திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை தற்கு நாற்சதுரமும் முச்சதுரமும் வில்வடிவுமாகிய மூன்று வகையைக் கருதின "ஆகவனீயம், தக்கிணாக்கினி காருகபத்தியம் என்னும் மூன்று தீ'' (முருகு 181 நச்.)எனவும், "முத்தீயாவன: ஆகவனீயம், காருகபத் தியம், தென்றிசையங்கி" (புற 2 -23 உரை) எனவும் வரும் உரைப் பகுதிகளானும் அறிக. எரிமூன்று என்பது, ஈண்டுத் தக்கனாற் செய்யப் பட்ட முத்தீ வேள்வியைக் குறித்தது. தேவர் என்றது தக்க யாகத் தில் இறைவனால் தண்டிக்கப்பட்ட தேவர்கள் எல்லாரையும் குறித் தது. இறைவன் அவர்க்கருள் செய்தமை, "தொக்கனவந் தவர்தம் மைத் தொலைத்தருளி யருள்கொடுத்து" (சாழல் 5)என்பதனாலு மறிக. சிரமூன்று அற என்றது. தக்கன் எச்சன் கூற்றுவன் என்னும் மூவ ரது சிரம் மூன்றும் அற என்றவாறு. இவர்கள் சிரத்தை அறுத்தமை, (சாழல் 5) 764 45 'தக்கனையும் எச்சனையும் தலையறுத்து" "அட்டிடு கூற்றுவன் அலமந் தோடலும் வெட்டின னவன்தலை வீர வீரனே" (கந்த: யாகசங்கார 2?) என வருவனவற்றாலுமறிக. புருவம் - கண்களின் மேலுள்ள உரோம வளைவு. "கொடும் புருவம்" (குறள் 1086). புருவ நெரித்தல் - கோபத் தால் புருவங்களை வளைத்தல், புருவம் நெரித்தல் ஈண்டுக் குறிப்பினால் வெகுளியை உணர்த்தியது. என ''வரித்தடந் திண்சிலை மன்மதன் ஆதலும் ... தில்லையுட் சிற்றம்பலவன் திருப்புருவம் நெரித்தலுங் கண்டது வெண்பெ டியன்றி நின்றிலவே" (11-ந் திருமுறை - கோயில் திருப்பண்ணியர். 41) வருவனவற்றாலுமறிக உருமூன்று அருவம், அருஉருவம், உருவம் என்பன. ''அருவா யுருவாய் அருவுருவாகி "திருமந் 2481. ஒருவனுமே என்றது ஒருவனாயுள்ள இறைவன் என்றவாறு."உருவு பலகொண் டுணர்வரிதாய் நிற்கும் ஒருவன்" {கயிலைபாதி. 7) என வருவன காண்க. புர மூன்று எரித்தமை. ''புரம்பல எரித்த புராண போற்றி" "புரம் செற்ற கொற்றச் சேவகன்' "அடையார் புரமெரித்த சிலையனே" "வலிநின்ற திண் சிலையாலெரித்தாய் புரமாறுபட்டே" என இத்திருவாசகத்தும் அடிகள் அருளியமையாலறிக. (போற்றி.221) (திருப்பொற்.16; (செத்திலாப்.3) (நீத்.10) இதன்கண் 'சிரமூன்றறத் தன் திருப்புருவம் நெரித்தருளி" என்பத னால் மாயா விசய நீக்குதல் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. இனி 'புரமூன்று எரித்து" என்றதன் தத்துவப் பொருளா கிய மும்மலகூடங்களை எரித்தமை கொண்டு இதன்கண்ணும் பதிகப் பொருள் கொள்ளலாம். 6
திருவாசக ஆராய்ச்சியுரை தற்கு நாற்சதுரமும் முச்சதுரமும் வில்வடிவுமாகிய மூன்று வகையைக் கருதின ஆகவனீயம் தக்கிணாக்கினி காருகபத்தியம் என்னும் மூன்று தீ ' ' ( முருகு 181 நச் . ) எனவும் முத்தீயாவன : ஆகவனீயம் காருகபத் தியம் தென்றிசையங்கி ( புற 2 -23 உரை ) எனவும் வரும் உரைப் பகுதிகளானும் அறிக . எரிமூன்று என்பது ஈண்டுத் தக்கனாற் செய்யப் பட்ட முத்தீ வேள்வியைக் குறித்தது . தேவர் என்றது தக்க யாகத் தில் இறைவனால் தண்டிக்கப்பட்ட தேவர்கள் எல்லாரையும் குறித் தது . இறைவன் அவர்க்கருள் செய்தமை தொக்கனவந் தவர்தம் மைத் தொலைத்தருளி யருள்கொடுத்து ( சாழல் 5 ) என்பதனாலு மறிக . சிரமூன்று அற என்றது . தக்கன் எச்சன் கூற்றுவன் என்னும் மூவ ரது சிரம் மூன்றும் அற என்றவாறு . இவர்கள் சிரத்தை அறுத்தமை ( சாழல் 5 ) 764 45 ' தக்கனையும் எச்சனையும் தலையறுத்து அட்டிடு கூற்றுவன் அலமந் தோடலும் வெட்டின னவன்தலை வீர வீரனே ( கந்த : யாகசங்கார 2 ? ) என வருவனவற்றாலுமறிக . புருவம் - கண்களின் மேலுள்ள உரோம வளைவு . கொடும் புருவம் ( குறள் 1086 ) . புருவ நெரித்தல் - கோபத் தால் புருவங்களை வளைத்தல் புருவம் நெரித்தல் ஈண்டுக் குறிப்பினால் வெகுளியை உணர்த்தியது . என ' ' வரித்தடந் திண்சிலை மன்மதன் ஆதலும் ... தில்லையுட் சிற்றம்பலவன் திருப்புருவம் நெரித்தலுங் கண்டது வெண்பெ டியன்றி நின்றிலவே ( 11 - ந் திருமுறை - கோயில் திருப்பண்ணியர் . 41 ) வருவனவற்றாலுமறிக உருமூன்று அருவம் அருஉருவம் உருவம் என்பன . ' ' அருவா யுருவாய் அருவுருவாகி திருமந் 2481 . ஒருவனுமே என்றது ஒருவனாயுள்ள இறைவன் என்றவாறு . உருவு பலகொண் டுணர்வரிதாய் நிற்கும் ஒருவன் { கயிலைபாதி . 7 ) என வருவன காண்க . புர மூன்று எரித்தமை . ' ' புரம்பல எரித்த புராண போற்றி புரம் செற்ற கொற்றச் சேவகன் ' அடையார் புரமெரித்த சிலையனே வலிநின்ற திண் சிலையாலெரித்தாய் புரமாறுபட்டே என இத்திருவாசகத்தும் அடிகள் அருளியமையாலறிக . ( போற்றி .221 ) ( திருப்பொற் .16 ; ( செத்திலாப் .3 ) ( நீத் .10 ) இதன்கண் ' சிரமூன்றறத் தன் திருப்புருவம் நெரித்தருளி என்பத னால் மாயா விசய நீக்குதல் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . இனி ' புரமூன்று எரித்து என்றதன் தத்துவப் பொருளா கிய மும்மலகூடங்களை எரித்தமை கொண்டு இதன்கண்ணும் பதிகப் பொருள் கொள்ளலாம் . 6