திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை மங்கை நல்லீர் - மங்கைப் பருவத்தையுடைய பெண்களே. "வாட்டடங்கண் மட மங்கை நல்லீர்""பொன்னுடைப் பூண்முலை மங்கை நல்லீர்" (திருப் பொற்.8; 13) எனப் பிறாண்டும் வந்தமை காண்க. மானம் - பெருமை; செருக்கு. மதி -உயிருணர்ச்சி; தற் போதம் ''உணர்வு கெட்டு என் உள்ளமும் போய், நான் கெட்டவா பாடித் தெள்ளேணங் கொட்டாமோ" (தெள் 18) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. 816 வானம் - தேவர்களுக்கு ஆகுபெயர். தென்னன் - தென்னாடுடைய சிவபெருமான். 'தென்னாடுடைய சிவனே போற்றி" (போற்றி.164) தென்னன் வார்கழலே நினைந்து மானமழிந்தோம், மதிமறந்தோம் என மாறிக்கூட்டிப் பொருள் கொள்க. ஆனந்தக்கூத்தன் - ஆனந் தக்கூத்துடைய சிவன். '"அணிமுடி யாதியமரர் கோமான் ஆனந்தக் கூத்தன்" (திருவார்த்தை 3). பெறில் என்பது பெறல் வேண்டும் என் பது குறித்து நின்றது. "பெற்றாற்பெறிற்பெறுவர்" (குறள் 58) என் புழிப்போல, இறைவன் ஆனந்தக்கூத்தனாதலின் அவன் அருள்பெறில் நாமும் ஆனந்தமுற்று ஆடுவோம் என்பார் ஆனந்தக்கூத்தனருள் பெறில் நாம் அவ்வண்ணமே யானந்தமாகிநின்று ஆடாமோ என்றார். இதன்கண், "மானமழிந்தோம் மதிமறந்தோம்" என்பதனால் பிரபஞ்சசுத்தி என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 321 எண்ணுடை மூவ ரிராக்கதர்க ளெரிபிழைத்துக் கண்ணுத லெந்தை கடைத்தலைமு னின்றதற்பின் எண்ணிலி யிந்திர ரெத்தனையோ பிரமர்களும் மண்மிசை மால்பலர் மாண்டனர்காண் தோணோக்கம். 8 028 ப-ரை. எண்ணுடை மூவர் இராக்கதர்கள் - தவ வலியால் மதிப் பையுடைய திரிபுரத்து அசுரர் மூவரும், எரி பிழைத்து - தமது முப் புரங்களும் அக்கினியால் அழிக்கப்பட்டபோது இறைவனருளால் அவ் வக்கினியினின்றும் தப்பி, கண் நுதல் எந்தை கடைத்தலை முன் நின்ற தன்பின் - கண் பொருந்திய நெற்றியையுடைத்தாகிய எமது தந்தை யாகிய சிவபெருமானது சிவபுரத்து முதற் கோபுரவாயிலில் காவல் ராகும் பேறு பெற்று நின்ற பின்னர், எண் இலி இந்திரர் - அளவில் லாத இந்திரர்களும், எத்தனையோ பிரமர்களும் மால் பலர் மண் மிசை மாண்டனர் - எவ்வளவோ பிரமர்களும், விட்டுணுக்கள் பலரும் மண்ணின் மீது மாண்டனர் என்று பாடிக்கொண்டு, தோணோக்கம்- தோணோக்கம் ஆடுவோமாக. திரிபுரத்து அசுரர் மூவரும் திரிபுரதகனகாலத்தில் இறைவனரு ளால் ஏரியினின்றும் தப்பிச் சிவபெருமானது சிவபுரத்துமுதற் கோபுர
திருவாசக ஆராய்ச்சியுரை மங்கை நல்லீர் - மங்கைப் பருவத்தையுடைய பெண்களே . வாட்டடங்கண் மட மங்கை நல்லீர் பொன்னுடைப் பூண்முலை மங்கை நல்லீர் ( திருப் பொற் .8 ; 13 ) எனப் பிறாண்டும் வந்தமை காண்க . மானம் - பெருமை ; செருக்கு . மதி -உயிருணர்ச்சி ; தற் போதம் ' ' உணர்வு கெட்டு என் உள்ளமும் போய் நான் கெட்டவா பாடித் தெள்ளேணங் கொட்டாமோ ( தெள் 18 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . 816 வானம் - தேவர்களுக்கு ஆகுபெயர் . தென்னன் - தென்னாடுடைய சிவபெருமான் . ' தென்னாடுடைய சிவனே போற்றி ( போற்றி .164 ) தென்னன் வார்கழலே நினைந்து மானமழிந்தோம் மதிமறந்தோம் என மாறிக்கூட்டிப் பொருள் கொள்க . ஆனந்தக்கூத்தன் - ஆனந் தக்கூத்துடைய சிவன் . ' அணிமுடி யாதியமரர் கோமான் ஆனந்தக் கூத்தன் ( திருவார்த்தை 3 ) . பெறில் என்பது பெறல் வேண்டும் என் பது குறித்து நின்றது . பெற்றாற்பெறிற்பெறுவர் ( குறள் 58 ) என் புழிப்போல இறைவன் ஆனந்தக்கூத்தனாதலின் அவன் அருள்பெறில் நாமும் ஆனந்தமுற்று ஆடுவோம் என்பார் ஆனந்தக்கூத்தனருள் பெறில் நாம் அவ்வண்ணமே யானந்தமாகிநின்று ஆடாமோ என்றார் . இதன்கண் மானமழிந்தோம் மதிமறந்தோம் என்பதனால் பிரபஞ்சசுத்தி என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 321 எண்ணுடை மூவ ரிராக்கதர்க ளெரிபிழைத்துக் கண்ணுத லெந்தை கடைத்தலைமு னின்றதற்பின் எண்ணிலி யிந்திர ரெத்தனையோ பிரமர்களும் மண்மிசை மால்பலர் மாண்டனர்காண் தோணோக்கம் . 8 028 - ரை . எண்ணுடை மூவர் இராக்கதர்கள் - தவ வலியால் மதிப் பையுடைய திரிபுரத்து அசுரர் மூவரும் எரி பிழைத்து - தமது முப் புரங்களும் அக்கினியால் அழிக்கப்பட்டபோது இறைவனருளால் அவ் வக்கினியினின்றும் தப்பி கண் நுதல் எந்தை கடைத்தலை முன் நின்ற தன்பின் - கண் பொருந்திய நெற்றியையுடைத்தாகிய எமது தந்தை யாகிய சிவபெருமானது சிவபுரத்து முதற் கோபுரவாயிலில் காவல் ராகும் பேறு பெற்று நின்ற பின்னர் எண் இலி இந்திரர் - அளவில் லாத இந்திரர்களும் எத்தனையோ பிரமர்களும் மால் பலர் மண் மிசை மாண்டனர் - எவ்வளவோ பிரமர்களும் விட்டுணுக்கள் பலரும் மண்ணின் மீது மாண்டனர் என்று பாடிக்கொண்டு தோணோக்கம் தோணோக்கம் ஆடுவோமாக . திரிபுரத்து அசுரர் மூவரும் திரிபுரதகனகாலத்தில் இறைவனரு ளால் ஏரியினின்றும் தப்பிச் சிவபெருமானது சிவபுரத்துமுதற் கோபுர