திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை போரார்புரம் -போரினை அடைந்த முப்புரம். 'போரார் புரங் கள் புரள நூறும் புண்ணியனை'' (நாவு. 242 --10) 'போரார் புர மெய்த புனிதன் " (சுந். 93 -11) எனத் தேவாரத்து வருவன காண்க. புரம்பாடி முப்புரங்களின் அழிவினைப்பாடி, 'கல்சூழ் கடி யரண் மூன்று அழித்தனர்" (தே:நாவு. 17-4) என வருவன காண்க. 770 இதன்கண், 'பேராசையா மிந்தப் பிண்டமறச் சீரார் திருவடி யென்றலைமேல் வைத்த பிரான்" என்பதனால் மாயாவிசய நீக்குதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 10 285 பாலும் அமுதமும் தேனுடனாம் பராபரமாய்க் கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள் ஞாலம் பரவுவார் நன்னெறியா மந்நெறியே போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ. ப-ரை. பாலும் அமுதமும் தேனுடன் ஆம் பராபரமாய் - பாலும் அமுதமும் தேனொடு ஒருங்கு சேர்ந்தாலன்ன மிக்க இன்பத் தைத் தருகின்ற சுத்தமாயைக்கு மேற்பட்ட வனாய், கோலம் குளிர்ந்து உள்ளம் கொண்ட பிரான் குரைகழல்கள் - தமது திருக் கோலத் தினாற் குளிர்வித்து என் உள்ளத்தைக் கவர்ந்துகொண்ட சிவபெரு மானது ஒலிக்கும் கழலையுடைய திருவடிகளே, ஞாலம் பரவுவார் நல் நெறியாம் - உலகத்திலே புகழ்ந்து வழிபடுவார்களது நல்லவழி யாகும். அந்நெறியே போலும் புகழ்பாடி - அத்திருவடி நெறியாகிய புகழைப் பாடிக்கொண்டு, பூ அல்லி கொய்யாமோ - அல்லிமலர் களைக் கொய்வோமாக. பாலும் அமுதும் தேனொடு கலந்தாற்போன்ற மிக்கஇன்பத்தைத் தருகின்ற பராபரனாய்த் தனதுதிருக்கோலத்தினாற் குளிர்வித்து உள் ளங் கொண்ட சிவபெருமானுடைய திருவடிகளே உலகத்தில் புகழ்ந்து வழிபடுவார்களது நல்ல வழியாகும். அத்திருவடி நெறியாகிய புக ழைப் பாடிக்கொண்டு அல்லிமலர்களைக் கொய்வோமாக என்பதாம். பாலும் அமுதும் தேனும் கலந்த கலவை மிக்க இன்பத்தைத் தரு தல்போல இறைவனும் பேரின்பத்தைத் தருதலின் 'பாலும் அமுதமும் தேனுடனாம் பராபரன்' என்றார். "தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் புல்லிப் புணர்வதென்று சுவையைப், கொல்லோ" (புணர்ச்சி 4 ) என அடிகள் மற்றோரிடத்தும் அருளியமை காண்க. பரா பரன் - பரைக்குப் பரன். பரை - சுத்தமாயை; பரன் - மேலானவன். பராபரமாய் உள்ளங்கொண்ட என இயையும். கோலத்தால் என மூன்றாவதுவிரிக்க குளிர்ந்து என்பது குளிர்வித்து எனப் பிறவினைப்
திருவாசக ஆராய்ச்சியுரை போரார்புரம் -போரினை அடைந்த முப்புரம் . ' போரார் புரங் கள் புரள நூறும் புண்ணியனை ' ' ( நாவு . 242 --10 ) ' போரார் புர மெய்த புனிதன் ( சுந் . 93 -11 ) எனத் தேவாரத்து வருவன காண்க . புரம்பாடி முப்புரங்களின் அழிவினைப்பாடி ' கல்சூழ் கடி யரண் மூன்று அழித்தனர் ( தே : நாவு . 17-4 ) என வருவன காண்க . 770 இதன்கண் ' பேராசையா மிந்தப் பிண்டமறச் சீரார் திருவடி யென்றலைமேல் வைத்த பிரான் என்பதனால் மாயாவிசய நீக்குதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 10 285 பாலும் அமுதமும் தேனுடனாம் பராபரமாய்க் கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள் ஞாலம் பரவுவார் நன்னெறியா மந்நெறியே போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ . - ரை . பாலும் அமுதமும் தேனுடன் ஆம் பராபரமாய் - பாலும் அமுதமும் தேனொடு ஒருங்கு சேர்ந்தாலன்ன மிக்க இன்பத் தைத் தருகின்ற சுத்தமாயைக்கு மேற்பட்ட வனாய் கோலம் குளிர்ந்து உள்ளம் கொண்ட பிரான் குரைகழல்கள் - தமது திருக் கோலத் தினாற் குளிர்வித்து என் உள்ளத்தைக் கவர்ந்துகொண்ட சிவபெரு மானது ஒலிக்கும் கழலையுடைய திருவடிகளே ஞாலம் பரவுவார் நல் நெறியாம் - உலகத்திலே புகழ்ந்து வழிபடுவார்களது நல்லவழி யாகும் . அந்நெறியே போலும் புகழ்பாடி - அத்திருவடி நெறியாகிய புகழைப் பாடிக்கொண்டு பூ அல்லி கொய்யாமோ - அல்லிமலர் களைக் கொய்வோமாக . பாலும் அமுதும் தேனொடு கலந்தாற்போன்ற மிக்கஇன்பத்தைத் தருகின்ற பராபரனாய்த் தனதுதிருக்கோலத்தினாற் குளிர்வித்து உள் ளங் கொண்ட சிவபெருமானுடைய திருவடிகளே உலகத்தில் புகழ்ந்து வழிபடுவார்களது நல்ல வழியாகும் . அத்திருவடி நெறியாகிய புக ழைப் பாடிக்கொண்டு அல்லிமலர்களைக் கொய்வோமாக என்பதாம் . பாலும் அமுதும் தேனும் கலந்த கலவை மிக்க இன்பத்தைத் தரு தல்போல இறைவனும் பேரின்பத்தைத் தருதலின் ' பாலும் அமுதமும் தேனுடனாம் பராபரன் ' என்றார் . தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் புல்லிப் புணர்வதென்று சுவையைப் கொல்லோ ( புணர்ச்சி 4 ) என அடிகள் மற்றோரிடத்தும் அருளியமை காண்க . பரா பரன் - பரைக்குப் பரன் . பரை - சுத்தமாயை ; பரன் - மேலானவன் . பராபரமாய் உள்ளங்கொண்ட என இயையும் . கோலத்தால் என மூன்றாவதுவிரிக்க குளிர்ந்து என்பது குளிர்வித்து எனப் பிறவினைப்