திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

303 திருவுந்தியார் வெஞ்சின வேள்வி வியாத்திர னர்தலை துஞ்சின வாபாடி யுந்தீபற தொடர்ந்த பிறப்பற வுந்தீபற? 793 ப-ரை. வெம் சின வேள்வி வியாத்திரன் - வீரபத்திரரது கடுங் கோபத்திற்கு இலக்காகிய தக்கன் செய்த வேள்வியின் அதிதேவதை யான எச்சன் என்பவன், தலைதுஞ்சின ஆபாடிஉந்தீபற - தன்தலை வெட் டுண்டு இறந்த வெற்றியைப் பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக. தொடர்ந்து பிறப்பு அற உந்தீபற - நம்மைத் தொடர்ந்து வருகின்ற பிறப்புத்தொலையுமாறு இறைவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக. வீரபத்திரரின் வெஞ்சினத்திற்கு இலக்காகிய தக்கன் வேள்வியின் அதிதேவதையான எச்சன் என்பவன் தன் தலை வெட்டுண்டு வீழ்ந்த தனாலுண்டாகிய வெற்றியைப் பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக; நம்மைத் தொடர்ந்து வருகின்ற பிறப்புத் தொலையுமாறு இறை வனைப் புகழ்ந்து பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக என்பதாகும். உருகிசுகயூசி தி வியாத்திரனார்- உறுதியுடையவர் எனப்பொருள்படும் வடசொல்; ஈண்டு. யாகத்திற்கு அதிதேவதையாயமைந்த எச்சனை உணர்த் தியது. ஈண்டு ஆர் - இழிவின்கண் வந்தது. வியாத்திரனார் தலைவெட் ''எச்சன் நிணத்தலை கொண்டார் பகன் கண்கொண்டார் இரவிகளி லொருவன் பல்லிறுத்துக் கொண்டார், மெச்சன் வியாத்திரன் தலை யும் வேறாக்கொண்டார் விறலங்கிகரங்கொண்டார் வேள்விகாத்து, உச்ச நமன் தாளறுத்தார் சந்திரனை யுதைத்தார் உணர்விலாத்தக்கன்றன் வேள்வியெல்லாம், அச்சமெழ அழித்துக் கொண்டருளுஞ் செய்தார் அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே." (நாவு.309-9) "இரிந்திடு கின்றதோர் எச்சன் என்பவன், சிரந்துணி படுதலும்'' and trad (கந்: யாக சங்.38) (சாழல்.5) "தக்கனையும் எச்சனையும் தலையறுத்து'' என்பதனாலுமறிக. தலை துஞ்சுறல் - தலை வெட்டப்பட்டு இறத்தல். துஞ்சியவாறு என்பது துஞ்சியவா என ஈறுகெட்டது; தொடர்ந்த பிறப்பு அற-நெடிது எம்மைத் தொடர்ந்து வருகின்ற பிறப்பு இறை வனது பொய்தீர் புகழைப் பாடுதலால் நீங்க என்றவாறு. இதன்கண் "தொடர்ந்த பிறப்பற" என்றதனால் ஞானவெற்றிபுலப் படுமாறு காண்க. 10
303 திருவுந்தியார் வெஞ்சின வேள்வி வியாத்திர னர்தலை துஞ்சின வாபாடி யுந்தீபற தொடர்ந்த பிறப்பற வுந்தீபற ? 793 - ரை . வெம் சின வேள்வி வியாத்திரன் - வீரபத்திரரது கடுங் கோபத்திற்கு இலக்காகிய தக்கன் செய்த வேள்வியின் அதிதேவதை யான எச்சன் என்பவன் தலைதுஞ்சின ஆபாடிஉந்தீபற - தன்தலை வெட் டுண்டு இறந்த வெற்றியைப் பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக . தொடர்ந்து பிறப்பு அற உந்தீபற - நம்மைத் தொடர்ந்து வருகின்ற பிறப்புத்தொலையுமாறு இறைவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக . வீரபத்திரரின் வெஞ்சினத்திற்கு இலக்காகிய தக்கன் வேள்வியின் அதிதேவதையான எச்சன் என்பவன் தன் தலை வெட்டுண்டு வீழ்ந்த தனாலுண்டாகிய வெற்றியைப் பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக ; நம்மைத் தொடர்ந்து வருகின்ற பிறப்புத் தொலையுமாறு இறை வனைப் புகழ்ந்து பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக என்பதாகும் . உருகிசுகயூசி தி வியாத்திரனார்- உறுதியுடையவர் எனப்பொருள்படும் வடசொல் ; ஈண்டு . யாகத்திற்கு அதிதேவதையாயமைந்த எச்சனை உணர்த் தியது . ஈண்டு ஆர் - இழிவின்கண் வந்தது . வியாத்திரனார் தலைவெட் ' ' எச்சன் நிணத்தலை கொண்டார் பகன் கண்கொண்டார் இரவிகளி லொருவன் பல்லிறுத்துக் கொண்டார் மெச்சன் வியாத்திரன் தலை யும் வேறாக்கொண்டார் விறலங்கிகரங்கொண்டார் வேள்விகாத்து உச்ச நமன் தாளறுத்தார் சந்திரனை யுதைத்தார் உணர்விலாத்தக்கன்றன் வேள்வியெல்லாம் அச்சமெழ அழித்துக் கொண்டருளுஞ் செய்தார் அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே . ( நாவு.309-9 ) இரிந்திடு கின்றதோர் எச்சன் என்பவன் சிரந்துணி படுதலும் ' ' and trad ( கந் : யாக சங் .38 ) ( சாழல் .5 ) தக்கனையும் எச்சனையும் தலையறுத்து ' ' என்பதனாலுமறிக . தலை துஞ்சுறல் - தலை வெட்டப்பட்டு இறத்தல் . துஞ்சியவாறு என்பது துஞ்சியவா என ஈறுகெட்டது ; தொடர்ந்த பிறப்பு அற - நெடிது எம்மைத் தொடர்ந்து வருகின்ற பிறப்பு இறை வனது பொய்தீர் புகழைப் பாடுதலால் நீங்க என்றவாறு . இதன்கண் தொடர்ந்த பிறப்பற என்றதனால் ஞானவெற்றிபுலப் படுமாறு காண்க . 10