திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

15. திருத்தோணோக்கம் பிரபஞ்ச சுத்தி திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது தோணோக்கம் என்பது ஒருவகை மகளிர்விளையாட்டு. அடிகள் தில்லையில் வசிக்கின்ற காலத்தில் ஒரு சோலையின்கட் செல்கின்றுழி பொய்தலாடும் சிறுமகளிர் இவ்விளையாட்டைப் பாடிக்கொண்டு ஆடு தலைக் கண்டு, 'நீவிர் பாடும் நரஸ்துதியாகிய குற்றமுடைய பாடல் முழுவதும் கைவிட்டு அண்டவடிவினராகிய நம் சிவபெருமானையே பாடுங்கள்' என்று அம்மகளிர் கூற்றாக "பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே யெனக்கருதி" என்று தொடங்கித் திருத்தோணோக்கம் என்னும் இப்பதிகத்தைப் பாடியருளினார். தோணோக்கம் என்னும் விளையாட்டு, சிறுமகளிர் அறுவர் வட்ட மாகச் சுற்றி நின்று ஒருவர் தோளை மற்றொருவர் நோக்கிக் கவித்த கைகளால் கொட்டிப் பாடிக்கொண்டு ஆடும் விளையாட்டாகும். "சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே புண்ணியமாய் அத்தன் செயுங் கருணைக் காராமை யுண்மிகுந்து பொத்திய கைகொட்டிப் புகழ்தறோ ணோக்கம்" என்னும் திருவாசகச் சிறப்பு ஈண்டு நோக்கற்பாலது. இது நால டித் தரவு கொச்சகக் கலிப்பா. இதன் உட்பொருள் பிரபஞ்ச சுத்தி என்றது உயிரை உலகப்பற்றினின்றும் நீங்கச்செய்தல். தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் 313 பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே யெனக்கருதிப் பேய்த்தேர் முகக்குறும் பேதைகுண மாகாமே தீர்த்தாய் திகழ்தில்லை யம்பலத்தே திருநடஞ்செய் கூத்தா வுன் சேவடி கூடுமவண்ணந் தோணோக்கம். ப-ரை. திகழ் தில்லை அம்பலத்தே திரு நடம் செய் கூத்தா- விளங்குகின்ற தில்லையம்பலத்தின் கண்ணே திருநடஞ் செய்கின்ற கூத் தப்பிரானே, பூத்து ஆரும் பொய்கை புனல் இதுவே என கருதி நீர்ப்பூக்கள் மலர்ந்து நிறைந்துள்ள பொய்கையின் குளிர்ந்த நீர் இதுவேயாகுமென்று நினைத்து, பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே தீர்த்தாய்- கானல் நீரை மொண்டு கொள்ளச் செல் லும் அறிவிலியின் குணம் என்பால் உளதாகாமல் அதனை நீக்கி
15. திருத்தோணோக்கம் பிரபஞ்ச சுத்தி திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது தோணோக்கம் என்பது ஒருவகை மகளிர்விளையாட்டு . அடிகள் தில்லையில் வசிக்கின்ற காலத்தில் ஒரு சோலையின்கட் செல்கின்றுழி பொய்தலாடும் சிறுமகளிர் இவ்விளையாட்டைப் பாடிக்கொண்டு ஆடு தலைக் கண்டு ' நீவிர் பாடும் நரஸ்துதியாகிய குற்றமுடைய பாடல் முழுவதும் கைவிட்டு அண்டவடிவினராகிய நம் சிவபெருமானையே பாடுங்கள் ' என்று அம்மகளிர் கூற்றாக பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே யெனக்கருதி என்று தொடங்கித் திருத்தோணோக்கம் என்னும் இப்பதிகத்தைப் பாடியருளினார் . தோணோக்கம் என்னும் விளையாட்டு சிறுமகளிர் அறுவர் வட்ட மாகச் சுற்றி நின்று ஒருவர் தோளை மற்றொருவர் நோக்கிக் கவித்த கைகளால் கொட்டிப் பாடிக்கொண்டு ஆடும் விளையாட்டாகும் . சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே புண்ணியமாய் அத்தன் செயுங் கருணைக் காராமை யுண்மிகுந்து பொத்திய கைகொட்டிப் புகழ்தறோ ணோக்கம் என்னும் திருவாசகச் சிறப்பு ஈண்டு நோக்கற்பாலது . இது நால டித் தரவு கொச்சகக் கலிப்பா . இதன் உட்பொருள் பிரபஞ்ச சுத்தி என்றது உயிரை உலகப்பற்றினின்றும் நீங்கச்செய்தல் . தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் 313 பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே யெனக்கருதிப் பேய்த்தேர் முகக்குறும் பேதைகுண மாகாமே தீர்த்தாய் திகழ்தில்லை யம்பலத்தே திருநடஞ்செய் கூத்தா வுன் சேவடி கூடுமவண்ணந் தோணோக்கம் . - ரை . திகழ் தில்லை அம்பலத்தே திரு நடம் செய் கூத்தா விளங்குகின்ற தில்லையம்பலத்தின் கண்ணே திருநடஞ் செய்கின்ற கூத் தப்பிரானே பூத்து ஆரும் பொய்கை புனல் இதுவே என கருதி நீர்ப்பூக்கள் மலர்ந்து நிறைந்துள்ள பொய்கையின் குளிர்ந்த நீர் இதுவேயாகுமென்று நினைத்து பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே தீர்த்தாய்- கானல் நீரை மொண்டு கொள்ளச் செல் லும் அறிவிலியின் குணம் என்பால் உளதாகாமல் அதனை நீக்கி