திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் என்றது “கந்தவர்க்கமுங் கிளர்மணப்புகையும் கவின்கொ டீபமும் புனித மஞ்சனமுங், கொந் தமிழ்ந்த நன்மலரு மற்றுளவுங் கொண்டு" ஆகம விதிப்படி செய்யும் வழிபாடுகள் என்றவாறு. பூசனைகள் எனப் பன்மையாற் கூறியது பூசனை ஆன்மார்த்தம் பரார்த்தம் என்னும் பிரிவுடைமையானும், ஆன் மார்த்தம், சுத்தம் கேவலம் மிஸ்ரம் என்னும் பிரிவுடைமையானும் பரார்த்தம் நித்தியம் நைமித்தியம் காமியம் என்னும் பகுப்புடைமை யானுமறிக. இன்னும் பூசனையிற் செய்யும் உபசாரங்கள் பதினாறு வகைப்படுதல் பற்றிப் பன்மையாற் கூறப்பட்டதெனினுமாம். 808 செருப்புற்ற சீரடி என்றாராயினும் சீரடியுற்ற செருப்பு எனக் கொள்க. அது இறைவன் முடிமேலிருந்த நிர்மாலியத்தை நீக்கும் மார்ச்சனியாக அமைந்தது. வாய்க்கலசம் என்றது பாத்திரமின்மை யால் வாயாகிய அபிடேக கலசத்திற் கொணர்ந்த நீரை. விருப்புற்று மெய்குளிர்ந்து என்பன காளத்தியப்பருடையவினைக ளாதலின் காளத்தியப்பர் என்ற எழுவாய் வருவித்து, சீரடி வாய்க் கலசம் ஊனமுதம் ஆகியவற்றைக்கொண்டு கண்ணப்பர் செய்த வழி பாட்டினைவிரும்பி ஏற்றுக்கொண்டுமெய் குளிர்ந்து என உரைக்கப்பட் டது. விருப்புற்று மெய்குளிர்ந்து என்னும் இறைவன் வினைகள் அருள வென்னும் செயவெனெச்சத்தைக்கொண்டு முடிந்தன. அருளப்பெற்று எனற்பாலது அருட்பெற்று என எதுகை நோக்கிச் செயவெனெச்சத் தீறு கெட்டு நின்றது. இனிவிருப்புற்று மெய்குளிர்ந்து என்னும் வினை களுக்கு முடிபாக அருளியஎன்னும் ஒரு பெயரெச்சத்தினை வருவித்து அதனோடு முடித்து அருட்பெற்று நின்றவா என்பதற்கு அருளினைப் பெற்று நின்றவாற்றினை என உரைப்பினுமமையும். காளத்தியப்பர் தமக்குப் பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போலத்தோன்றும்படி செருப்புற்ற சீரடியால் நிர்மாலியங் கழித்தலை யும், வாய்க்கலச நீரைத் திருமுடியில் உமிழ்தலையும், மாமிசத்தினை ஊட்டுதலையும் விரும்பி ஏற்றுக்கொண்டு, அவற்றைக்கொண்டு தம்மை வழிபட்ட வேடனாராகிய கண்ணப்பரது தீவிரதர அன்பின் பெருமையினை உலகினர் அறியும் பொருட்டுத் திருமேனி குளிர்ச்சி யடைந்து அவ்விடத்தில் திருவருள் செய்ய அவ் அருட்பேற்றினை அவ் வேடனார் ஏற்று நின்ற விதத்தினைப் பாடித் தோணோக்கம் ஆடுவோம் எனமுடிக்க. நேசத்தால் **** ****** வாயினீர் கொண்டு மகுடத் துமிந்திறைச்சி ஆயசீர்ப் போனகமா அங்கமைத்துத்-தூயசீர்க் கண்ணிடந்த கண்ணப்பர் தம்கைமிகக் காதலித்து விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி" 43. (11ந் திரு. போற்றித் திருக்கலிவெண்பா 42-43)
