திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை வருதலுங் காண்க. தக்கயாகத்தில் கூற்றுவன் தலையை இழந்தான்; திருமால் போர்செய்து தோற்று இறைவனால் உரப்பப்பட்டு அஞ்சி யொடுங்கினன். பிரமன் குட்டப்பட்டான்; இந்திரன் குயிலுருக் கொண்டு ஓடலும் வெட்டப்பட்டான். சந்திரன் காலால் தேய்க்கப் பட்டான்; தக்கனும் எச்சனும் தலையறுப்புண்டனர். பங்கமில் எச்சன் எனத் தனித்தனி கூட்டுக. பங்கமில் தக்கன் எச்சன் என்றது இறைவ னால் தண்டிக்கப்படுமுன் இருந்த நிலையைக் குறித்தது. பரிசு- இயல்பு; என்றது பெருமையை. பொங்கிய சீர் என்றது இறைவன் வெகுண்டு இயற்றிய வீரப்புகழைக் குறித்தது. 776 இதன்கண், "அங்கி முதலியோர் பரிசழிய" என்பதனால் மாயாவிசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 15 290 திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் றன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. ப - ரை. திண் போர் விடையான் - திண்ணிய போர்த்தொழிலை யுடைய காளையை ஊர்தியாகவுடையவனும், சிவபுரத்தார் போர் ஏறு-சிவபுரத்திலுள்ளவர்கள் அங்குச் செல்லுமுன் அடைந்த துன்பங் களையெல்லாம் பொருதழிக்கும் ஆண்சிங்கமாயுள்ளவனுமாகிய இறை வன். மண்பால் மதுரையில் பிட்டு அமுது செய்தருளி - மண்ணுலகில் மதுரையம்பதியில் பிட்டினைத் திருவமுது செய்தருளி, பாண்டியன் தண்டாலே தன்னை பணிகொண்ட - பாண்டிய மன்னன் பிரம்பினால் அடித்துத் தன்னை வேலை கொண்டமையால் உண்டான, புண் பாடல் பாடி- புண் பட்டமையைப் பாடிக்கொண்டு, நாம்பூ அல்லி கொய் யாமோ - நாம் அல்லிமலர்களைக் கொய்வோமாக. இடப வாகனத்தையுடையவனும் சிவபுரத்தார் போரேறு போன் றவனுமாகிய இறைவன் மண்ணுலகில் மதுரையம்பதியிலே பிட்டினைத் திருவமுது செய்தருளிப் பாண்டியன் தன்னைப் பிரம்பினால் அடித்துப் பணி கொண்டமையாற் புண் பட்டமையைப் பாடிக் கொண்டு நாம் அல்லிமலர்களைக் கொய்வோமாக என்பதாம். திண்விடை, போர் விடை எனத் தனித்தனி கூட்டுக. போர் விடையான் - போர் விடையை ஊர்தியாகவுடையவன். "பீடுடைய போர் விடையான்" "பீடுடையான் போர் விடையான்" (தே. ஞான். 49-2; 61 - 8) -போர் விடை யூர்தியான்" (தே. நாவு. 125-3) எனத் தேவாரத்து வருவன காண்க. போரேறு- பொருகின்ற ஏறு. (கலி. 106 - 40 நச்.) சிவபுரத்தார் போரேறு-சிவ
திருவாசக ஆராய்ச்சியுரை வருதலுங் காண்க . தக்கயாகத்தில் கூற்றுவன் தலையை இழந்தான் ; திருமால் போர்செய்து தோற்று இறைவனால் உரப்பப்பட்டு அஞ்சி யொடுங்கினன் . பிரமன் குட்டப்பட்டான் ; இந்திரன் குயிலுருக் கொண்டு ஓடலும் வெட்டப்பட்டான் . சந்திரன் காலால் தேய்க்கப் பட்டான் ; தக்கனும் எச்சனும் தலையறுப்புண்டனர் . பங்கமில் எச்சன் எனத் தனித்தனி கூட்டுக . பங்கமில் தக்கன் எச்சன் என்றது இறைவ னால் தண்டிக்கப்படுமுன் இருந்த நிலையைக் குறித்தது . பரிசு- இயல்பு ; என்றது பெருமையை . பொங்கிய சீர் என்றது இறைவன் வெகுண்டு இயற்றிய வீரப்புகழைக் குறித்தது . 776 இதன்கண் அங்கி முதலியோர் பரிசழிய என்பதனால் மாயாவிசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 15 290 திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் றன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ . - ரை . திண் போர் விடையான் - திண்ணிய போர்த்தொழிலை யுடைய காளையை ஊர்தியாகவுடையவனும் சிவபுரத்தார் போர் ஏறு - சிவபுரத்திலுள்ளவர்கள் அங்குச் செல்லுமுன் அடைந்த துன்பங் களையெல்லாம் பொருதழிக்கும் ஆண்சிங்கமாயுள்ளவனுமாகிய இறை வன் . மண்பால் மதுரையில் பிட்டு அமுது செய்தருளி - மண்ணுலகில் மதுரையம்பதியில் பிட்டினைத் திருவமுது செய்தருளி பாண்டியன் தண்டாலே தன்னை பணிகொண்ட - பாண்டிய மன்னன் பிரம்பினால் அடித்துத் தன்னை வேலை கொண்டமையால் உண்டான புண் பாடல் பாடி- புண் பட்டமையைப் பாடிக்கொண்டு நாம்பூ அல்லி கொய் யாமோ - நாம் அல்லிமலர்களைக் கொய்வோமாக . இடப வாகனத்தையுடையவனும் சிவபுரத்தார் போரேறு போன் றவனுமாகிய இறைவன் மண்ணுலகில் மதுரையம்பதியிலே பிட்டினைத் திருவமுது செய்தருளிப் பாண்டியன் தன்னைப் பிரம்பினால் அடித்துப் பணி கொண்டமையாற் புண் பட்டமையைப் பாடிக் கொண்டு நாம் அல்லிமலர்களைக் கொய்வோமாக என்பதாம் . திண்விடை போர் விடை எனத் தனித்தனி கூட்டுக . போர் விடையான் - போர் விடையை ஊர்தியாகவுடையவன் . பீடுடைய போர் விடையான் பீடுடையான் போர் விடையான் ( தே . ஞான் . 49-2 ; 61 - 8 ) -போர் விடை யூர்தியான் ( தே . நாவு . 125-3 ) எனத் தேவாரத்து வருவன காண்க . போரேறு பொருகின்ற ஏறு . ( கலி . 106 - 40 நச் . ) சிவபுரத்தார் போரேறு - சிவ