திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை தானே வலியவந்து, தான் இங்ஙன் என்னை நாடு அறிய நற் பாற் படுத்து - இறைவன் இவ்வுலகில் என்னை உலகினர் அறியும்படி நல்வழி யிற் பொருந்தச் செய்து, சொற் பாலது ஆன ஆ தோணோக்கம் ஆடாமோ - எனக்கு உபதேசிக்க வேண்டியதை உபதேசித்த விதத் தைப் பாடிக் கொண்டு தோணோக்கம் ஆடுவோமாக. 810 க இறைவன் கல்லைப் போன்ற எனது கடிய மனமானது கசிந்து உருகும் படித் தன் கருணையினால் என் எதிரில் நிற்பவனைப் போல என் நெஞ்சினுள்ளே தானே வலிய வந்து இவ்வுலகில் என்னை உலகினர் அறியும்படி நல்வழியிற் பொருந்தச் செய்து எனக்கு உபதேசிக்க வேண்டியதை உபதேசித்த விதத்தைப் பாடிக்கொண்டு தோணோக்கம் ஆடுவோமாக என்பதாம். கற்போலும் நெஞ்சம் - கல்லைப்போன்ற கடினமனம். நெஞ்சங் கசிந்துருகக் கருணையினால் நிற்பானைப் போன்று என்றது எனது மனம் கசிந்துருகும்படி தன் பேரருளால் என் எதிரில் பரமாசாரியனாய் நிற் பானைப் போன்று என்றவாறு. ''அன்பால் நீ அகநெகவே புகுந்தருளி'' (ஏசறவு 7) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க. கருணையினால் நெஞ்சினுள்ளே புகுந்தருளி என்றது இறைவன் திரு வருளினால் அவனை இடைவிடாது தியானித்தல் பற்றி. நற்பாற் படுத்து - தீட்சை செய்து. சொற்பால தானவா என் றது சொல்ல வேண்டியதைச் சொன்ன விதத்தை என்றவாறு. இறை வன் அடிகளை ஆட்கொண்ட போது உலகு, உயிர், இறை என்னும் முப்பொருள்களின் இயல்பினை எடுத்து அருளிச் செய்ததையே சொற் பாலதானவா என்னும் பகுதியால் அடிகள் குறித்தருளினார். ஆன வாறு என்பது ஆனவா என ஈறுகெட்டது. இதன்கண், ''நாடறிய என்னை நற்பாற் படுத்து'' என்பதனால் பிரபஞ்சசுத்தி என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 317 நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனே டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் உலகே ழெனத்திசை பத் தெனத்தா னொருவனுமே பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ. ப - ரை. நிலம் நீர் நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலா பகலோன் புலன் ஆய மைந்தனோடு எண்வகையாய் புணர்ந்து நின்றான் - நிலனும் நீரும் நெருப்பும் காற்றும் நீண்ட ஆகாயமும் சந்திரலும் சூரியனும் அறிவுருவாய் ஆன்மா என்னும் இவ்வெட்டனோடு எட்டுவகையாய்க் கலந்து நின்றவனாகிய, தான் ஒருவனுமே - தான் ஒருவனே, உலகு ஏழு என திசை பத்து என - உலகு ஏழாகவும் திசைகள் பத்தாகவும், பல
திருவாசக ஆராய்ச்சியுரை தானே வலியவந்து தான் இங்ஙன் என்னை நாடு அறிய நற் பாற் படுத்து - இறைவன் இவ்வுலகில் என்னை உலகினர் அறியும்படி நல்வழி யிற் பொருந்தச் செய்து சொற் பாலது ஆன தோணோக்கம் ஆடாமோ - எனக்கு உபதேசிக்க வேண்டியதை உபதேசித்த விதத் தைப் பாடிக் கொண்டு தோணோக்கம் ஆடுவோமாக . 810 இறைவன் கல்லைப் போன்ற எனது கடிய மனமானது கசிந்து உருகும் படித் தன் கருணையினால் என் எதிரில் நிற்பவனைப் போல என் நெஞ்சினுள்ளே தானே வலிய வந்து இவ்வுலகில் என்னை உலகினர் அறியும்படி நல்வழியிற் பொருந்தச் செய்து எனக்கு உபதேசிக்க வேண்டியதை உபதேசித்த விதத்தைப் பாடிக்கொண்டு தோணோக்கம் ஆடுவோமாக என்பதாம் . கற்போலும் நெஞ்சம் - கல்லைப்போன்ற கடினமனம் . நெஞ்சங் கசிந்துருகக் கருணையினால் நிற்பானைப் போன்று என்றது எனது மனம் கசிந்துருகும்படி தன் பேரருளால் என் எதிரில் பரமாசாரியனாய் நிற் பானைப் போன்று என்றவாறு . ' ' அன்பால் நீ அகநெகவே புகுந்தருளி ' ' ( ஏசறவு 7 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க . கருணையினால் நெஞ்சினுள்ளே புகுந்தருளி என்றது இறைவன் திரு வருளினால் அவனை இடைவிடாது தியானித்தல் பற்றி . நற்பாற் படுத்து - தீட்சை செய்து . சொற்பால தானவா என் றது சொல்ல வேண்டியதைச் சொன்ன விதத்தை என்றவாறு . இறை வன் அடிகளை ஆட்கொண்ட போது உலகு உயிர் இறை என்னும் முப்பொருள்களின் இயல்பினை எடுத்து அருளிச் செய்ததையே சொற் பாலதானவா என்னும் பகுதியால் அடிகள் குறித்தருளினார் . ஆன வாறு என்பது ஆனவா என ஈறுகெட்டது . இதன்கண் ' ' நாடறிய என்னை நற்பாற் படுத்து ' ' என்பதனால் பிரபஞ்சசுத்தி என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 317 நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனே டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் உலகே ழெனத்திசை பத் தெனத்தா னொருவனுமே பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ . - ரை . நிலம் நீர் நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலா பகலோன் புலன் ஆய மைந்தனோடு எண்வகையாய் புணர்ந்து நின்றான் - நிலனும் நீரும் நெருப்பும் காற்றும் நீண்ட ஆகாயமும் சந்திரலும் சூரியனும் அறிவுருவாய் ஆன்மா என்னும் இவ்வெட்டனோடு எட்டுவகையாய்க் கலந்து நின்றவனாகிய தான் ஒருவனுமே - தான் ஒருவனே உலகு ஏழு என திசை பத்து என - உலகு ஏழாகவும் திசைகள் பத்தாகவும் பல