திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தோணோக்கம் வாயிலிற் காவலராகும் பேறு பெற்று நின்ற பின்னர், அளவற்ற இந்தி ரர்களும் எத்தனையோ பிரமர்கள் விட்டுணுக்கள் பலரும் மண்மிசை மாண்டனர் என்று பாடிக்கொண்டு தோணோக்கம் ஆடுவோமாக என் பதாம். 817 எண் - தவவலிமை பற்றி வரும் மதிப்பு. மூவரும் தவமுடைய ராதல் "கடுந்தவத்தோர் நெடும்புரங்கள்" (நாவு.299-10) என் பதனாலறிக. இராக்கதர் என்பது அரக்கரைக் குறிப்பதாயினும் திரி புரத்து அசுரர்களை இராக்கதர் என்றது அரக்கர் அசுரர் இருவரை யும் வேறுபாடு கருதாது வழங்கும் மரபுபற்றியாகும். மூவர் என்றது தாரகாக்ஷன், கமலாக்ஷன் வித்தியுன்மாலி என்னும் மூவரை. எரி என் றது திரிபுரமெரித்த தீயினை. இம்மூவரும் பிற அசுரரைப்போல விண்டு போதித்த நாத்திக வாதத்தை உடன்படாராய்ச் சிவவழிபாட்டில் தலை நின்றமையால் எரிபிழைப்பராயினர். இம்மூவர்க்கும் எரி பிழைக்க இறைவன் அருள் செய்தது, மூவார் புரங்கள் எரித்த வன்று மூவர்க்கருள் செய்தார்"(ஞான.69-1) 'அடையார் புரம் வேவ மூவர்க்கருள் செய்த' (ஞான.384-10) 'புரமூன்று மெய்தும் அடியவர்க்கருளிச் செய்த சுவையினை" (நாவு.42-2) திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த, தலையானை (நாவு.273-9) "திரிபுரஞ் செற்றொரு மூவர்க்கருள் செய்தானை' (நாவு.287-8) "அடங்கலா ரூரெரியச் சீறியன்று மூவர்க்கருள் புரிந்தீர்" {சுந். 6-1) "ஒக்க முப்புரமோங் கெரி தூவ வுன்னையுன்னிய மூவர்நின் சரணம், புக்கு மற்றவர் பொன்னுலகாளப் புகழினாலருளீந்தமையறிந்து'' 'முப்புரங்களைத் தீவளைத்தங்கே மூவர்க்கருள் செய்யவல்லானே" (சுந். 66-5) (சுந்.70-3) எனத் தேவாரத்து வருவனவற்றாற் காண்க. மூவரில் இருவர் வாயிற்காவலராகவும் ஒருவர் முழாவொலிப்பவ ராயும் வரம் பெற்றார் என்பது, 'மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரிலிருவர் நின்றிருக்கோயிலின் வாய்தல், காவலாள ரென்றேவிய பின்னை யொருவன் நீகரிகாடரங்காக. மானை நோக்கியோர் மா நட மகிழ மணி முழாமுழக்க வருள் செய்த, தேவ தேவ நின் திருவடியடைந்தேன் செழும்பொழிற்றிருப்புன் கூருளானே" (சுந். 55-8) எனச் சுந்தரரும், 82
திருத்தோணோக்கம் வாயிலிற் காவலராகும் பேறு பெற்று நின்ற பின்னர் அளவற்ற இந்தி ரர்களும் எத்தனையோ பிரமர்கள் விட்டுணுக்கள் பலரும் மண்மிசை மாண்டனர் என்று பாடிக்கொண்டு தோணோக்கம் ஆடுவோமாக என் பதாம் . 817 எண் - தவவலிமை பற்றி வரும் மதிப்பு . மூவரும் தவமுடைய ராதல் கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் ( நாவு.299-10 ) என் பதனாலறிக . இராக்கதர் என்பது அரக்கரைக் குறிப்பதாயினும் திரி புரத்து அசுரர்களை இராக்கதர் என்றது அரக்கர் அசுரர் இருவரை யும் வேறுபாடு கருதாது வழங்கும் மரபுபற்றியாகும் . மூவர் என்றது தாரகாக்ஷன் கமலாக்ஷன் வித்தியுன்மாலி என்னும் மூவரை . எரி என் றது திரிபுரமெரித்த தீயினை . இம்மூவரும் பிற அசுரரைப்போல விண்டு போதித்த நாத்திக வாதத்தை உடன்படாராய்ச் சிவவழிபாட்டில் தலை நின்றமையால் எரிபிழைப்பராயினர் . இம்மூவர்க்கும் எரி பிழைக்க இறைவன் அருள் செய்தது மூவார் புரங்கள் எரித்த வன்று மூவர்க்கருள் செய்தார் ( ஞான.69-1 ) ' அடையார் புரம் வேவ மூவர்க்கருள் செய்த ' ( ஞான.384-10 ) ' புரமூன்று மெய்தும் அடியவர்க்கருளிச் செய்த சுவையினை ( நாவு.42-2 ) திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த தலையானை ( நாவு.273-9 ) திரிபுரஞ் செற்றொரு மூவர்க்கருள் செய்தானை ' ( நாவு.287-8 ) அடங்கலா ரூரெரியச் சீறியன்று மூவர்க்கருள் புரிந்தீர் { சுந் . 6-1 ) ஒக்க முப்புரமோங் கெரி தூவ வுன்னையுன்னிய மூவர்நின் சரணம் புக்கு மற்றவர் பொன்னுலகாளப் புகழினாலருளீந்தமையறிந்து ' ' ' முப்புரங்களைத் தீவளைத்தங்கே மூவர்க்கருள் செய்யவல்லானே ( சுந் . 66-5 ) ( சுந்.70-3 ) எனத் தேவாரத்து வருவனவற்றாற் காண்க . மூவரில் இருவர் வாயிற்காவலராகவும் ஒருவர் முழாவொலிப்பவ ராயும் வரம் பெற்றார் என்பது ' மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரிலிருவர் நின்றிருக்கோயிலின் வாய்தல் காவலாள ரென்றேவிய பின்னை யொருவன் நீகரிகாடரங்காக . மானை நோக்கியோர் மா நட மகிழ மணி முழாமுழக்க வருள் செய்த தேவ தேவ நின் திருவடியடைந்தேன் செழும்பொழிற்றிருப்புன் கூருளானே ( சுந் . 55-8 ) எனச் சுந்தரரும் 82