திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தோணோக்கம் 80 5 யருளினை, உன் சேவடி கூடும் வண்ணம் தோணோக்கம்-உனது சிவந்த திருவடியைச் சேரும்வண்ணம் நின்புகழினைப் பாடிக் கொண்டு தோணோக்கம் என்னும் ஆடலை ஆடுவோமாக. கம் தில்லையம்பலத்தே திருநடஞ்செய்கின்ற கூத்தப்பிரானே, பொய் கையின் நீர் இதுவாகும் என்று நினைத்துக் கானல்நீரை முகந்து கொள்ள விரும்பும் அறிவிலியின் குணம் என்பாலுளதாகா வண்ணம் அதனை நீக்கியருளினை; அங்ஙனம் அருளிய நின் திருவடியைச் சேரும் வண்ணம் நின் புகழினைப் பாடிக்கொண்டு யாம் தோணோக்கம் ஆடு வோமாக என்பதாம். பொய்கை - மானிடராக்காத நீர்நிலை. "பூத்தாரும் பொய்கை" என்றார், நீர்ப்பூக்கள் மலர்ந்து நிறைந்துள்ள பொய்கையாதலின். ** அரக்கிதழ்க் குவளையொடு நீல நீடி முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கை" "முட்டாள சுடர்த்தாமரை கட்கமழு நறுநெய்தல் வள்ளித ழவிழ்நீல மெல்லிலை யரியாம்பலொடு வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கை" (பெரும்பாணா.293-4) (மதுரைக். 249-53) எனவருவன காண்க. இது எனச் சுட்டியது, பின்னர்க் கூறப்படும் பேய்த் தேரினை. பேய்த்தேர் - நண்பகற் கடுமைபற்றித் தோற்றும் கானல்நீர். அது தூரப் பார்வையில் நீர் போலும் தோற்றமுடைத்தா கும். "வெண்டேரை நீராமென் றெண்ணி" (ஐந். ஐம்.36) என வரு தல் காண்க. முகக்க உறும் என்பது முகக் குறும் என ஈறு கெட்டது; இனி முகக்குறும் - முகக்கும் எனவும் உரைக்கலாம். பேதைகுணம் - அறிவிலியின் குணம். ஆகாமே - மே ஈற்று எதிர்மறை வினையெச்சம். என்பாலுளதாகாமல் என்பது பொருள். இறைவன் சேவடியே வீடா தலாலும் அதனையே அடைய வேண்டுமாதலாலும் "உன்சேவடி கூடும் வண்ணம்" என்றார். "சேவடி படருஞ் செம்மலுள்ளமொடு" (63) என்றார் திருமுருகாற்றுப்படையினும், 'அம்பலவன் குணம் பரவித் துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ" என அடுத்த திருப் பாட்டின் கண் வருதலின் தோணோக்கம் என்பதற்கு இறைவன் புக ழினைப் பாடிக்கொண்டு தோணோக்கம் என்னும் ஆடலை ஆடுவோ மாக என வருவித்துரைக்கப்பட்டது. இதன் கண், "பேதை குண மாகாமே தீர்த்தாய்" என்பதனால் பிரபஞ்ச சுத்தி யென்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 1
திருத்தோணோக்கம் 80 5 யருளினை உன் சேவடி கூடும் வண்ணம் தோணோக்கம் - உனது சிவந்த திருவடியைச் சேரும்வண்ணம் நின்புகழினைப் பாடிக் கொண்டு தோணோக்கம் என்னும் ஆடலை ஆடுவோமாக . கம் தில்லையம்பலத்தே திருநடஞ்செய்கின்ற கூத்தப்பிரானே பொய் கையின் நீர் இதுவாகும் என்று நினைத்துக் கானல்நீரை முகந்து கொள்ள விரும்பும் அறிவிலியின் குணம் என்பாலுளதாகா வண்ணம் அதனை நீக்கியருளினை ; அங்ஙனம் அருளிய நின் திருவடியைச் சேரும் வண்ணம் நின் புகழினைப் பாடிக்கொண்டு யாம் தோணோக்கம் ஆடு வோமாக என்பதாம் . பொய்கை - மானிடராக்காத நீர்நிலை . பூத்தாரும் பொய்கை என்றார் நீர்ப்பூக்கள் மலர்ந்து நிறைந்துள்ள பொய்கையாதலின் . ** அரக்கிதழ்க் குவளையொடு நீல நீடி முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கை முட்டாள சுடர்த்தாமரை கட்கமழு நறுநெய்தல் வள்ளித ழவிழ்நீல மெல்லிலை யரியாம்பலொடு வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கை ( பெரும்பாணா.293-4 ) ( மதுரைக் . 249-53 ) எனவருவன காண்க . இது எனச் சுட்டியது பின்னர்க் கூறப்படும் பேய்த் தேரினை . பேய்த்தேர் - நண்பகற் கடுமைபற்றித் தோற்றும் கானல்நீர் . அது தூரப் பார்வையில் நீர் போலும் தோற்றமுடைத்தா கும் . வெண்டேரை நீராமென் றெண்ணி ( ஐந் . ஐம் .36 ) என வரு தல் காண்க . முகக்க உறும் என்பது முகக் குறும் என ஈறு கெட்டது ; இனி முகக்குறும் - முகக்கும் எனவும் உரைக்கலாம் . பேதைகுணம் - அறிவிலியின் குணம் . ஆகாமே - மே ஈற்று எதிர்மறை வினையெச்சம் . என்பாலுளதாகாமல் என்பது பொருள் . இறைவன் சேவடியே வீடா தலாலும் அதனையே அடைய வேண்டுமாதலாலும் உன்சேவடி கூடும் வண்ணம் என்றார் . சேவடி படருஞ் செம்மலுள்ளமொடு ( 63 ) என்றார் திருமுருகாற்றுப்படையினும் ' அம்பலவன் குணம் பரவித் துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ என அடுத்த திருப் பாட்டின் கண் வருதலின் தோணோக்கம் என்பதற்கு இறைவன் புக ழினைப் பாடிக்கொண்டு தோணோக்கம் என்னும் ஆடலை ஆடுவோ மாக என வருவித்துரைக்கப்பட்டது . இதன் கண் பேதை குண மாகாமே தீர்த்தாய் என்பதனால் பிரபஞ்ச சுத்தி யென்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 1