திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தோணோக்கம் சண்டேசுரநாயனாரால் தண்டிக்கப்பட்டமையால் எச்சதத்தன் சிவகருமம் சிதைத்த பாவம் நீங்கி மேற்கதியடைந்தான்.தாளிரண்டும் சேதித்தமை இறைவனது அருளாலேயே என்பது நாயனார் சிவகரு மஞ் சிதைத்தவனைத் தண்டிக்கும் பொருட்டு மருங்கு கிடந்த ஒரு கோலினை எடுத்தலும் அது மழுவாக மாறினமையால் அறியப்படும். சிந்து பொழுதி லது நோக்குஞ் சிறுவரிறையிற் றீயோனைத் தந்தையெனவே யறிந்தவன்றன் றாள்கள் சித்துந் தகுதியினால் முந்தை ஒருங்கு கிடந்தகோ லெடுத்தார்க் கதுவே முறைமையினால் வந்து மழுவாயிட வெறிந்தார் மண்மேல் வீழ்ந்தான் மறையோனும்'' (பெரிய சண்டீ. 51) எனப் பெரியபுராணத்தும், “உறுவதறி சண்டி ஒண்மணற் கூட்டி அறுவகை ஆனைந்தும் ஆட்டத்தன் தாதை செறுவகை செய்து சிதைப்ப முனிந்து மறுமழு வால்வெட்டி மாலைபெற்றானே' எனத் திருமந்திரத்தும் வருதலும் ஈண்டறியற்பாலது. 320 815 இதன்கண், 'பாதகமே சோறு பற்றினவாறு" என்பதனால் பிரபஞ்சசுத்தி என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. மான மழிந்தோம் மதி மறந்தோம் மங்கைநல்லீர் வானந் தொழுந்தென்னன வார்கழலே நினைந்தடியோம் ஆனந்தக் கூத்த னருள்பெறின மவ்வணமே ஆனந்த மாகிநின் றாடாமோ தோணோக்கம். (351) 7 ப- ரை. மங்கை நல்லீர் - மங்கைப்பருவமுடைய பெண்களே, வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து - விண்ணவர் வழி படும் தென்னனது கழலையணிந்த திருவடிகளை நினைத்து, அடியோம்- அடியோமாகிய நாங்கள், மானம் அழிந்தோம் - எங்கள் பெருமைகள் தொலையப் பெற்றோம், மதி மறந்தோம் - அறிவு மயக்கம் பெற்றோம்; ஆனந்தக் கூத்தன் அருள் பெறில் - இன்னும் ஆனந்தக் கூத்தனது திரு வருளை நாம் பெறுவோமாயின், யாம் அவ்வணமே ஆனந்தமாகி நின்று -நாமும் அவ்வாறே பேரின்பமுற்று நின்று, தோணோக்கம் ஆடாமோ - தோணோக்கம் ஆடுவோம். மங்கை நல்லீர், வானவர் தொழும் தென்னனது திருவடியை நினைந்து மானம் அழிந்தோம், மதி மறந்தோம். இன்னும் அந்த ஆனந் தக்கூத்தனது திருவருளைப் பெறுவோமாயின் நாமும் அவ்வண்ணமே பேரின்பமுற்று நின்று தோணோக்கம் ஆடுவோம் என்பதாம்.
திருத்தோணோக்கம் சண்டேசுரநாயனாரால் தண்டிக்கப்பட்டமையால் எச்சதத்தன் சிவகருமம் சிதைத்த பாவம் நீங்கி மேற்கதியடைந்தான்.தாளிரண்டும் சேதித்தமை இறைவனது அருளாலேயே என்பது நாயனார் சிவகரு மஞ் சிதைத்தவனைத் தண்டிக்கும் பொருட்டு மருங்கு கிடந்த ஒரு கோலினை எடுத்தலும் அது மழுவாக மாறினமையால் அறியப்படும் . சிந்து பொழுதி லது நோக்குஞ் சிறுவரிறையிற் றீயோனைத் தந்தையெனவே யறிந்தவன்றன் றாள்கள் சித்துந் தகுதியினால் முந்தை ஒருங்கு கிடந்தகோ லெடுத்தார்க் கதுவே முறைமையினால் வந்து மழுவாயிட வெறிந்தார் மண்மேல் வீழ்ந்தான் மறையோனும் ' ' ( பெரிய சண்டீ . 51 ) எனப் பெரியபுராணத்தும் உறுவதறி சண்டி ஒண்மணற் கூட்டி அறுவகை ஆனைந்தும் ஆட்டத்தன் தாதை செறுவகை செய்து சிதைப்ப முனிந்து மறுமழு வால்வெட்டி மாலைபெற்றானே ' எனத் திருமந்திரத்தும் வருதலும் ஈண்டறியற்பாலது . 320 815 இதன்கண் ' பாதகமே சோறு பற்றினவாறு என்பதனால் பிரபஞ்சசுத்தி என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . மான மழிந்தோம் மதி மறந்தோம் மங்கைநல்லீர் வானந் தொழுந்தென்னன வார்கழலே நினைந்தடியோம் ஆனந்தக் கூத்த னருள்பெறின மவ்வணமே ஆனந்த மாகிநின் றாடாமோ தோணோக்கம் . ( 351 ) 7 ப- ரை . மங்கை நல்லீர் - மங்கைப்பருவமுடைய பெண்களே வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து - விண்ணவர் வழி படும் தென்னனது கழலையணிந்த திருவடிகளை நினைத்து அடியோம் அடியோமாகிய நாங்கள் மானம் அழிந்தோம் - எங்கள் பெருமைகள் தொலையப் பெற்றோம் மதி மறந்தோம் - அறிவு மயக்கம் பெற்றோம் ; ஆனந்தக் கூத்தன் அருள் பெறில் - இன்னும் ஆனந்தக் கூத்தனது திரு வருளை நாம் பெறுவோமாயின் யாம் அவ்வணமே ஆனந்தமாகி நின்று -நாமும் அவ்வாறே பேரின்பமுற்று நின்று தோணோக்கம் ஆடாமோ - தோணோக்கம் ஆடுவோம் . மங்கை நல்லீர் வானவர் தொழும் தென்னனது திருவடியை நினைந்து மானம் அழிந்தோம் மதி மறந்தோம் . இன்னும் அந்த ஆனந் தக்கூத்தனது திருவருளைப் பெறுவோமாயின் நாமும் அவ்வண்ணமே பேரின்பமுற்று நின்று தோணோக்கம் ஆடுவோம் என்பதாம் .