திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை என்னும் பாடலொன்று காட்டப்பட்டிருத்தலும் பாவைப்பாட்டின் தொன்மையை உணர்த்துவதாகும். 483 இத்திருவெம்பாவைப் பாடல்கள் எட்டடித்தரவு கொச்சகக் கலிப்பாவாகும். சில அச்சுப்பிரதிகளில் தரவிணைக் கொச்சகக் கலிப்பா எனக்காட்டப்பட்டிருக்கிறது. ஒரு பொருள்மேல் இரு தரவு அடுக்கி வாராமையாலும் தனிச்சொல் சுரிதகம் பெறாமையாலும் திருவெம் பாவைப்பாடல் அடிகள் எட்டும் சேர்ந்து ஒரு பொருண்மேல் முடி தலாலும் எட்டடித்தரவு கொச்சகக் கலிப்பா என்றே கொள்ளல் வேண்டும். ஏல் ஓர் எம்பாவாய் திருப்பாட்டுக்களின் இறுதிதோறும் வரும் ஏலோரெம்பாவாய் என்பதில் ஏலும் ஓரும் அசை. பாடேலோரம்மானை (சிலப். 29 அம்மானை வரி) என்புழி ஏலும் ஓரும் அசை என அரும்பதவுரைகாரர் உரைத்தமையுங் காண்க. ஏல்- ஏற்றுக்கொள், ஓர் -ஆராய்ந்து பார் என்னும் பொருள்கூறின், கன்னி ஒருத்தியை முன்னிலைப்படுத் திக் கூறும் இடங்களிலன்றி குழுவாக முன்னிலைப்படுத்தியும் இறை வனையும் மழையையும் முன்னிலைப்படுத்தியும் கூறும் இடங்களில் இயைந்து வாராமையின் அசையெனக் கோடலே பொருந்துவதாகும். எம்பாவாய் யது. எம்பாவாய் என்பது திருவெம்பாவை என்னும் பெயருக்கே ஏதுவாயுள்ளது; கன்னியர்களின் பாவை நோன்பிற்குரிய பார்வதி தேவியைக் குறிப்பது; திருவெம்பாவையின் உள்ளுறைப் பொருளா கிய சத்தியை வியந்தது - என்னும் உட்பொருளுக்கு இயைபுடை பாவாய் என விளித்து முன்னிலைப்படுத்தியமைக்கு ஏற்ப திருப்பாடல்கள் தோறும் எம்பாவாய் என்பதற்கு முடிவு கூறுதல் அமைவுடைத்தாகும். அவ்வாறின்றிப் பாவை நோன்பிற்குரிய பார்வதி தேவியை நினைவு கூர்தற்கு அமைந்த இனிய ஓசையையுடைய நிறைவாகிய நன்மொழி எனக்கொண்டு, அசைநிலைபோலப் பொருள் கூறாது விடுதல் முறையாகாது. அடி திருவெம்பாவையில் முதல் எட்டுத் திருப்பாட்டுக்களிலும் பாவை நோன்பு நோற்கும் கன்னியரைத் துயிலெழுப்புதல் கூறப் பட்டுள்ளது. ஏழாம் திருப்பாட்டில் 'வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்' எனக் கூறப்படுதலாலும், எட்டாம் திருப்பாட்டில் 'பரஞ்சோதி கேழில் பரங்கருணை, கேழில் விழுப் பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ, வாழியீ தென்ன உறக்கமோ வாய் திறவாய்' என வாய் திறவாமல் கிடந்தமை கூறப்படுதலா லும், இத்திருப்பாட்டுக்களில் துயிலெழுப்பப்பட்டவர்
திருவெம்பாவை என்னும் பாடலொன்று காட்டப்பட்டிருத்தலும் பாவைப்பாட்டின் தொன்மையை உணர்த்துவதாகும் . 483 இத்திருவெம்பாவைப் பாடல்கள் எட்டடித்தரவு கொச்சகக் கலிப்பாவாகும் . சில அச்சுப்பிரதிகளில் தரவிணைக் கொச்சகக் கலிப்பா எனக்காட்டப்பட்டிருக்கிறது . ஒரு பொருள்மேல் இரு தரவு அடுக்கி வாராமையாலும் தனிச்சொல் சுரிதகம் பெறாமையாலும் திருவெம் பாவைப்பாடல் அடிகள் எட்டும் சேர்ந்து ஒரு பொருண்மேல் முடி தலாலும் எட்டடித்தரவு கொச்சகக் கலிப்பா என்றே கொள்ளல் வேண்டும் . ஏல் ஓர் எம்பாவாய் திருப்பாட்டுக்களின் இறுதிதோறும் வரும் ஏலோரெம்பாவாய் என்பதில் ஏலும் ஓரும் அசை . பாடேலோரம்மானை ( சிலப் . 29 அம்மானை வரி ) என்புழி ஏலும் ஓரும் அசை என அரும்பதவுரைகாரர் உரைத்தமையுங் காண்க . ஏல்- ஏற்றுக்கொள் ஓர் -ஆராய்ந்து பார் என்னும் பொருள்கூறின் கன்னி ஒருத்தியை முன்னிலைப்படுத் திக் கூறும் இடங்களிலன்றி குழுவாக முன்னிலைப்படுத்தியும் இறை வனையும் மழையையும் முன்னிலைப்படுத்தியும் கூறும் இடங்களில் இயைந்து வாராமையின் அசையெனக் கோடலே பொருந்துவதாகும் . எம்பாவாய் யது . எம்பாவாய் என்பது திருவெம்பாவை என்னும் பெயருக்கே ஏதுவாயுள்ளது ; கன்னியர்களின் பாவை நோன்பிற்குரிய பார்வதி தேவியைக் குறிப்பது ; திருவெம்பாவையின் உள்ளுறைப் பொருளா கிய சத்தியை வியந்தது - என்னும் உட்பொருளுக்கு இயைபுடை பாவாய் என விளித்து முன்னிலைப்படுத்தியமைக்கு ஏற்ப திருப்பாடல்கள் தோறும் எம்பாவாய் என்பதற்கு முடிவு கூறுதல் அமைவுடைத்தாகும் . அவ்வாறின்றிப் பாவை நோன்பிற்குரிய பார்வதி தேவியை நினைவு கூர்தற்கு அமைந்த இனிய ஓசையையுடைய நிறைவாகிய நன்மொழி எனக்கொண்டு அசைநிலைபோலப் பொருள் கூறாது விடுதல் முறையாகாது . அடி திருவெம்பாவையில் முதல் எட்டுத் திருப்பாட்டுக்களிலும் பாவை நோன்பு நோற்கும் கன்னியரைத் துயிலெழுப்புதல் கூறப் பட்டுள்ளது . ஏழாம் திருப்பாட்டில் ' வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால் ' எனக் கூறப்படுதலாலும் எட்டாம் திருப்பாட்டில் ' பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப் பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழியீ தென்ன உறக்கமோ வாய் திறவாய் ' என வாய் திறவாமல் கிடந்தமை கூறப்படுதலா லும் இத்திருப்பாட்டுக்களில் துயிலெழுப்பப்பட்டவர்