திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

ப திருவுந்தியார் 787 அடங்கலா ரூரெரியச் சீறியன்று மூவர்க்கருள் புரிந்தீர்" (சுந். 6-1) என வருதலுங் காண்க. இளமுலை - முற்றமுலை. "பெற்றாள் சத தண்டமனைத்து மவை பெற்றும், முற்றாமுலை என்பது பாரதம். இளமுலை ஈண்டு அன் மொழித் தொகையாய் உமையம்மையாரை உணர்த்திற்று.இளமுலை பங்கன் என்று இறைவனைக் கூறியது அன்புத் திறமுடையவர்களைப் பாதுகாக்கும் அருளுடைமைபற்றியாகும். இதன்கண், 'உய்யவல்லா ரொருமூவரைக் காவல் கொண்டெய்ய வல்லான்" என்றதனால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க. 298 சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் ஓடிய வாபாடி யுந்தீபற உருத்திர நாதனுக் குந்தீபற this led 10: 4 ப- ரை. சாடிய வேள்வி சரிந்திட - வீரபத்திரர் பூதப்படை யுடன் சென்று தாக்கிய தக்கயாகமானது நிலை குலைந்துபோக, தேவர் கள் ஓடிய ஆ பாடி உந்தீபற அங்கேயிருந்த தேவர்கள் தப்பிப் பிழைக்க ஓடியும் பிழைக்க முடியாது தண்டனையுற்ற விதத்தைப் பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக; உருத்திரநாதனுக்கு உந்தீபற- உருத்திரகணத்திற்குத் தலைவனாகிய இறைவனுக்கு வெற்றி என்று உந்திப் பறப்போமாக. வீரபத்திரர் பூதப்படையுடன் சென்று தாக்கிய தக்கன் வேள்வி நிலை குலைந்துபோக அங்கேயிருந்த தேவர்கள் தப்பிப்பிழைக்க ஓடியும் பிழைக்க முடியாமற் தண்டனையுற்ற விதத்தைப் பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக; உருத்திர கணங்களுக்குத் தலைவனாகிய இறை வனுக்கு வெற்றி என்று பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக. சாடிய வேள்வி - வீரபத்திரர் பூதப்படையுடன் சென்று சாடிய வேள்வி. "தக்கன் வேள்வியைச் சாடினார்" "தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார்'" "தக்கன் வேள்வி கெடச் சாடினானை" "தக்கன் வேள்வி செற்ற செந்தாமரை வண்ணன்" (ஞான்.369-6) (ஞான.350-7) (நாவு. 2.7-7) (திருவாரூர் மும்மணி.12) எனவும் வருவன காண்க. சாடுதல் - தாக்குதல். "தாக்குதலோடும் ஐயன் சரணிடைப் பணிவான் போல" (யாக. சங். 22) என்பதனாலு மறிக. இனி, சாடுதல் என்பதற்குத் தேவர்களை விரும்பியாங்கு வடுச்
திருவுந்தியார் 787 அடங்கலா ரூரெரியச் சீறியன்று மூவர்க்கருள் புரிந்தீர் ( சுந் . 6-1 ) என வருதலுங் காண்க . இளமுலை - முற்றமுலை . பெற்றாள் சத தண்டமனைத்து மவை பெற்றும் முற்றாமுலை என்பது பாரதம் . இளமுலை ஈண்டு அன் மொழித் தொகையாய் உமையம்மையாரை உணர்த்திற்று.இளமுலை பங்கன் என்று இறைவனைக் கூறியது அன்புத் திறமுடையவர்களைப் பாதுகாக்கும் அருளுடைமைபற்றியாகும் . இதன்கண் ' உய்யவல்லா ரொருமூவரைக் காவல் கொண்டெய்ய வல்லான் என்றதனால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க . 298 சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் ஓடிய வாபாடி யுந்தீபற உருத்திர நாதனுக் குந்தீபற this led 10 : 4 ப- ரை . சாடிய வேள்வி சரிந்திட - வீரபத்திரர் பூதப்படை யுடன் சென்று தாக்கிய தக்கயாகமானது நிலை குலைந்துபோக தேவர் கள் ஓடிய பாடி உந்தீபற அங்கேயிருந்த தேவர்கள் தப்பிப் பிழைக்க ஓடியும் பிழைக்க முடியாது தண்டனையுற்ற விதத்தைப் பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக ; உருத்திரநாதனுக்கு உந்தீபற உருத்திரகணத்திற்குத் தலைவனாகிய இறைவனுக்கு வெற்றி என்று உந்திப் பறப்போமாக . வீரபத்திரர் பூதப்படையுடன் சென்று தாக்கிய தக்கன் வேள்வி நிலை குலைந்துபோக அங்கேயிருந்த தேவர்கள் தப்பிப்பிழைக்க ஓடியும் பிழைக்க முடியாமற் தண்டனையுற்ற விதத்தைப் பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக ; உருத்திர கணங்களுக்குத் தலைவனாகிய இறை வனுக்கு வெற்றி என்று பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக . சாடிய வேள்வி - வீரபத்திரர் பூதப்படையுடன் சென்று சாடிய வேள்வி . தக்கன் வேள்வியைச் சாடினார் தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் ' தக்கன் வேள்வி கெடச் சாடினானை தக்கன் வேள்வி செற்ற செந்தாமரை வண்ணன் ( ஞான்.369-6 ) ( ஞான.350-7 ) ( நாவு . 2.7-7 ) ( திருவாரூர் மும்மணி .12 ) எனவும் வருவன காண்க . சாடுதல் - தாக்குதல் . தாக்குதலோடும் ஐயன் சரணிடைப் பணிவான் போல ( யாக . சங் . 22 ) என்பதனாலு மறிக . இனி சாடுதல் என்பதற்குத் தேவர்களை விரும்பியாங்கு வடுச்