திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை சிரித்தலும் அச்சிரிப்பே முப்புரங்களையும் அழித்தது என்க. அதனால் அச் சிரிப்பே முப்புரங்களை அழித்தது என்பது விளக்கும் பொருட்டு "அழிந்தன முப்புரம் என்றார். 786 இதன்கண், ''அச்சு முறிந்தது அழிந்தன முப்புரம்" என்பனவற் றால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க. 297 உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண் டெய்யவல் லானுக்கே யுந்தீபற இள முலை பங்கனென் றுந்தீபற. 3 ப-ரை. உய்யவல்லார் ஒரு மூலரை காவல்கொண்டு - திரிபுர தகனகாலத்தில் தன் மாட்டு அன்புத்திறம் உடைமையின் உய்தி கூடத் தகுதியுடையவரான தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன் மாலி என்னும் திரிபுரத் தலைவர்கள் மூவரையும் இடையூறடையா மற் காத்துக்கொண்டு, எய்ய வல்லானுக்கே உந்தீபற - மற்றைய அசுரர்களையும் முப்புரங்களையும் அம்பு எய்து அழிக்கவல்ல இறைவ னுக்கே வெற்றி என்று கூறி உந்திப் பறப்போமாக; இள முலை பங் கன் என்று உந்தீ பற - அவன் முற்றாமுலை உமையாளை இடப்பாகத்தி லுடைய அருளாளன் என்றுகூறி உந்திப் பறப்போம். திரிபுர தகனகாலத்தில் தன்மாட்டு அன்புத்திறம் உடைமையால் உய்ய வல்லாரான தாரகாக்ஷன் கமலாக்ஷன் வித்யுன்மாலி என்னும் மூவரையும் இடையூறு வராமற் காத்துக்கொண்டு மற்றை அசுரர் களையும் முப்புரங்களையும் அம்பு எய்து அழிக்கவல்ல இறைவனுக்கே வெற்றி என்று உந்திப்பறப்போமாக. அவன் இளமுலையையுடைய உமையாளை இடப்பாகத்திலுடைய அருளாளன் என்று கூறி உந்திப் பறப்போமாக என்பதாம். இறைவன் திரிபுரங்களை எரித்த காலத்து அத் திரிபுரங்களுக்குத் தலைவர்களான தாரகாக்ஷன் முதலிய மூவரும் சிவபூசா துரந்தரர் களாய் இருந்தமை பற்றி அவர்களைப் பாதுகாத்துக்கொண்டு ஏனைத் திரிபுரத்தசுரர்களையும் முப்புரங்களையும் இறைவன் அழித்தனன் என்சு. காவல்கொண்டு - காத்து, எய்யவல்லான் என்றது முப்புரங்களை எரித்த இறைவன் அப்புரங்களிலுள்ள மூவரையும் பாதுகாத்தமை பற்றியென்க. மூவர்க்கு அருளியது. "எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக் கண்ணுத லெந்தை கடைத்தளைமுன் நின்றதற்பின்" (தோணோ 9) "மூவார் புரங்கள் எரித்தவன்று மூவர்க்கருள் செய்தாய்" (ஞான 69-1) திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த, தலையானை''(நாவு.273-9)
திருவாசக ஆராய்ச்சியுரை சிரித்தலும் அச்சிரிப்பே முப்புரங்களையும் அழித்தது என்க . அதனால் அச் சிரிப்பே முப்புரங்களை அழித்தது என்பது விளக்கும் பொருட்டு அழிந்தன முப்புரம் என்றார் . 786 இதன்கண் ' ' அச்சு முறிந்தது அழிந்தன முப்புரம் என்பனவற் றால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க . 297 உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண் டெய்யவல் லானுக்கே யுந்தீபற இள முலை பங்கனென் றுந்தீபற . 3 - ரை . உய்யவல்லார் ஒரு மூலரை காவல்கொண்டு - திரிபுர தகனகாலத்தில் தன் மாட்டு அன்புத்திறம் உடைமையின் உய்தி கூடத் தகுதியுடையவரான தாரகாக்ஷன் கமலாக்ஷன் வித்யுன் மாலி என்னும் திரிபுரத் தலைவர்கள் மூவரையும் இடையூறடையா மற் காத்துக்கொண்டு எய்ய வல்லானுக்கே உந்தீபற - மற்றைய அசுரர்களையும் முப்புரங்களையும் அம்பு எய்து அழிக்கவல்ல இறைவ னுக்கே வெற்றி என்று கூறி உந்திப் பறப்போமாக ; இள முலை பங் கன் என்று உந்தீ பற - அவன் முற்றாமுலை உமையாளை இடப்பாகத்தி லுடைய அருளாளன் என்றுகூறி உந்திப் பறப்போம் . திரிபுர தகனகாலத்தில் தன்மாட்டு அன்புத்திறம் உடைமையால் உய்ய வல்லாரான தாரகாக்ஷன் கமலாக்ஷன் வித்யுன்மாலி என்னும் மூவரையும் இடையூறு வராமற் காத்துக்கொண்டு மற்றை அசுரர் களையும் முப்புரங்களையும் அம்பு எய்து அழிக்கவல்ல இறைவனுக்கே வெற்றி என்று உந்திப்பறப்போமாக . அவன் இளமுலையையுடைய உமையாளை இடப்பாகத்திலுடைய அருளாளன் என்று கூறி உந்திப் பறப்போமாக என்பதாம் . இறைவன் திரிபுரங்களை எரித்த காலத்து அத் திரிபுரங்களுக்குத் தலைவர்களான தாரகாக்ஷன் முதலிய மூவரும் சிவபூசா துரந்தரர் களாய் இருந்தமை பற்றி அவர்களைப் பாதுகாத்துக்கொண்டு ஏனைத் திரிபுரத்தசுரர்களையும் முப்புரங்களையும் இறைவன் அழித்தனன் என்சு . காவல்கொண்டு - காத்து எய்யவல்லான் என்றது முப்புரங்களை எரித்த இறைவன் அப்புரங்களிலுள்ள மூவரையும் பாதுகாத்தமை பற்றியென்க . மூவர்க்கு அருளியது . எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக் கண்ணுத லெந்தை கடைத்தளைமுன் நின்றதற்பின் ( தோணோ 9 ) மூவார் புரங்கள் எரித்தவன்று மூவர்க்கருள் செய்தாய் ( ஞான 69-1 ) திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த தலையானை ' ' ( நாவு.273-9 )