திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

சிவமயம் திருச்சிற்றம்பலம் திருவாசக ஆராய்ச்சியுரை 7. திருவெம்பாவை சத்தியை வியந்தது திருவண்ணாமலையில் அருளிச் செய்யப்பட்டது திருவெம்பாவை என்பது, கன்னிப் பெண்கள் வைகறையில் ஒரு வரையொரு துயிலெழுப்பி மார்கழி நீராடும் வரலாற்றினைக் கூறும் பகுதியாகும். இப்பகுதியிலுள்ள இருபது திருப் பாட்டுக்களும் இறுதிகள் தோறும் எம்பாவாய் என்னும் தொடர் மொழியை உடை மையால் இப் பகுதி திருவெம்பாவை என்னும் காரணப் பெயர் பெற்றது. மாணிக்கவாசக சுவாமிகள் இறைவன் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவதலங்கள்தோறும் சென்று தரிசித்துத் திரு வண்ணாமலையை அடைந்து அங்கு எழுந்தருளியிருக்கையில், கன்னிப் பெண்கள் தனுமாதத்தில் திருவாதிரையை இறுதியாகக்கொண்ட பத்து நாட்களிலும் வைகறைப் பொழுதில் துயிலுணர்ந்து எழுந்து தங்கள் தோழியர்களான கன்னியர்களை அவர்கள் இல்லங்கள் தோறும் சென்று துயிலுணர்த்தி எழுப்பிக்கொண்டு எல்லோரும் ஒருங்கு சென்று இறைவன் புகழைப் பாடிக்கொண்டு நீர்நிலையை அடைந்து நீராடி நியதி முடித்து, தூய ஈர வெண் மணலாற் பார்வதி தேவியின் திரு வுரு அமைத்து வழிபட்டு, சிறந்த கணவர் கிடைக்கவும், மழைவளம் சிறக்கவும் வேண்டுதல் செய்வதனைக் கண்டு அவர்கள் கருதும் பொருளும் சைவ உண்மைப் பொருளும் அமைய அவர்கள் புகன்ற தாக இத் திருவெம்பாவையை அருளிச் செய்வாராயினர். "மாதர்கொண் மாத ரெல்லா மார்கழித் திங்க டன்னி லாதிரை முன்னீ ரைந்தே யாகிய தினங்க டம்மின் மேதகு மனைக டோறு மழைத்திருள் விடிவ தான போதிவர் தம்மிற் கூடிப் புனற்றட மாடல் செய்வார்" (திருவம்பலம் 40.) "அன்னவ ரியல்பு கண்டார் ஆங்கவர் புகன்ற தாக மன்னிய திருவெம் பாவை வாசகம் பேசி" எனத்திருவாதவூரடிகள் புராணத்தும், 61 (திருவம்பலம் 41)
சிவமயம் திருச்சிற்றம்பலம் திருவாசக ஆராய்ச்சியுரை 7. திருவெம்பாவை சத்தியை வியந்தது திருவண்ணாமலையில் அருளிச் செய்யப்பட்டது திருவெம்பாவை என்பது கன்னிப் பெண்கள் வைகறையில் ஒரு வரையொரு துயிலெழுப்பி மார்கழி நீராடும் வரலாற்றினைக் கூறும் பகுதியாகும் . இப்பகுதியிலுள்ள இருபது திருப் பாட்டுக்களும் இறுதிகள் தோறும் எம்பாவாய் என்னும் தொடர் மொழியை உடை மையால் இப் பகுதி திருவெம்பாவை என்னும் காரணப் பெயர் பெற்றது . மாணிக்கவாசக சுவாமிகள் இறைவன் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவதலங்கள்தோறும் சென்று தரிசித்துத் திரு வண்ணாமலையை அடைந்து அங்கு எழுந்தருளியிருக்கையில் கன்னிப் பெண்கள் தனுமாதத்தில் திருவாதிரையை இறுதியாகக்கொண்ட பத்து நாட்களிலும் வைகறைப் பொழுதில் துயிலுணர்ந்து எழுந்து தங்கள் தோழியர்களான கன்னியர்களை அவர்கள் இல்லங்கள் தோறும் சென்று துயிலுணர்த்தி எழுப்பிக்கொண்டு எல்லோரும் ஒருங்கு சென்று இறைவன் புகழைப் பாடிக்கொண்டு நீர்நிலையை அடைந்து நீராடி நியதி முடித்து தூய ஈர வெண் மணலாற் பார்வதி தேவியின் திரு வுரு அமைத்து வழிபட்டு சிறந்த கணவர் கிடைக்கவும் மழைவளம் சிறக்கவும் வேண்டுதல் செய்வதனைக் கண்டு அவர்கள் கருதும் பொருளும் சைவ உண்மைப் பொருளும் அமைய அவர்கள் புகன்ற தாக இத் திருவெம்பாவையை அருளிச் செய்வாராயினர் . மாதர்கொண் மாத ரெல்லா மார்கழித் திங்க டன்னி லாதிரை முன்னீ ரைந்தே யாகிய தினங்க டம்மின் மேதகு மனைக டோறு மழைத்திருள் விடிவ தான போதிவர் தம்மிற் கூடிப் புனற்றட மாடல் செய்வார் ( திருவம்பலம் 40. ) அன்னவ ரியல்பு கண்டார் ஆங்கவர் புகன்ற தாக மன்னிய திருவெம் பாவை வாசகம் பேசி எனத்திருவாதவூரடிகள் புராணத்தும் 61 ( திருவம்பலம் 41 )