திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவுந்தியார் 799 தக்கனார் என்பதில் ஆர் விகுதி இழிவையுணர்த்தியது. தக்கன் மக்களைச் சூழநின்று தக்கனார் அன்றே தலையிழந்தார் என மாறிக் கூட் டிப் பொருள்கொள்க. தக்கன் தலையிழந்தமை, ‘கண்டு மற்றது வீரபத் திரனெனுங் கடவுள் கொண்ட சீற்றமொ டேகியே தக்கனைக் குறுகி அண்ட ரோடுநீ ஈசனை இகழ்ந்தனை அதனால் தண்ட மீதென வாள்கொடே அவன்தலை தடிந்தான்" (கந்.யாக. 50) 'தக்கன்றன சிரமொன்றினை யரிவித்தவன்" (தே.ஞா.9-4) என்பதனாலறிக. தக்கன் மக்களை எனப் பொதுப்படக் கூறினும் மக் கள் என்றது தாக்ஷாயணி ஒழிந்த ஏனைய மகளிர்களை.இதனை "வேதவல்லி யாதியாந் துணைவியர் தக்கன்மா மாளிர் சில்லி ருங்குழல் தாழ்வரச் செங் கரங் குலைத்தே ஒல்லை யத்திறங் கண்டனர் புலம்பிவந் துற்றார்" (யாக.சங்.52) என வருதலானுமறிக. தக்கன்மக்களைச் சூழநின்று என்பதனை தக்கனை மக்கள் சூழநின்று என ஐயைப்பிரித்துக் கூட்டிப் பொருள் கொள்க. நின்றும் என உம்மை விரிக்க. தக்கனை மக்கள் சூழநின்றும் தக்கன் தலையிழந்தான் என்றதனால் தக்கனை மக்கள் காக்கும் வலியிலராயி னர் என்பது பெறப்படும். வேள்வி மடிந்தது எனக் கூட்டி வீரபத் திரரால் வேள்வி அழிந்தது என உரைக்க. இதன் கண், "மடிந்தது வேள்வி" என்பதனால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க. 310 பாலக னார்க்கன்று பாற்கட லீந்திட்ட கோலச் சடையற்கே யுந்தீபற குமரன்றன் றதைக்கே யுந்தீபற. 16 ப - ரை. பாலகனார்க்கு அன்று பால்கடல் ஈந்திட்ட - வியாக்கிர பாதமுனிவரின் புதல்வராகிய உபமன்யு என்னும் குழந்தைக்கு அந் நாளில் திருப்பாற் கடலினையே வருளித்துக் கொடுத்த, கோலம்சடை யற்கே உந்தீபற - அழகிய சடையையுடைய இறைவன் பொருட்டே இசைப்பாடலைப் பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக. குமரன் தன் தாதைக்கே உந்தீபற - முருகப்பெருமான் தந்தையின் பொருட்டு இசைப்பாடலைப் பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக. பாலகனுக்கு முற்காலத்திற் பாற்கடலைக் கொடுத்தருளிய அழ கிய சடையையுடைய இறைவன் பொருட்டே இசைப்பாடலைப் பாடிக் கொண்டு உந்திப் பறப்போமாக; குமரன்தன் தாதையின்பொருட்டே இசைப்பாடலைப் பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக என்பதாம்.
திருவுந்தியார் 799 தக்கனார் என்பதில் ஆர் விகுதி இழிவையுணர்த்தியது . தக்கன் மக்களைச் சூழநின்று தக்கனார் அன்றே தலையிழந்தார் என மாறிக் கூட் டிப் பொருள்கொள்க . தக்கன் தலையிழந்தமை கண்டு மற்றது வீரபத் திரனெனுங் கடவுள் கொண்ட சீற்றமொ டேகியே தக்கனைக் குறுகி அண்ட ரோடுநீ ஈசனை இகழ்ந்தனை அதனால் தண்ட மீதென வாள்கொடே அவன்தலை தடிந்தான் ( கந்.யாக . 50 ) ' தக்கன்றன சிரமொன்றினை யரிவித்தவன் ( தே.ஞா.9-4 ) என்பதனாலறிக . தக்கன் மக்களை எனப் பொதுப்படக் கூறினும் மக் கள் என்றது தாக்ஷாயணி ஒழிந்த ஏனைய மகளிர்களை.இதனை வேதவல்லி யாதியாந் துணைவியர் தக்கன்மா மாளிர் சில்லி ருங்குழல் தாழ்வரச் செங் கரங் குலைத்தே ஒல்லை யத்திறங் கண்டனர் புலம்பிவந் துற்றார் ( யாக.சங் .52 ) என வருதலானுமறிக . தக்கன்மக்களைச் சூழநின்று என்பதனை தக்கனை மக்கள் சூழநின்று என ஐயைப்பிரித்துக் கூட்டிப் பொருள் கொள்க . நின்றும் என உம்மை விரிக்க . தக்கனை மக்கள் சூழநின்றும் தக்கன் தலையிழந்தான் என்றதனால் தக்கனை மக்கள் காக்கும் வலியிலராயி னர் என்பது பெறப்படும் . வேள்வி மடிந்தது எனக் கூட்டி வீரபத் திரரால் வேள்வி அழிந்தது என உரைக்க . இதன் கண் மடிந்தது வேள்வி என்பதனால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க . 310 பாலக னார்க்கன்று பாற்கட லீந்திட்ட கோலச் சடையற்கே யுந்தீபற குமரன்றன் றதைக்கே யுந்தீபற . 16 - ரை . பாலகனார்க்கு அன்று பால்கடல் ஈந்திட்ட - வியாக்கிர பாதமுனிவரின் புதல்வராகிய உபமன்யு என்னும் குழந்தைக்கு அந் நாளில் திருப்பாற் கடலினையே வருளித்துக் கொடுத்த கோலம்சடை யற்கே உந்தீபற - அழகிய சடையையுடைய இறைவன் பொருட்டே இசைப்பாடலைப் பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக . குமரன் தன் தாதைக்கே உந்தீபற - முருகப்பெருமான் தந்தையின் பொருட்டு இசைப்பாடலைப் பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக . பாலகனுக்கு முற்காலத்திற் பாற்கடலைக் கொடுத்தருளிய அழ கிய சடையையுடைய இறைவன் பொருட்டே இசைப்பாடலைப் பாடிக் கொண்டு உந்திப் பறப்போமாக ; குமரன்தன் தாதையின்பொருட்டே இசைப்பாடலைப் பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக என்பதாம் .