திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை 485 ணன் அவ்வாடைகளைக் தீரத்தையடைந்து ஆடைகளைக் களைந்து நீரில் இறங்கினர். கண் கவர்ந்துகொண்டு கடம்ப மரத்தில் ஏறி யிருந்தான், நீராடி முடிந்த பெண்கள் தம் ஆடைகளைக் காணாராய், தேடி, கண்ணன் கடம்ப மரத்தில் வைத்திருப்பக்கண்டு அவற்றைத் தருமாறு வேண்டினர். கண்ணனும் அவர்கள் ஆடைகளைக் கொடுத்து அருள் செய்தான் என ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. இவற் றால் கன்னியர்கள் மழைவளங் குறித்தும் சிறந்த கணவரைப்பெறும் பொருட்டும் வைகறையில் நீராடி பாவை நோன்பு நோற்று வந்த னர் என்பது அறியலாம். பாவை நோன்பு அம்பாவாடல் எனவும் தைந்நீர் எனவும் மார் கழிநீர் எனவும் சொல்லப்படும். பாவை நோன்பாகிய அம்பா வாடல் 11-ம் பரிபாடலில் கூறப்படுகிறது. அப்பாடலிலேயே தைந்நீர் எனவும் கூறப்படுகிறது. ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து, மாயிருந் திங்கண் மறுநிறை யாதிரை, விரிநூ லந்த ணர் விழவு தொடங்க" கன்னியர் அம்பாவாடல் தொடங்கினர் எனக் கூறப்படுகிறது. அதனால் ஞாயிற்றின் வெயில் சுடாத குளிர்ச் சியையுடைய மாரிக்காலத்தின் பிற்பகுதியாகிய தனு மாதத்தில் விரிந்த ஆகம நூலையுடைய ஆதிசைவ அந்தணர்கள் ஆலயத்தில் இறைவற்குப் பூரணையை அடுத்து வருகின்ற ஆதிரை விழவினைத் தொடங்கக் கன்னியரும் அம்பாவாடலாகிய பாவை நோன்பைத் தொடங்கினர் எனத் தெரிகிறது. ஆதிரை விழவு ஆதிரையை இறுதியாகக்கொண்டு முன்பத்து நாட்களுக்கு முன் தொடங்கப்படுதலின், ஆதிரைவிழவு தொடங்கும் போது தொடங்கிய அம்பாவாடலும் அந்நாளிலேயே தொடங்கப் பட்டதென்பது துணியப்படும். எனவே ஆதிரை விழவும் அம்பா வாடலும் ஒருங்கு தொடங்கி ஒருங்கு நிறைவெய்துவன என அறி யப்படும். ஆதிரை தனு மாதத்திலே கொள்ளப்பட வேண்டும் என்பது ஆகம் நூற்றுணிபாகும். ஆகவே, ஆதிரை விழவு முடிய முடியும் அம்பாவாடலும் அத்தனு மாதத்திலேயே முடிவடையும் என்பது போதரும். அம்பாவாடலாகிய மார்கழி நீராடல் சங்க நூல்களில் தைந் நீராடலாகக் கூறப்பட்டுள்ளது. தைஇத் திங்கட் டண்கயம் படியும் பெருந்தோட் குறுமகள்' என நற்றிணையிலும், தையினி ராடிய தவந்தலைப் பாடுவாயோ'' எனக் கலித்தொகையிலும் (80) (கலி. 59-13)
திருவெம்பாவை 485 ணன் அவ்வாடைகளைக் தீரத்தையடைந்து ஆடைகளைக் களைந்து நீரில் இறங்கினர் . கண் கவர்ந்துகொண்டு கடம்ப மரத்தில் ஏறி யிருந்தான் நீராடி முடிந்த பெண்கள் தம் ஆடைகளைக் காணாராய் தேடி கண்ணன் கடம்ப மரத்தில் வைத்திருப்பக்கண்டு அவற்றைத் தருமாறு வேண்டினர் . கண்ணனும் அவர்கள் ஆடைகளைக் கொடுத்து அருள் செய்தான் என ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது . இவற் றால் கன்னியர்கள் மழைவளங் குறித்தும் சிறந்த கணவரைப்பெறும் பொருட்டும் வைகறையில் நீராடி பாவை நோன்பு நோற்று வந்த னர் என்பது அறியலாம் . பாவை நோன்பு அம்பாவாடல் எனவும் தைந்நீர் எனவும் மார் கழிநீர் எனவும் சொல்லப்படும் . பாவை நோன்பாகிய அம்பா வாடல் 11 - ம் பரிபாடலில் கூறப்படுகிறது . அப்பாடலிலேயே தைந்நீர் எனவும் கூறப்படுகிறது . ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து மாயிருந் திங்கண் மறுநிறை யாதிரை விரிநூ லந்த ணர் விழவு தொடங்க கன்னியர் அம்பாவாடல் தொடங்கினர் எனக் கூறப்படுகிறது . அதனால் ஞாயிற்றின் வெயில் சுடாத குளிர்ச் சியையுடைய மாரிக்காலத்தின் பிற்பகுதியாகிய தனு மாதத்தில் விரிந்த ஆகம நூலையுடைய ஆதிசைவ அந்தணர்கள் ஆலயத்தில் இறைவற்குப் பூரணையை அடுத்து வருகின்ற ஆதிரை விழவினைத் தொடங்கக் கன்னியரும் அம்பாவாடலாகிய பாவை நோன்பைத் தொடங்கினர் எனத் தெரிகிறது . ஆதிரை விழவு ஆதிரையை இறுதியாகக்கொண்டு முன்பத்து நாட்களுக்கு முன் தொடங்கப்படுதலின் ஆதிரைவிழவு தொடங்கும் போது தொடங்கிய அம்பாவாடலும் அந்நாளிலேயே தொடங்கப் பட்டதென்பது துணியப்படும் . எனவே ஆதிரை விழவும் அம்பா வாடலும் ஒருங்கு தொடங்கி ஒருங்கு நிறைவெய்துவன என அறி யப்படும் . ஆதிரை தனு மாதத்திலே கொள்ளப்பட வேண்டும் என்பது ஆகம் நூற்றுணிபாகும் . ஆகவே ஆதிரை விழவு முடிய முடியும் அம்பாவாடலும் அத்தனு மாதத்திலேயே முடிவடையும் என்பது போதரும் . அம்பாவாடலாகிய மார்கழி நீராடல் சங்க நூல்களில் தைந் நீராடலாகக் கூறப்பட்டுள்ளது . தைஇத் திங்கட் டண்கயம் படியும் பெருந்தோட் குறுமகள் ' என நற்றிணையிலும் தையினி ராடிய தவந்தலைப் பாடுவாயோ ' ' எனக் கலித்தொகையிலும் ( 80 ) ( கலி . 59-13 )