திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

* திருவுந்தியார் ஏகாச மிட்ட விருடிகள் போகாமல் ஆகாசங் காவலென் றுந்தீபற அதற்கப்பா லுங்காவ லென் றுந்தீபற. 80 3 ப - ரை. ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல் - உத்தரீயம் இட்ட முனிவர்கள் நியதி தவறிப்போகாமல், ஆகாசம் காவல் என்று உந்தீபற - ஆகாயத்தில் காவலாயுள்ளான் இறைவனென்று உந்திப் பறப்போமாக. அதற்கு அப்பாலும் காவல் என்று உந்தீபற - ஆகா யத்திற்கு அப்பாலுள்ள உலகத்தார்க்கும் காவலாயுள்ளான் இறை வனே என்று உந்திப்பறப்போமாக. ஏகாசம் - உத்தரீயம். ஏகாவடம் எனவும் வழங்கும். "ஆகாத நஞ்சுண்ட அந்திவண்ணர் ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல், ஏகாசம்" "இலங்கு தலைமாலை பாம்புகொண்டே காச மிட்டியங்கு மீசன்" (226-3; 235-6)என அப்பரடிகள் வாக்காலுமறிக. ஏகாசம் இட்ட இருடிகள் என்றது இருடிகளுக்கு இயல்பான ஆடை. போகாமல் என்பதற்குச் சூரிய வெப்பத்தால் ஒழிந்துபோகாமல் என உரைப்பாருமுளர். அங்ஙனமுரைப்பது சூரியனைக் காலை உச்சி மாலை என்னும் சந்தியா காலங்களில் தடைசெய்கின்ற மாந்தேயர் என்னும் அசுரர்களை அந்தணர்கள் சந்தியா காலங்களில் செய்யும் தருப்பணத் தினால் நீக்குவர் என்னும் மரபுக்கு மாறாகும். அந்தணரின் சந்தி தருப் பணத்தால் அவுணர் அழிவர் என்பதனை " 'ஐயர் கையில் வந்தவுண ரைச் செறுந் துய்ய தீம்படை" எனக் கந்தபுராணத்தாவறிக: ''விண் செலன் மரபின் ஐயர்க் கேந்திய தொருகை" எனத் திரு முருகாற்றுப்படையில் (107) விண்செலன் மரபின் ஐயரை முதன்மை யாகக் கூறினும் அவரொழிந்த ஆகாயகமன தேவர்கள் யாவரும் கொள்ளப்படுவர். இருடிகளை விதந்து கூறியது ஆகாயத்தில் செல்லும் தேவர்களில் இவர்கள் தலைமையுடையராதல் பற்றியாகும். எனவே, ஆகாயத்தில் செல்லும் மற்றத் தேவர்களுக்கும் காவல் இறைவனே என்பது கருத்தாகக் கொள்க. இதன்கண், ''இருடிகள் போகாமல் ஆகாசங் காவல் என்று உந்தீ பற" என்பதனால் ஞானவெற்றி என்னும் பொருள் புலப்படுமாறு காண்க ********* 20 ஏகாசமிட்ட என ஒருபாடல் மேலதிகமாகச் சிலபதிப்புக்களில் காணப்படுகிறது.
* திருவுந்தியார் ஏகாச மிட்ட விருடிகள் போகாமல் ஆகாசங் காவலென் றுந்தீபற அதற்கப்பா லுங்காவ லென் றுந்தீபற . 80 3 - ரை . ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல் - உத்தரீயம் இட்ட முனிவர்கள் நியதி தவறிப்போகாமல் ஆகாசம் காவல் என்று உந்தீபற - ஆகாயத்தில் காவலாயுள்ளான் இறைவனென்று உந்திப் பறப்போமாக . அதற்கு அப்பாலும் காவல் என்று உந்தீபற - ஆகா யத்திற்கு அப்பாலுள்ள உலகத்தார்க்கும் காவலாயுள்ளான் இறை வனே என்று உந்திப்பறப்போமாக . ஏகாசம் - உத்தரீயம் . ஏகாவடம் எனவும் வழங்கும் . ஆகாத நஞ்சுண்ட அந்திவண்ணர் ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல் ஏகாசம் இலங்கு தலைமாலை பாம்புகொண்டே காச மிட்டியங்கு மீசன் ( 226-3 ; 235-6 ) என அப்பரடிகள் வாக்காலுமறிக . ஏகாசம் இட்ட இருடிகள் என்றது இருடிகளுக்கு இயல்பான ஆடை . போகாமல் என்பதற்குச் சூரிய வெப்பத்தால் ஒழிந்துபோகாமல் என உரைப்பாருமுளர் . அங்ஙனமுரைப்பது சூரியனைக் காலை உச்சி மாலை என்னும் சந்தியா காலங்களில் தடைசெய்கின்ற மாந்தேயர் என்னும் அசுரர்களை அந்தணர்கள் சந்தியா காலங்களில் செய்யும் தருப்பணத் தினால் நீக்குவர் என்னும் மரபுக்கு மாறாகும் . அந்தணரின் சந்தி தருப் பணத்தால் அவுணர் அழிவர் என்பதனை ' ஐயர் கையில் வந்தவுண ரைச் செறுந் துய்ய தீம்படை எனக் கந்தபுராணத்தாவறிக : ' ' விண் செலன் மரபின் ஐயர்க் கேந்திய தொருகை எனத் திரு முருகாற்றுப்படையில் ( 107 ) விண்செலன் மரபின் ஐயரை முதன்மை யாகக் கூறினும் அவரொழிந்த ஆகாயகமன தேவர்கள் யாவரும் கொள்ளப்படுவர் . இருடிகளை விதந்து கூறியது ஆகாயத்தில் செல்லும் தேவர்களில் இவர்கள் தலைமையுடையராதல் பற்றியாகும் . எனவே ஆகாயத்தில் செல்லும் மற்றத் தேவர்களுக்கும் காவல் இறைவனே என்பது கருத்தாகக் கொள்க . இதன்கண் ' ' இருடிகள் போகாமல் ஆகாசங் காவல் என்று உந்தீ பற என்பதனால் ஞானவெற்றி என்னும் பொருள் புலப்படுமாறு காண்க ********* 20 ஏகாசமிட்ட என ஒருபாடல் மேலதிகமாகச் சிலபதிப்புக்களில் காணப்படுகிறது .