திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தோணோக்கம் "சென்று செருப் புக்காலாற் செல்ல மலர்நீக்கிச் சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் - சென்றுதன் கண்ணிடந்தன் றப்புங் கருத்தற்குக் காட்டினான் கண்ணிடந்தன் றப்பாமைப் பார்த்து'' (11ந் திரு. பரண தேவ நாயனார் சிவபெருமான் திருவந்தாதி 28) என வருவன காண்க. வேடனார் என்பதில் ஆர் உயர்வுபற்றி வந்தது. சேடு -பெருமை. "சேடர் மதின் மல்லற்றில்லை யன்னாய்" (திருக்கோ. 161) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. 809 மெய்குளிர்தல் - திருமேனியிற் பொருந்திய கண்ணிற் பெருகிய இரத்தம் கண்ணப்பர் தம்கண்ணை இடந்து அப்புதலால் நீங்கிக் குளிர்ச்சியடைதல். அருட்பெற்று என்றது காளத்தியப்பர் "நில்லுகண்ணப்ப நில்லு கண்ணப்பவென் னன்புடைத் தோன்றல் நில்லுகண்ணப்ப' எனத் திருவாய்மலர்ந்தருளி தமது வியத்தாஸ்தானமாகிய லிங்கத்திற் றோன்றிய திருக்கையினாலே அவர்கையை அம்போடும் பிடித்துத் தம் பக்கலிற் சேர்த்துக் கொண்டமையாகும். "நில்லுகண் ணப்ப நில்லுண் ணப்ான் அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பஎன் றின்னுரை யதனொடும் எழிற்சிவ லிங்கந் தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால் அன்னவன் றன்கை யம்பொடும் அநப்படப்பிடித் தருளினன்" (11ந் திருமுறை கண்ணப்ப தேவர் திருமறம் 147-152 நக்கீரதேவ நாயனார்) எனப் பதினொராந் திருமுறையில் வருதல் காண்க. இதன்கண், ''அருட்பெற்று நின்றவா" என்பதனால் பிரபஞ்சசுத்தி என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 316 கற்போலு நெஞ்சங் கசிந்துருகக் கருணையினால் நிற்பானைப் பொலவென் னெஞ்சினுள்ளே புகுந்தருளி நற்பாற் படுத்தென்னை நாடறியத் தானிங்ஙன் சொற்பால தானவா தோணோக்க மாடாமோ. 3 ப- ரை. கல் போலும் நெஞ்சம் கசிந்து உருக-கல்லைப் போன்ற எனது கடிய மனமானது கசிந்து உருகும்படி, கருணையினால் நிற்பானைப் போல என்நெஞ்சின் உள்ளே புகுந்தருளி - தனது கிருபையால் என் எதிரில் பரமாசாரியனாய் நிற்பானைப் போல என் மனத்தின் கண்ணே
திருத்தோணோக்கம் சென்று செருப் புக்காலாற் செல்ல மலர்நீக்கிச் சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் - சென்றுதன் கண்ணிடந்தன் றப்புங் கருத்தற்குக் காட்டினான் கண்ணிடந்தன் றப்பாமைப் பார்த்து ' ' ( 11 ந் திரு . பரண தேவ நாயனார் சிவபெருமான் திருவந்தாதி 28 ) என வருவன காண்க . வேடனார் என்பதில் ஆர் உயர்வுபற்றி வந்தது . சேடு -பெருமை . சேடர் மதின் மல்லற்றில்லை யன்னாய் ( திருக்கோ . 161 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . 809 மெய்குளிர்தல் - திருமேனியிற் பொருந்திய கண்ணிற் பெருகிய இரத்தம் கண்ணப்பர் தம்கண்ணை இடந்து அப்புதலால் நீங்கிக் குளிர்ச்சியடைதல் . அருட்பெற்று என்றது காளத்தியப்பர் நில்லுகண்ணப்ப நில்லு கண்ணப்பவென் னன்புடைத் தோன்றல் நில்லுகண்ணப்ப ' எனத் திருவாய்மலர்ந்தருளி தமது வியத்தாஸ்தானமாகிய லிங்கத்திற் றோன்றிய திருக்கையினாலே அவர்கையை அம்போடும் பிடித்துத் தம் பக்கலிற் சேர்த்துக் கொண்டமையாகும் . நில்லுகண் ணப்ப நில்லுண் ணப்ான் அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பஎன் றின்னுரை யதனொடும் எழிற்சிவ லிங்கந் தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால் அன்னவன் றன்கை யம்பொடும் அநப்படப்பிடித் தருளினன் ( 11 ந் திருமுறை கண்ணப்ப தேவர் திருமறம் 147-152 நக்கீரதேவ நாயனார் ) எனப் பதினொராந் திருமுறையில் வருதல் காண்க . இதன்கண் ' ' அருட்பெற்று நின்றவா என்பதனால் பிரபஞ்சசுத்தி என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 316 கற்போலு நெஞ்சங் கசிந்துருகக் கருணையினால் நிற்பானைப் பொலவென் னெஞ்சினுள்ளே புகுந்தருளி நற்பாற் படுத்தென்னை நாடறியத் தானிங்ஙன் சொற்பால தானவா தோணோக்க மாடாமோ . 3 ப- ரை . கல் போலும் நெஞ்சம் கசிந்து உருக - கல்லைப் போன்ற எனது கடிய மனமானது கசிந்து உருகும்படி கருணையினால் நிற்பானைப் போல என்நெஞ்சின் உள்ளே புகுந்தருளி - தனது கிருபையால் என் எதிரில் பரமாசாரியனாய் நிற்பானைப் போல என் மனத்தின் கண்ணே