் பலத்தே யாடுகின்ற புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ. ப-ரை. ஆர் திருவடி இணை என் தலைமேல் வைத்தலும் - அரிய திருவடி இணைகளை என் தலைமீது சூட்டிய உடனே, துணையான சுற்றங் கள் அத்தனையும் துறந்து ஒழிந்தேன் - எனக்குத் துணையாகக் கருதி யிருந்த சுற்றத் தொடர்புகள் எல்லாவற்றையும் விட்டு நீங்கினேன்; அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற அணைக்கட்டுள் நிறைந்து நிற்கும் புனலையுடைய தில்லையம்பலத்தின் கண் திருக்கூத்துச் செய்கின்ற, புணையாளன் சீர்பாடி பூவல்லி கொய்யாமோ - பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்குத் தெப்பம் போல்பவனாகிய இறைவனது பொருள்சேர் புகழினைப் பாடி அல்லிமலர்களைப் பறிப்போமாக. - இறைவன் தன் திருவடியை என் தலைமேல் வைத்தலும் இதுவரை யும் எனக்குத் துணையெனக் கருதியிருந்த சுற்றத்தொடர்புகள் எல்லா வற்றையும் விட்டு நீங்கினேன். இனித் தில்லையம்பலத்தே ஆடுகின்ற நமது பிறவிக் கடலைக் கடப்பதற்குத் தெப்பம் போல்பவனாகிய இறை வன் புகழைப் பாடிக்கொண்டு அல்லிமலர்களைப் பறிப்போமாக என்ப தாம். இணையார் திருவடி என்பதனை ஆர் திருவடி இணை என இயைத்துப் பொருள்கொள்க. இனி, கிடந்தவாறே கூட்டித் தனக்குத் தானே ஒப்பாயிருக்கின்ற திருவடியெனவும், ஒப்பு அரிய திருவடி என வும், இணையாகப் பொருந்திய திருவடி எனவும் பொருள் கொள்ள
13 திருப்பூவல்லி மாயாவிசம நீக்குதல் திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது ஒரு பொழிலின்கண் பொய்தல் ஆடும் சிறுமியருட் சிலர் குளத்தி லுள்ள அல்லிப்பூமலர்களைப் பாடிக்கொண்டு கொய்து விளையாடு தலைக்கண்ட அடிகள் இதனைப் பா க்கொண்டு விளையாடுமாறு அவர் கள் கூற்றாக இப்பகுதியை அருளிச்செய்தனர் . இதன் உட்பொருள் மாயாவிசய நீக்குதல் என்றது மாயையின் வெற்றியை ஒழித்தல் . இப்பகுதி நாலடித் தரவுகொச்சகக் கலிப்பாவாலானது . தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் 275. இணையார் திருவடி யென்றலைமேல் வைத்தலு துணையான சுற்றங்க எத்தனையும் துறந்தொழிந்தேன் அணையார் புனற்றில்லை யம் பலத்தே யாடுகின்ற புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ . - ரை . ஆர் திருவடி இணை என் தலைமேல் வைத்தலும் - அரிய திருவடி இணைகளை என் தலைமீது சூட்டிய உடனே துணையான சுற்றங் கள் அத்தனையும் துறந்து ஒழிந்தேன் - எனக்குத் துணையாகக் கருதி யிருந்த சுற்றத் தொடர்புகள் எல்லாவற்றையும் விட்டு நீங்கினேன் ; அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற அணைக்கட்டுள் நிறைந்து நிற்கும் புனலையுடைய தில்லையம்பலத்தின் கண் திருக்கூத்துச் செய்கின்ற புணையாளன் சீர்பாடி பூவல்லி கொய்யாமோ - பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்குத் தெப்பம் போல்பவனாகிய இறைவனது பொருள்சேர் புகழினைப் பாடி அல்லிமலர்களைப் பறிப்போமாக . - இறைவன் தன் திருவடியை என் தலைமேல் வைத்தலும் இதுவரை யும் எனக்குத் துணையெனக் கருதியிருந்த சுற்றத்தொடர்புகள் எல்லா வற்றையும் விட்டு நீங்கினேன் . இனித் தில்லையம்பலத்தே ஆடுகின்ற நமது பிறவிக் கடலைக் கடப்பதற்குத் தெப்பம் போல்பவனாகிய இறை வன் புகழைப் பாடிக்கொண்டு அல்லிமலர்களைப் பறிப்போமாக என்ப தாம் . இணையார் திருவடி என்பதனை ஆர் திருவடி இணை என இயைத்துப் பொருள்கொள்க . இனி கிடந்தவாறே கூட்டித் தனக்குத் தானே ஒப்பாயிருக்கின்ற திருவடியெனவும் ஒப்பு அரிய திருவடி என வும் இணையாகப் பொருந்திய திருவடி எனவும் பொருள் கொள்ள