திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கையும் வாளு மாயவண் நின்றான் கடலூடே வையம் முண்டு கண்டுயில் கின்ற மாமாயன். "சான்றகல் மாயன் அச்சுற வெய்தித் தளர்காலை மூன்றுகண் வீரன் யாது நினைந்தோ முனிவெய்த ஆன்றதோர் செற்றம் நீங்குதி என்னா அண்டத்தே தோன்றிய தம்மா கண்ணுதல் ஈசன் சொல்லொன்றே"(சங்கார.125) எனக் கந்தபுராணத்து வருதலுங் காண்க. 790 திருமாலைச் சதுர்முகன் தாதை என்றது இறைவன் அருளால் நான்முகப் பிரமனை உந்திக்கமலத்தினின்றும் தோற்றுவித்தமைபற்றி யாகும். (சங்கார .124) இதன்கண். சாவா திருந்தமைக்கு ஏது இறைவன் அசரீரிவாக் காதலின் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க. 300 வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தானென் றுந்தீபற கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 6 ப-ரை. வெய்யவன் அங்கி விழுங்க திரட்டிய - தேவர்களால் விரும்பப்படுபவனாகிய அக்கினிதேவன் தேவர்களுக்குஊட்டும்பொருட் டுத் தக்கனால் தன்னிடத்தில் ஓமஞ்செய்யப் பெற்ற அவிப்பாகத் தைத் திரட்டி எடுத்த கையை தறித்தான் என்று உந்தீ பற - கைகளை வீரபத்திரக் கடவுள் தடிந்தனர் என்று பாடிக்கொண்டு உந்திப் பறப் போமாக. வேள்வி கலங்கிற்று என்று உந்தீ பற - தக்கயாகம் கலக்க மடைந்தது என்று பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக. அக்கினிதேவன் தேவர்களுக்கு ஊட்டும் பொருட்டு அவிப்பாகத் தைத் திரட்டிய கைகளை வீரபத்திரக் கடவுள் தடிந்தனர் என்று பாடிக் கொண்டு உந்திப் பறப்போமாக. தக்க யாகம் கலக்கமடைந் தது என்று பாடிக்கொண்டு உந்திப்பறப்போம் என்பதாம். வெய்யவன்-விரும்பப் படுபவன், அக்கினி வாயிலாகத் தேவர்கள் அவிப்பாகத்தைப் பெறுதலின் அக்கினி தேவர்களால் விரும்பப் படு பவனாயினன். வேள்வித் தீயில் விண்ணவர்களுக்கு அவிப்பாகத்தைக் கொடுக்குங்கால் அவ்வத்தேவர்களுக்குரிய மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு ஓமஞ் செய்யப்படும். அவ் அக்கினி வாயிலாகவே தேவர்கள் அவிப்பாகத்தைப் பெறுவர். அதனால் அக்கினிதேவன் தேவர்களால் விரும்பப் படுவானாயினான். விருப்பமுடையவன் எனினுமாம். விழுங் குதல் - உண்ணுதல். ஈண்டு, உண்பித்தல் என்ற பொருளில் வந்தது.
திருவாசக ஆராய்ச்சியுரை கையும் வாளு மாயவண் நின்றான் கடலூடே வையம் முண்டு கண்டுயில் கின்ற மாமாயன் . சான்றகல் மாயன் அச்சுற வெய்தித் தளர்காலை மூன்றுகண் வீரன் யாது நினைந்தோ முனிவெய்த ஆன்றதோர் செற்றம் நீங்குதி என்னா அண்டத்தே தோன்றிய தம்மா கண்ணுதல் ஈசன் சொல்லொன்றே ( சங்கார .125 ) எனக் கந்தபுராணத்து வருதலுங் காண்க . 790 திருமாலைச் சதுர்முகன் தாதை என்றது இறைவன் அருளால் நான்முகப் பிரமனை உந்திக்கமலத்தினின்றும் தோற்றுவித்தமைபற்றி யாகும் . ( சங்கார .124 ) இதன்கண் . சாவா திருந்தமைக்கு ஏது இறைவன் அசரீரிவாக் காதலின் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க . 300 வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தானென் றுந்தீபற கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற . 6 - ரை . வெய்யவன் அங்கி விழுங்க திரட்டிய - தேவர்களால் விரும்பப்படுபவனாகிய அக்கினிதேவன் தேவர்களுக்குஊட்டும்பொருட் டுத் தக்கனால் தன்னிடத்தில் ஓமஞ்செய்யப் பெற்ற அவிப்பாகத் தைத் திரட்டி எடுத்த கையை தறித்தான் என்று உந்தீ பற - கைகளை வீரபத்திரக் கடவுள் தடிந்தனர் என்று பாடிக்கொண்டு உந்திப் பறப் போமாக . வேள்வி கலங்கிற்று என்று உந்தீ பற - தக்கயாகம் கலக்க மடைந்தது என்று பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக . அக்கினிதேவன் தேவர்களுக்கு ஊட்டும் பொருட்டு அவிப்பாகத் தைத் திரட்டிய கைகளை வீரபத்திரக் கடவுள் தடிந்தனர் என்று பாடிக் கொண்டு உந்திப் பறப்போமாக . தக்க யாகம் கலக்கமடைந் தது என்று பாடிக்கொண்டு உந்திப்பறப்போம் என்பதாம் . வெய்யவன் - விரும்பப் படுபவன் அக்கினி வாயிலாகத் தேவர்கள் அவிப்பாகத்தைப் பெறுதலின் அக்கினி தேவர்களால் விரும்பப் படு பவனாயினன் . வேள்வித் தீயில் விண்ணவர்களுக்கு அவிப்பாகத்தைக் கொடுக்குங்கால் அவ்வத்தேவர்களுக்குரிய மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு ஓமஞ் செய்யப்படும் . அவ் அக்கினி வாயிலாகவே தேவர்கள் அவிப்பாகத்தைப் பெறுவர் . அதனால் அக்கினிதேவன் தேவர்களால் விரும்பப் படுவானாயினான் . விருப்பமுடையவன் எனினுமாம் . விழுங் குதல் - உண்ணுதல் . ஈண்டு உண்பித்தல் என்ற பொருளில் வந்தது .