திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

484 திருவாசக ஆராய்ச்சியுரை ஐந்து முதல் பன்னிரண்டு வயது வரையுள்ள பேதைப்பருவத்தினர் என்பதும், *கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்க' எனவும் 'எங்கொங்கை நின்னன்பரல்லார் தோள் சேரற்க' எனவும் வருதலால் பன்னிரண்டு ஆண்டு வயது எய்திய மங்கைப் பருவ மகளிர் துயிலெழுப்பப்பட்டு நீராடியமை பெறப்படுதலினாலும் முதல் எட்டுத் திருப்பாட்டுக்களிலும் ஐந்து வயது முதல் பன்னிரண்டு வயதுவரை ஆண்டு வகையால் எட்டு வகைப்படும் பேதை முதல் மங்கைப் பருவம் வரையுள்ள கன்னியர்களே எழுப்பப்பட்டனர் என்பது தெளியப்படும். பாவை நோன்பு வினைமாசு நீங்கி அந்தக்கரணங்கள் தூயவாதற் பொருட்டுப் பண்டைக் காலத்தவர்கள் பலவகை நோன்புகளை நோற்று வந்தனர். இந்நோன்புகளுள் பாவை நோன்பும் ஒன்று. இந்நோன்பு பண் டைக் காலத்தில் விளக்க முற்றிருந்தமை திருப்பாவையாலும் திருவெம்பாவையாலும் அறியலாம். கன்னியர்கள் மழைவளங்குறித்தும் சிறந்த கணவரைப்பெறும் பொருட்டும் கார்த்தியாயினி தேவியைக்குறித்து மார்கழி முழு வதும் நோன்பு நோற்று வந்தனர், அந்நாளில் அவர்கள் வைகறை யில் எழுந்து ஒருவரை ஒருவர் துயில் எழுப்பிச் சென்று நீர் நிலையை அடைந்து நீராடி தூய ஈரவெண்மணலாற் தேவியின் பிரதிமை யைச் செய்து தம் மனக்கருத்து நிறைவேறப் பூசித்து வந்தனர். ஆயர்பாடியில் கண்ணனும் ஆயர் கன்னியரும் காதல் விளையாட் டில் ஈடுபட்டுத் திரிந்தனராக, அதனைக்கண்ட ஆயமுதியோர் கன் னியர்கள் கண்ணனை விழிக்கலாகாது என்று கருதி அக்கன்னியர் களை நிலவறையின்கண் மறைத்து வாழ வைத்தனர். அன்று தொட்டு அவ்வாயர் பாடியில் மழையின்றாக அம்முதியோர் அக் கன்னியர்களை அழைத்து மழைவளம் வேண்டி நோற்பீராக என்று ஏவினர். அவர்களும் தமக்குத் தலைவனாக வேண்டுமெனக் கருதிக் கண்ணனையே தலைவனாகக் கொண்டு தங்கள் தோழிமாரைத் துயிலு ணர்த்தி உடன் அழைத்துச் சென்று யமுனை நதியில் நீராடி நோன்பு நோற்று அவனைத் தம் தலைவனாகப் பெற்றார்கள் என்பது திருப் பாவையின் வரலாறாகும். கோகுலப் பெண்கள் மார்கழி மாதத்தில் கார்த்தியாயினி நோன் பைத் தொடங்கி வைகறையில் எழுந்து யமுனை நதியில் நீராடி ஈரமணலாற் கார்த்தியாயினியின் திருவுரு வைத்தமைத்து, பூவும் புகையும் கொடுத்து, கண்ணனையே தமக்கு நாயகனாக அடைய அருள் செய்க என அத்தேவியை வழிபட்டு வந்தனர். ஒருநாள் கோகுலப் பெண்கள் கண்ணன் நாமங்களைப் பாடிக்கொண்டு சென்று நதி
484 திருவாசக ஆராய்ச்சியுரை ஐந்து முதல் பன்னிரண்டு வயது வரையுள்ள பேதைப்பருவத்தினர் என்பதும் * கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்க ' எனவும் ' எங்கொங்கை நின்னன்பரல்லார் தோள் சேரற்க ' எனவும் வருதலால் பன்னிரண்டு ஆண்டு வயது எய்திய மங்கைப் பருவ மகளிர் துயிலெழுப்பப்பட்டு நீராடியமை பெறப்படுதலினாலும் முதல் எட்டுத் திருப்பாட்டுக்களிலும் ஐந்து வயது முதல் பன்னிரண்டு வயதுவரை ஆண்டு வகையால் எட்டு வகைப்படும் பேதை முதல் மங்கைப் பருவம் வரையுள்ள கன்னியர்களே எழுப்பப்பட்டனர் என்பது தெளியப்படும் . பாவை நோன்பு வினைமாசு நீங்கி அந்தக்கரணங்கள் தூயவாதற் பொருட்டுப் பண்டைக் காலத்தவர்கள் பலவகை நோன்புகளை நோற்று வந்தனர் . இந்நோன்புகளுள் பாவை நோன்பும் ஒன்று . இந்நோன்பு பண் டைக் காலத்தில் விளக்க முற்றிருந்தமை திருப்பாவையாலும் திருவெம்பாவையாலும் அறியலாம் . கன்னியர்கள் மழைவளங்குறித்தும் சிறந்த கணவரைப்பெறும் பொருட்டும் கார்த்தியாயினி தேவியைக்குறித்து மார்கழி முழு வதும் நோன்பு நோற்று வந்தனர் அந்நாளில் அவர்கள் வைகறை யில் எழுந்து ஒருவரை ஒருவர் துயில் எழுப்பிச் சென்று நீர் நிலையை அடைந்து நீராடி தூய ஈரவெண்மணலாற் தேவியின் பிரதிமை யைச் செய்து தம் மனக்கருத்து நிறைவேறப் பூசித்து வந்தனர் . ஆயர்பாடியில் கண்ணனும் ஆயர் கன்னியரும் காதல் விளையாட் டில் ஈடுபட்டுத் திரிந்தனராக அதனைக்கண்ட ஆயமுதியோர் கன் னியர்கள் கண்ணனை விழிக்கலாகாது என்று கருதி அக்கன்னியர் களை நிலவறையின்கண் மறைத்து வாழ வைத்தனர் . அன்று தொட்டு அவ்வாயர் பாடியில் மழையின்றாக அம்முதியோர் அக் கன்னியர்களை அழைத்து மழைவளம் வேண்டி நோற்பீராக என்று ஏவினர் . அவர்களும் தமக்குத் தலைவனாக வேண்டுமெனக் கருதிக் கண்ணனையே தலைவனாகக் கொண்டு தங்கள் தோழிமாரைத் துயிலு ணர்த்தி உடன் அழைத்துச் சென்று யமுனை நதியில் நீராடி நோன்பு நோற்று அவனைத் தம் தலைவனாகப் பெற்றார்கள் என்பது திருப் பாவையின் வரலாறாகும் . கோகுலப் பெண்கள் மார்கழி மாதத்தில் கார்த்தியாயினி நோன் பைத் தொடங்கி வைகறையில் எழுந்து யமுனை நதியில் நீராடி ஈரமணலாற் கார்த்தியாயினியின் திருவுரு வைத்தமைத்து பூவும் புகையும் கொடுத்து கண்ணனையே தமக்கு நாயகனாக அடைய அருள் செய்க என அத்தேவியை வழிபட்டு வந்தனர் . ஒருநாள் கோகுலப் பெண்கள் கண்ணன் நாமங்களைப் பாடிக்கொண்டு சென்று நதி