திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவுந்தியார் 785 எனத் தேவாரத்தும் வருவன காண்க. முப்புரம் எரித்தமையும் அங் குள்ளாரைப் புனிதமாக்குவதற்கே என்பது ''தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந் தீர்த்தா" (தே.நாவு.250-2) என்பதனாலுமறியப்படும். Gene இதன்கண், ஓரம்பே முப்புரம் அழிக்கக் கொண்டது எனவும் ஓரம் பும் பெருமிகை எனவும் கூறியவற்றால் இறைவன்புன்சிரிப்பே முப்புரங் களை அழித்தமை தோன்றுதலின் ஞானவெற்றி புலப்படுமாறுகாண்க. 2 தச்சு விடுத்தலுந் தாமடியிட்டலும் அச்சு முறிந்ததென் றுந்தீபற 296 அழிந்தன முப்புரம் உந்தீபற. ப-ரை. தச்சு விடுத்தலும் - இறைவன் முப்புரங்களை அழிக்கச் செல்வதற்கு வேண்டிய தேரினைத் தேவர்கள் வருந்தி அமைத்து விட்ட அளவில், தாம் அடி இட்டலும் - இறைவன் அத்தேரில் திருவடியை வைத்தலும், அச்சு முறிந்தது என்று உந்தீ பற - அத்தேரில் அச்சு முறிந்தது என்று பாடிக் கொண்டு உந்திப் பறப்போம்; முப் புரம் அழிந்தன உந்தீ பற - தேர் அச்சு முறிந்தபோதிலும் முப்புரங் களும் இறைவனது புன்சிரிப்பால் அழிந்து போயின என்று பாடிக் கொண்டு உந்திப் பறப்போம். இறைவன் முப்புரங்களை அழிக்கச் செல்வதற்கு வேண்டிய தேரி னைத் தேவர்கள் அமைத்து விட்ட அளவில் இறைவன் அத்தேரில் திரு வடியை வைத்தலும் அச்சு முறிந்தது என்று பாடிக் கொண்டு உந் திப் பறப்போம்; அங்ஙனம் தேர் அச்சு முறிந்தபோதிலும், முப்புரங் களும் இறைவனது புன்சிரிப்பால் அழிந்தன என்று உந்திப் பறப் போம் என்பதாம். தச்சு விடுத்தல் - தேரைச் சமைத்து விடுதல். தேவர்கள் அமைத்த தேர் பூமி தட்டாகவும், சூரிய சந்திரர்கள் உருளைகளாகவும், வேதங் கள் குதிரைகளாகவும், பிரமன் சாரதியாகவும் அமைந்தது. இன் னும் போர்க்கருவியாக மேருவில்லாகவும், வாசுகி நாணாகவும், திரு மால் அம்பாகவும் அமைந்தன. இடலும் என்றது இட்டலும் என ஒற்று விரிந்தது. தேராகவும் வில் நாண் அம்பு ஆகவும் அமைந்த தேவர்கள் தம் உதவியினாலேயே இறைவன் முப்புரதகனம் செய்வா னாயினன் எனத் தம்முள் எண்ணினராக, அவர்கள் எண்ணத்தை அறிந்த இறைவன் அச்சிறச் செய்தனன். அதனை அவ்விறைவனோடு பெரிதும் ஒப்புமையுடைய விநாயகர்மேல் ஏற்றிக் கூறுவர். தேர் அச்சு முறிந்தமையால் முப்புரதகனம் நிகழ்ந்திலதோவெனின், தன் திரு வடியைத் தூக்கி வைத்தலும் தேர் அச்சு முறிதலைக்கண்ட இறைவன் 80
திருவுந்தியார் 785 எனத் தேவாரத்தும் வருவன காண்க . முப்புரம் எரித்தமையும் அங் குள்ளாரைப் புனிதமாக்குவதற்கே என்பது ' ' தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந் தீர்த்தா ( தே.நாவு.250-2 ) என்பதனாலுமறியப்படும் . Gene இதன்கண் ஓரம்பே முப்புரம் அழிக்கக் கொண்டது எனவும் ஓரம் பும் பெருமிகை எனவும் கூறியவற்றால் இறைவன்புன்சிரிப்பே முப்புரங் களை அழித்தமை தோன்றுதலின் ஞானவெற்றி புலப்படுமாறுகாண்க . 2 தச்சு விடுத்தலுந் தாமடியிட்டலும் அச்சு முறிந்ததென் றுந்தீபற 296 அழிந்தன முப்புரம் உந்தீபற . - ரை . தச்சு விடுத்தலும் - இறைவன் முப்புரங்களை அழிக்கச் செல்வதற்கு வேண்டிய தேரினைத் தேவர்கள் வருந்தி அமைத்து விட்ட அளவில் தாம் அடி இட்டலும் - இறைவன் அத்தேரில் திருவடியை வைத்தலும் அச்சு முறிந்தது என்று உந்தீ பற - அத்தேரில் அச்சு முறிந்தது என்று பாடிக் கொண்டு உந்திப் பறப்போம் ; முப் புரம் அழிந்தன உந்தீ பற - தேர் அச்சு முறிந்தபோதிலும் முப்புரங் களும் இறைவனது புன்சிரிப்பால் அழிந்து போயின என்று பாடிக் கொண்டு உந்திப் பறப்போம் . இறைவன் முப்புரங்களை அழிக்கச் செல்வதற்கு வேண்டிய தேரி னைத் தேவர்கள் அமைத்து விட்ட அளவில் இறைவன் அத்தேரில் திரு வடியை வைத்தலும் அச்சு முறிந்தது என்று பாடிக் கொண்டு உந் திப் பறப்போம் ; அங்ஙனம் தேர் அச்சு முறிந்தபோதிலும் முப்புரங் களும் இறைவனது புன்சிரிப்பால் அழிந்தன என்று உந்திப் பறப் போம் என்பதாம் . தச்சு விடுத்தல் - தேரைச் சமைத்து விடுதல் . தேவர்கள் அமைத்த தேர் பூமி தட்டாகவும் சூரிய சந்திரர்கள் உருளைகளாகவும் வேதங் கள் குதிரைகளாகவும் பிரமன் சாரதியாகவும் அமைந்தது . இன் னும் போர்க்கருவியாக மேருவில்லாகவும் வாசுகி நாணாகவும் திரு மால் அம்பாகவும் அமைந்தன . இடலும் என்றது இட்டலும் என ஒற்று விரிந்தது . தேராகவும் வில் நாண் அம்பு ஆகவும் அமைந்த தேவர்கள் தம் உதவியினாலேயே இறைவன் முப்புரதகனம் செய்வா னாயினன் எனத் தம்முள் எண்ணினராக அவர்கள் எண்ணத்தை அறிந்த இறைவன் அச்சிறச் செய்தனன் . அதனை அவ்விறைவனோடு பெரிதும் ஒப்புமையுடைய விநாயகர்மேல் ஏற்றிக் கூறுவர் . தேர் அச்சு முறிந்தமையால் முப்புரதகனம் நிகழ்ந்திலதோவெனின் தன் திரு வடியைத் தூக்கி வைத்தலும் தேர் அச்சு முறிதலைக்கண்ட இறைவன் 80