திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பூவல்லி ப-ரை. நெறி செய்தருளி - எனக்கு நல்வழியினைக் காட்டியருளி, தன் சீர் அடியார் பொன் அடிக்கே குறிசெய்து கொண்டு - தனது மெய்யடியார்களது அழகிய திருவடிகளுக்கே தொண்டு செய்யும் பொருட்டு இலக்காக்கிக் கொண்டு, எனை ஆண்ட பிரான் குணம் பரவி எனை அடிமை கொண்டருளிய இறைவனது அருட் குணத்தை வாழ்த்தி, நம்மை முறி செய்து முழுது உடற்றும் பழவினையை- நம்மை அடிமையாக்கி முழுதும் வருத்துகின்ற பழைய சஞ்சித ஆகா மிய வினைகளை, கிறிசெய்த ஆபாடி - பொய்யாக்கின (விதத்தைப் பாடிக்கொண்டு, பூ அல்லி கொய்யாமோ - அல்லி மலர்களைக் கொய் வோமாக. நன்னெறியினைக் காட்டியருளித் தன்சீரடியார் திருவடிகளுக்குத் தொண்டுசெய்யும் பொருட்டு இலக்காக்கிக்கொண்டு என்னை அடிமை கொண்டருளிய இறைவனது அருட்குணத்தை வாழ்த்தி, நம்மை முழுதுடற்றும் பழவினையை அழித்தருளிய விதத்தினைப் பாடிக் கொண்டு அம்மலர்களைக் கொய்வோமாக என்பதாம். 767 நெறி செய்தல் - நன்னெறிப்படுத்தல். சீரடியார் பொன்னடிக் குக் குறிசெய்தல் - மெய்யடியார் திருவடிகளுக்குத் தொண்டு செய்யும் வண்ணம் இலக்காக்குதல், "மிகுகாதல் அடியார் தம் அடியனாக்கி அச்சந்தீர்த் தாட்கொண்டான்'' (சதகம் 29) என அடிகள் அருளி யமை காண்க. அடியார் திருவடிக்குத் தொண்டுசெய்யுமாறு இலக் காக்கியது வீடுபேற்றிற்கு இடையூறாகிய வாசனாமலநீக்கத்தின் பொருட்டாகும். முறி - அடிமையோலை. அஃது இங்கே அடிமை என்னும் பொரு வில் வந்தது. சஞ்சித ஆகாமிய கன்மங்கள் முறிசெய்து நம்மை முழு தும் வருத்துவனவாகும். உடற்றுதல் - வருத்துதல். கிறி - பொய். அவற்றை இல்லையாக்கினமையின் 'கிறிசெய்தவா' என்றார். இதன்கண், ''பழவினையைக் கிறிசெய்த வாபாடி" என்பதனால் மாயா விசயநீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 283. பன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமலர் என்னாகந் துன்னவைத்த பெரியோன் எழிற்கடராய்க் கன்னா ரூரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள் பொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 8 ப-ரை, பல்நாள் பரவி பணிசெய்ய - யான் பூர்வத்தில் பல நாட்களாக வாழ்த்தித் தனக்குத் தொண்டு செய்தமையால், பாத மலர் என் ஆகம் துன்ன வைத்த பெரியோன் - தனது திருவடித்
திருப்பூவல்லி - ரை . நெறி செய்தருளி - எனக்கு நல்வழியினைக் காட்டியருளி தன் சீர் அடியார் பொன் அடிக்கே குறிசெய்து கொண்டு - தனது மெய்யடியார்களது அழகிய திருவடிகளுக்கே தொண்டு செய்யும் பொருட்டு இலக்காக்கிக் கொண்டு எனை ஆண்ட பிரான் குணம் பரவி எனை அடிமை கொண்டருளிய இறைவனது அருட் குணத்தை வாழ்த்தி நம்மை முறி செய்து முழுது உடற்றும் பழவினையை நம்மை அடிமையாக்கி முழுதும் வருத்துகின்ற பழைய சஞ்சித ஆகா மிய வினைகளை கிறிசெய்த ஆபாடி - பொய்யாக்கின ( விதத்தைப் பாடிக்கொண்டு பூ அல்லி கொய்யாமோ - அல்லி மலர்களைக் கொய் வோமாக . நன்னெறியினைக் காட்டியருளித் தன்சீரடியார் திருவடிகளுக்குத் தொண்டுசெய்யும் பொருட்டு இலக்காக்கிக்கொண்டு என்னை அடிமை கொண்டருளிய இறைவனது அருட்குணத்தை வாழ்த்தி நம்மை முழுதுடற்றும் பழவினையை அழித்தருளிய விதத்தினைப் பாடிக் கொண்டு அம்மலர்களைக் கொய்வோமாக என்பதாம் . 767 நெறி செய்தல் - நன்னெறிப்படுத்தல் . சீரடியார் பொன்னடிக் குக் குறிசெய்தல் - மெய்யடியார் திருவடிகளுக்குத் தொண்டு செய்யும் வண்ணம் இலக்காக்குதல் மிகுகாதல் அடியார் தம் அடியனாக்கி அச்சந்தீர்த் தாட்கொண்டான் ' ' ( சதகம் 29 ) என அடிகள் அருளி யமை காண்க . அடியார் திருவடிக்குத் தொண்டுசெய்யுமாறு இலக் காக்கியது வீடுபேற்றிற்கு இடையூறாகிய வாசனாமலநீக்கத்தின் பொருட்டாகும் . முறி - அடிமையோலை . அஃது இங்கே அடிமை என்னும் பொரு வில் வந்தது . சஞ்சித ஆகாமிய கன்மங்கள் முறிசெய்து நம்மை முழு தும் வருத்துவனவாகும் . உடற்றுதல் - வருத்துதல் . கிறி - பொய் . அவற்றை இல்லையாக்கினமையின் ' கிறிசெய்தவா ' என்றார் . இதன்கண் ' ' பழவினையைக் கிறிசெய்த வாபாடி என்பதனால் மாயா விசயநீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 283. பன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமலர் என்னாகந் துன்னவைத்த பெரியோன் எழிற்கடராய்க் கன்னா ரூரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள் பொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ . 8 - ரை பல்நாள் பரவி பணிசெய்ய - யான் பூர்வத்தில் பல நாட்களாக வாழ்த்தித் தனக்குத் தொண்டு செய்தமையால் பாத மலர் என் ஆகம் துன்ன வைத்த பெரியோன் - தனது திருவடித்