திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

794 304 திருவாசக ஆராய்ச்சியுரை ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக் கூட்டிய வாபாடி யுந்தீபற கொங்கை குலுங்கநின் றுந்தீபற. ப - ரை. விதிக்கு தலையாக ஆட்டின் தலையை கூட்டிய ஆ பாடி - சிறுவிதியாகிய தக்கனுக்கு அவன் இழந்த தலைக்குப் பதிலாக ஆட்டினது தலையை அவன் முண்டத்திற் பொருத்திய விதத்தைப் பாடி, உந்தீபற - உந்திப் பறப்போம். கொங்கை குலுங்க நின்று உந் தீபற - தனங்கள் குலுங்கும்படி நின்று உந்திப்பறப்போமாக. சிறுவிதியாகிய தக்கனுக்கு அவன் இழந்த தலைக்குப் பதிலாக ஆட்டினது தலையை அவன் முண்டத்தொடு பொருத்திய விதத்தைப் பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக; கொங்கைகள் குலுங்க உந்திப்பறப்போமாக என்பதாம். விதி என்றது சிறுவிதி என்றதன் முதற்குறை. சிறுவிதி - தக்கன்; விதி - பிரமன்; தக்கன் பிரமனுக்கு மகனாதலின் சிறுவிதி எனப்பட் டான். விதிக்குத் தலையாக என்றது சிறுவிதி இழந்த தலைக்குப் பிரதி யாக என்றவாறு சிறுவிதியின் முண்டத்தில் ஆட்டின் தலையைக் கூட்டி உயிர் பெற்றெழச் செய்தவர் வீரபத்திரர். இதனை, "இறையருள் கண்டு வீரன் எல்லையங் கதனில் எந்தை அறை கழல் கண்டு போற்றி அவற்றியல் வினவித் தாழாப் பொறியுள தென்று தக்கன புன்றலை புகுத்த வுன்னாக் குறையுடல் அதனைப் பானு கம்பனைக் கொணர்தி என்றான்” (யாக.சங்.162) 2101 "வித்தக வலிகொள் பூதன் வீரபத் திரன்தன் முன்னர் உய்த்தலும் அதன் மேல் வேள்விக் குண்டியாம் பசுவுள் வீந்த மைத்தலை கண்டு சேர்த்தி யெழுகென்றான் மறைகள் போற்றும் அத்தனை இகழும் நீரர் ஆவரிப் பரிசே என்னா" () (யாக.சங்.163) என வரும் கந்தபுராணச் செய்யுள்களால் அறிக. கூட்டியவாறு என் பது கூட்டிய வா என ஈறு கெட்டு நின்றது. கொங்கை குலுங்க என்பதனால் உந்தி விளையாட்டு துள்ளிப் பாய்ந் தாடப்படுவது என்பது புலப்படும். கொங்கை என்றதனால் பருவ மகளிரும் உந்திவிளையாடுதல் உண்டு என்பது துணியப்படும். இதன்கண், "ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக் கூட்டிய" என்பதனால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க. 11
794 304 திருவாசக ஆராய்ச்சியுரை ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக் கூட்டிய வாபாடி யுந்தீபற கொங்கை குலுங்கநின் றுந்தீபற . - ரை . விதிக்கு தலையாக ஆட்டின் தலையை கூட்டிய பாடி - சிறுவிதியாகிய தக்கனுக்கு அவன் இழந்த தலைக்குப் பதிலாக ஆட்டினது தலையை அவன் முண்டத்திற் பொருத்திய விதத்தைப் பாடி உந்தீபற - உந்திப் பறப்போம் . கொங்கை குலுங்க நின்று உந் தீபற - தனங்கள் குலுங்கும்படி நின்று உந்திப்பறப்போமாக . சிறுவிதியாகிய தக்கனுக்கு அவன் இழந்த தலைக்குப் பதிலாக ஆட்டினது தலையை அவன் முண்டத்தொடு பொருத்திய விதத்தைப் பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக ; கொங்கைகள் குலுங்க உந்திப்பறப்போமாக என்பதாம் . விதி என்றது சிறுவிதி என்றதன் முதற்குறை . சிறுவிதி - தக்கன் ; விதி - பிரமன் ; தக்கன் பிரமனுக்கு மகனாதலின் சிறுவிதி எனப்பட் டான் . விதிக்குத் தலையாக என்றது சிறுவிதி இழந்த தலைக்குப் பிரதி யாக என்றவாறு சிறுவிதியின் முண்டத்தில் ஆட்டின் தலையைக் கூட்டி உயிர் பெற்றெழச் செய்தவர் வீரபத்திரர் . இதனை இறையருள் கண்டு வீரன் எல்லையங் கதனில் எந்தை அறை கழல் கண்டு போற்றி அவற்றியல் வினவித் தாழாப் பொறியுள தென்று தக்கன புன்றலை புகுத்த வுன்னாக் குறையுடல் அதனைப் பானு கம்பனைக் கொணர்தி என்றான் ( யாக.சங் .162 ) 2101 வித்தக வலிகொள் பூதன் வீரபத் திரன்தன் முன்னர் உய்த்தலும் அதன் மேல் வேள்விக் குண்டியாம் பசுவுள் வீந்த மைத்தலை கண்டு சேர்த்தி யெழுகென்றான் மறைகள் போற்றும் அத்தனை இகழும் நீரர் ஆவரிப் பரிசே என்னா ( ) ( யாக.சங் .163 ) என வரும் கந்தபுராணச் செய்யுள்களால் அறிக . கூட்டியவாறு என் பது கூட்டிய வா என ஈறு கெட்டு நின்றது . கொங்கை குலுங்க என்பதனால் உந்தி விளையாட்டு துள்ளிப் பாய்ந் தாடப்படுவது என்பது புலப்படும் . கொங்கை என்றதனால் பருவ மகளிரும் உந்திவிளையாடுதல் உண்டு என்பது துணியப்படும் . இதன்கண் ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக் கூட்டிய என்பதனால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க . 11