திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பூவல்லி திருவடி திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே - சிறப்புப்பொருந்திய திருவடி களில் அணிந்த திண்ணிய சிலம்புகள் ஒலிக்கின்ற ஒலியைக் கேட்ப தற்கே. ஆராத ஆசையதாய் - தெவிட்டாத ஆசையுடையேனாய் இருந்த, அடியேன் அகம் மகிழ - அடியேன் மனமகிழும்படி, திருநடம் செய் பேர் ஆனந்தம் பாடி - திருக்கூத்துச் செய்வதனாலுண்டாகிய பேரின்பத்தைப் பாடிக்கொண்டு, பூ அல்லி கொய்யாமோ - அல்லி மலர்களைக் கொய்வோமாக. திருப்பெருந்துறையான் தன் திருவடிகளில் அணிந்த சிலம்புகள் ஒலிக்கின்ற ஒலியைக் கேட்பதற்கே தெவிட்டாத ஆசையுடையேனாய் இருந்த அடியேன் மனமகிழும்படி திருநடனஞ் செய்வதனாலுண்டா கிய பேரின்பத்தைப் பாடிக்கொண்டு நாம் அல்லிமலர்களைக் கொய் வோமாக என்பதாம். 779 திருவடிச் சிலம்பு - திருவடிகளிலணிந்த சிலம்பு. "திருந்து சேவ டிச் சிலம்பவை சிலம்பாட "(அற்புதப், 4) சிலம்பு ஒலிக்கு - சிலம்புகள் ஒலிக்கின்ற ஒலியைக் கேட்டற்கு. "வாதவூ ரதனில் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பரிசும்'' என வந்தமை காண்க. ஆசையதாய் இருந்த என ஒரு சொல் வரு விக்க. மகிழ என்பதனால் மன மகிழ என்பது போதரவும். அகமகிழ என்றது சிலம்பொலியைக் கேட்டற்குப் பெருவிருப்புடையரா யிருந்த அடிகள் தில்லைச்சிற்றம்பலத்தில் பேரின்பக்கூத்தை நேரில் தரிசித்தமையால் மிக மகிழ்ந்தமை பற்றியாகும். அகமகிழ நடஞ் செய் என முடிக்க. தேரார்ந்த வீதி - இறைவன் தேரும் அவ்விறைவ னைத் தரிசிக்கவரும் தேவர் தேரும் முதலிய தேர்கள் நிறைந்த வீதி என்றவாறு. இதன்கண், ''சிலம்பொலிக்கே ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழ" என்றதனால் மாயாவிசய நீக்குதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 18 293 அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான் பித்த வடிவு கொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம் முத்தி முழுமுதலுத் தரகோச மங்கைவள்ளல் புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ. ப- ரை. அத்தி உரித்து அது போர்த்தருளும் பெருந்துறை யான் - கயாசுரனாகிய யானையைக் கொன்று தோலை உரித்து அத் தோலைத் தன் திருமேனியிற் போர்த்தருளிய திருப்பெருந்துறையை யுடைய இறைவன், பித்த வடிவுகொண்டு - பித்தவடிவினைக் கொண்டு,
திருப்பூவல்லி திருவடி திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே - சிறப்புப்பொருந்திய திருவடி களில் அணிந்த திண்ணிய சிலம்புகள் ஒலிக்கின்ற ஒலியைக் கேட்ப தற்கே . ஆராத ஆசையதாய் - தெவிட்டாத ஆசையுடையேனாய் இருந்த அடியேன் அகம் மகிழ - அடியேன் மனமகிழும்படி திருநடம் செய் பேர் ஆனந்தம் பாடி - திருக்கூத்துச் செய்வதனாலுண்டாகிய பேரின்பத்தைப் பாடிக்கொண்டு பூ அல்லி கொய்யாமோ - அல்லி மலர்களைக் கொய்வோமாக . திருப்பெருந்துறையான் தன் திருவடிகளில் அணிந்த சிலம்புகள் ஒலிக்கின்ற ஒலியைக் கேட்பதற்கே தெவிட்டாத ஆசையுடையேனாய் இருந்த அடியேன் மனமகிழும்படி திருநடனஞ் செய்வதனாலுண்டா கிய பேரின்பத்தைப் பாடிக்கொண்டு நாம் அல்லிமலர்களைக் கொய் வோமாக என்பதாம் . 779 திருவடிச் சிலம்பு - திருவடிகளிலணிந்த சிலம்பு . திருந்து சேவ டிச் சிலம்பவை சிலம்பாட ( அற்புதப் 4 ) சிலம்பு ஒலிக்கு - சிலம்புகள் ஒலிக்கின்ற ஒலியைக் கேட்டற்கு . வாதவூ ரதனில் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பரிசும் ' ' என வந்தமை காண்க . ஆசையதாய் இருந்த என ஒரு சொல் வரு விக்க . மகிழ என்பதனால் மன மகிழ என்பது போதரவும் . அகமகிழ என்றது சிலம்பொலியைக் கேட்டற்குப் பெருவிருப்புடையரா யிருந்த அடிகள் தில்லைச்சிற்றம்பலத்தில் பேரின்பக்கூத்தை நேரில் தரிசித்தமையால் மிக மகிழ்ந்தமை பற்றியாகும் . அகமகிழ நடஞ் செய் என முடிக்க . தேரார்ந்த வீதி - இறைவன் தேரும் அவ்விறைவ னைத் தரிசிக்கவரும் தேவர் தேரும் முதலிய தேர்கள் நிறைந்த வீதி என்றவாறு . இதன்கண் ' ' சிலம்பொலிக்கே ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழ என்றதனால் மாயாவிசய நீக்குதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 18 293 அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான் பித்த வடிவு கொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம் முத்தி முழுமுதலுத் தரகோச மங்கைவள்ளல் புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ . ப- ரை . அத்தி உரித்து அது போர்த்தருளும் பெருந்துறை யான் - கயாசுரனாகிய யானையைக் கொன்று தோலை உரித்து அத் தோலைத் தன் திருமேனியிற் போர்த்தருளிய திருப்பெருந்துறையை யுடைய இறைவன் பித்த வடிவுகொண்டு - பித்தவடிவினைக் கொண்டு