திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பூவல்லி மல 771 பொருளில் வந்தது. "குடிபொன்றிக் குற்றமுமாங்கே தரும்'' (குறள் 171) என்புழிப்போல காண்க. குரைகழல்கள் - ஒலிக்கும் கழலையுடைய திருவடிகள். ''நின்குரை கழல் காட்டி" (செத்.8) "கூத்தா உன் குரைகழற்கே" (திருப்புலம்.3) "அம்பலவன் குரை கழல்போல" (கோவை. 3) என்பனவற்றிலும் இப்பொருட்டாதல் காண்க. பிரான் குரைகழல்கள் ஞாலம் பரவு வார் நன்னெறியாம் என்றது இறைவனது திருவடிகளே பூவுலகிற் புகழ்ந்து பாடுவாரது நல்வழியாகும் என்றவாறு. போலும் - ஒப்பில் போலி. சத்தாகிய இறைவன் திருவடியே மோக்ஷத்துக்கு வாய்த்த நன்னெறி என்பது, 'கழற்புணை கொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர்" (அடைக். 4) 'திருவடி நெடுங்கரை சேர்வதுமா செய்யே" (1I- ந் திரு. கோயினான் மணி.16-20) "அப்பொற் பதியி னிடை வேளாண் குலத்தை விளக்க வவதரித்தார் செப்பற் கரிய பெருஞ்சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி எப்பற் றினையு மறவெறிவார்" (பெரிய. விறன்மிண்ட நாயனார் புராணம் 4) என வருவனவற்றாலுமறிக. இதன்கண், பாலும் அமுதமும் தேனுடனாம் பராபரமாய்க் கோலங் குளிர்ந்துள்ளங் கொண்ட பிரான்" என்பதனால் மாயாவிசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 11 280 வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும் கோனவனாய் நின்று கூடலிலாக் குணக்குறியோன் ஆன நெடுங்கடல் ஆலால மமுது செய்யப் போனக மானவா பூவல்லி கொய்யாமோ. ப - ரை. வானவன் மால் அயன் மற்றும் உள்ள தேவர் கட்கும் - விண்ணுலகத்துக்கு இறைவனாகிய இந்திரன் திருமால் பிரமன் மற்று முள்ள தேவர்கள் யாவர்க்கும், கோனவனாய் நின்று - தலைவனாய் நின் றும், குணம் குறி கூடல் இல்லோன் - முக்குணங்களும் பெயர் முதலிய அடையாளங்களும் பொருந்தப்பெறாத இறைவன், நெடும் கடல் ஆன ஆலாலம் அமுது செய்ய - நெடிய பாற்கடலில் உண்டான காலவிடத்தை உண்டருள, போனகம் ஆன ஆ - அது அவ்விறைவ னுக்கு உணவான விதத்தைப் பாடிக்கொண்டு, பூ அல்லி கொய் யாமோ - அல்லிமலர்களைக் கொய்வோமாக. வானவன் முதலிய தேவர்களுக்கெல்லாம் தலைவனாய் நின்றும் குணங்களும் குறிகளும் பொருந்தப்பெறாத இறைவன் பாற்கடலி
திருப்பூவல்லி மல 771 பொருளில் வந்தது . குடிபொன்றிக் குற்றமுமாங்கே தரும் ' ' ( குறள் 171 ) என்புழிப்போல காண்க . குரைகழல்கள் - ஒலிக்கும் கழலையுடைய திருவடிகள் . ' ' நின்குரை கழல் காட்டி ( செத் .8 ) கூத்தா உன் குரைகழற்கே ( திருப்புலம் .3 ) அம்பலவன் குரை கழல்போல ( கோவை . 3 ) என்பனவற்றிலும் இப்பொருட்டாதல் காண்க . பிரான் குரைகழல்கள் ஞாலம் பரவு வார் நன்னெறியாம் என்றது இறைவனது திருவடிகளே பூவுலகிற் புகழ்ந்து பாடுவாரது நல்வழியாகும் என்றவாறு . போலும் - ஒப்பில் போலி . சத்தாகிய இறைவன் திருவடியே மோக்ஷத்துக்கு வாய்த்த நன்னெறி என்பது ' கழற்புணை கொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர் ( அடைக் . 4 ) ' திருவடி நெடுங்கரை சேர்வதுமா செய்யே ( 1I- ந் திரு . கோயினான் மணி.16-20 ) அப்பொற் பதியி னிடை வேளாண் குலத்தை விளக்க வவதரித்தார் செப்பற் கரிய பெருஞ்சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி எப்பற் றினையு மறவெறிவார் ( பெரிய . விறன்மிண்ட நாயனார் புராணம் 4 ) என வருவனவற்றாலுமறிக . இதன்கண் பாலும் அமுதமும் தேனுடனாம் பராபரமாய்க் கோலங் குளிர்ந்துள்ளங் கொண்ட பிரான் என்பதனால் மாயாவிசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 11 280 வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும் கோனவனாய் நின்று கூடலிலாக் குணக்குறியோன் ஆன நெடுங்கடல் ஆலால மமுது செய்யப் போனக மானவா பூவல்லி கொய்யாமோ . - ரை . வானவன் மால் அயன் மற்றும் உள்ள தேவர் கட்கும் - விண்ணுலகத்துக்கு இறைவனாகிய இந்திரன் திருமால் பிரமன் மற்று முள்ள தேவர்கள் யாவர்க்கும் கோனவனாய் நின்று - தலைவனாய் நின் றும் குணம் குறி கூடல் இல்லோன் - முக்குணங்களும் பெயர் முதலிய அடையாளங்களும் பொருந்தப்பெறாத இறைவன் நெடும் கடல் ஆன ஆலாலம் அமுது செய்ய - நெடிய பாற்கடலில் உண்டான காலவிடத்தை உண்டருள போனகம் ஆன - அது அவ்விறைவ னுக்கு உணவான விதத்தைப் பாடிக்கொண்டு பூ அல்லி கொய் யாமோ - அல்லிமலர்களைக் கொய்வோமாக . வானவன் முதலிய தேவர்களுக்கெல்லாம் தலைவனாய் நின்றும் குணங்களும் குறிகளும் பொருந்தப்பெறாத இறைவன் பாற்கடலி