திருவாசக ஆராய்ச்சியுரை பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் என்றது கந்தவர்க்கமுங் கிளர்மணப்புகையும் கவின்கொ டீபமும் புனித மஞ்சனமுங் கொந் தமிழ்ந்த நன்மலரு மற்றுளவுங் கொண்டு ஆகம விதிப்படி செய்யும் வழிபாடுகள் என்றவாறு . பூசனைகள் எனப் பன்மையாற் கூறியது பூசனை ஆன்மார்த்தம் பரார்த்தம் என்னும் பிரிவுடைமையானும் ஆன் மார்த்தம் சுத்தம் கேவலம் மிஸ்ரம் என்னும் பிரிவுடைமையானும் பரார்த்தம் நித்தியம் நைமித்தியம் காமியம் என்னும் பகுப்புடைமை யானுமறிக . இன்னும் பூசனையிற் செய்யும் உபசாரங்கள் பதினாறு வகைப்படுதல் பற்றிப் பன்மையாற் கூறப்பட்டதெனினுமாம் . 808 செருப்புற்ற சீரடி என்றாராயினும் சீரடியுற்ற செருப்பு எனக் கொள்க . அது இறைவன் முடிமேலிருந்த நிர்மாலியத்தை நீக்கும் மார்ச்சனியாக அமைந்தது . வாய்க்கலசம் என்றது பாத்திரமின்மை யால் வாயாகிய அபிடேக கலசத்திற் கொணர்ந்த நீரை . விருப்புற்று மெய்குளிர்ந்து என்பன காளத்தியப்பருடையவினைக ளாதலின் காளத்தியப்பர் என்ற எழுவாய் வருவித்து சீரடி வாய்க் கலசம் ஊனமுதம் ஆகியவற்றைக்கொண்டு கண்ணப்பர் செய்த வழி பாட்டினைவிரும்பி ஏற்றுக்கொண்டுமெய் குளிர்ந்து என உரைக்கப்பட் டது . விருப்புற்று மெய்குளிர்ந்து என்னும் இறைவன் வினைகள் அருள வென்னும் செயவெனெச்சத்தைக்கொண்டு முடிந்தன . அருளப்பெற்று எனற்பாலது அருட்பெற்று என எதுகை நோக்கிச் செயவெனெச்சத் தீறு கெட்டு நின்றது . இனிவிருப்புற்று மெய்குளிர்ந்து என்னும் வினை களுக்கு முடிபாக அருளியஎன்னும் ஒரு பெயரெச்சத்தினை வருவித்து அதனோடு முடித்து அருட்பெற்று நின்றவா என்பதற்கு அருளினைப் பெற்று நின்றவாற்றினை என உரைப்பினுமமையும் . காளத்தியப்பர் தமக்குப் பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போலத்தோன்றும்படி செருப்புற்ற சீரடியால் நிர்மாலியங் கழித்தலை யும் வாய்க்கலச நீரைத் திருமுடியில் உமிழ்தலையும் மாமிசத்தினை ஊட்டுதலையும் விரும்பி ஏற்றுக்கொண்டு அவற்றைக்கொண்டு தம்மை வழிபட்ட வேடனாராகிய கண்ணப்பரது தீவிரதர அன்பின் பெருமையினை உலகினர் அறியும் பொருட்டுத் திருமேனி குளிர்ச்சி யடைந்து அவ்விடத்தில் திருவருள் செய்ய அவ் அருட்பேற்றினை அவ் வேடனார் ஏற்று நின்ற விதத்தினைப் பாடித் தோணோக்கம் ஆடுவோம் எனமுடிக்க . நேசத்தால் **** ****** வாயினீர் கொண்டு மகுடத் துமிந்திறைச்சி ஆயசீர்ப் போனகமா அங்கமைத்துத் - தூயசீர்க் கண்ணிடந்த கண்ணப்பர் தம்கைமிகக் காதலித்து விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி 43 . ( 11 ந் திரு . போற்றித் திருக்கலிவெண்பா 42-43 )