திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பூவல்லி 284. பேராசை யாமிந்தப் பிண்டமறம் பெருந்துறையான் சீரார் திருவடி யென்றலைமேல் வைத்த பிரான் காரார் கடல்நஞ்சை யுண்டுகந்த காபாலி போரார் புரம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 769 T ப- ரை. பேர் ஆசை ஆம் இந்த பிண்டம் அற - பெரிய அவா வினாலுளதாகும் இந்த உடம்பை எடுக்கும் பிறவி நீங்கும் வண்ணம்; பெருந்துறையான் - திருப்பெருந்துறையை யுடையவனும், சீர் ஆர் திரு அடி என்தலைமேல் வைத்தபிரான் - சிறப்புப்பொருந்திய தன் திருவடியை என் சிரசின் மீது சூட்டிய ஆசாரியத் தலைவனும், கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி - கருமைபொருந்திய நஞ்சை விரும்பி உண்ட கபாலத்தைக் கையிலுடையவனுமாகிய இறைவன் செய்த, போர் ஆர் புரம்பாடி - போரினை அடைந்த முப்புரங்களின் அழிவினைப் பாடிக்கொண்டு, பூ அல்லி கொய்யாம் - அல்லி மலர் களைக் கொய்வோமாக. பேராசையினாலுளதாகும் இந்த உடம்பை எடுக்கும் பிறவி நீங் கும் வண்ணம் பெருந்துறையையுடையவனும், தன் திருவடியை என் தலைமேற் சூட்டிய ஆசாரியத்தலைவனும். கடல் நஞ்சை உண்டுகந்த கபாலத்தையுடையவனுமாகிய இறைவன் செய்த போரினை அடைந்த முப்புரங்களின் அழிவினைப் பாடிக்கொண்டு அல்லி மலர்களைக் கொய்வோமாக. இந்த உடம்பை எடுத்தற்கு ஏதுவாயிருக்கின்ற பேராசையைக் காரியமாக உபசரித்துப் பேராசையாம் இந்தப் பிண்டம் என்றார்; இந்தப் பிண்டம் என்றது இந்த உடம்பை எடுத்தற்கு ஏதுவாகிய பிறப்பைக் குறித்தது. பேராசையாலுண்டாகிய பிறவி என்க. "அவாவென்ப எல்லாவுயிர்க்கும் எஞ்ஞான்றும் தவா அப்பிறப்பீனும் வித்து' (குறள் 361) என்றார் திருவள்ளுவரும். சீரார் திருவடி - போக மும் மோட்சமும் அளிக்கும் சிறப்புப் பொருந்திய திருவடி. காரார் கடல் நஞ்சை யுண்டுகந்த - கருமை பொருந்திய கடல் நஞ்சை விரும்பி உண்ட. “காரார் கடல் நஞ்சை யுண்டார் தாமே" (நாவு.291-9) 'கார்விடம் வெருவ வுண்டுகந்த வருள்"" (ஞான். 186-2) எனத் தேவாரத்தும் வருவன காண்க. காரார் நஞ்சு எனக் கூட்டுக. நஞ்சு உகந்து உண்ட என இயைத்துப் பொருள் கொள்க. காபாலி - கபாலத்தைக் கையிலுடையவன். கபாலம் - பிரமன் தலை யோடு, 'நான்முகன் தன் தலையைக் கலந்தான் அது கொண்ட காபாலி" எனத் தேவாரத்தும் (ஞான. 155 - 3) வருதல் காண்க. 79
திருப்பூவல்லி 284. பேராசை யாமிந்தப் பிண்டமறம் பெருந்துறையான் சீரார் திருவடி யென்றலைமேல் வைத்த பிரான் காரார் கடல்நஞ்சை யுண்டுகந்த காபாலி போரார் புரம்பாடிப் பூவல்லி கொய்யாமோ . 769 T ப- ரை . பேர் ஆசை ஆம் இந்த பிண்டம் அற - பெரிய அவா வினாலுளதாகும் இந்த உடம்பை எடுக்கும் பிறவி நீங்கும் வண்ணம் ; பெருந்துறையான் - திருப்பெருந்துறையை யுடையவனும் சீர் ஆர் திரு அடி என்தலைமேல் வைத்தபிரான் - சிறப்புப்பொருந்திய தன் திருவடியை என் சிரசின் மீது சூட்டிய ஆசாரியத் தலைவனும் கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி - கருமைபொருந்திய நஞ்சை விரும்பி உண்ட கபாலத்தைக் கையிலுடையவனுமாகிய இறைவன் செய்த போர் ஆர் புரம்பாடி - போரினை அடைந்த முப்புரங்களின் அழிவினைப் பாடிக்கொண்டு பூ அல்லி கொய்யாம் - அல்லி மலர் களைக் கொய்வோமாக . பேராசையினாலுளதாகும் இந்த உடம்பை எடுக்கும் பிறவி நீங் கும் வண்ணம் பெருந்துறையையுடையவனும் தன் திருவடியை என் தலைமேற் சூட்டிய ஆசாரியத்தலைவனும் . கடல் நஞ்சை உண்டுகந்த கபாலத்தையுடையவனுமாகிய இறைவன் செய்த போரினை அடைந்த முப்புரங்களின் அழிவினைப் பாடிக்கொண்டு அல்லி மலர்களைக் கொய்வோமாக . இந்த உடம்பை எடுத்தற்கு ஏதுவாயிருக்கின்ற பேராசையைக் காரியமாக உபசரித்துப் பேராசையாம் இந்தப் பிண்டம் என்றார் ; இந்தப் பிண்டம் என்றது இந்த உடம்பை எடுத்தற்கு ஏதுவாகிய பிறப்பைக் குறித்தது . பேராசையாலுண்டாகிய பிறவி என்க . அவாவென்ப எல்லாவுயிர்க்கும் எஞ்ஞான்றும் தவா அப்பிறப்பீனும் வித்து ' ( குறள் 361 ) என்றார் திருவள்ளுவரும் . சீரார் திருவடி - போக மும் மோட்சமும் அளிக்கும் சிறப்புப் பொருந்திய திருவடி . காரார் கடல் நஞ்சை யுண்டுகந்த - கருமை பொருந்திய கடல் நஞ்சை விரும்பி உண்ட . காரார் கடல் நஞ்சை யுண்டார் தாமே ( நாவு.291-9 ) ' கார்விடம் வெருவ வுண்டுகந்த வருள் ( ஞான் . 186-2 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . காரார் நஞ்சு எனக் கூட்டுக . நஞ்சு உகந்து உண்ட என இயைத்துப் பொருள் கொள்க . காபாலி - கபாலத்தைக் கையிலுடையவன் . கபாலம் - பிரமன் தலை யோடு ' நான்முகன் தன் தலையைக் கலந்தான் அது கொண்ட காபாலி எனத் தேவாரத்தும் ( ஞான . 155 - 3 ) வருதல் காண்க . 79