திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை வேல்போலும் கண்களையுடைய மங்கையர்களே, பவளத்துண்டங் கள் கால்களாகவும் முத்துவடங்கள் கயிறாகவும் அமைந்த ஊசலில் இடப்பட்ட பொன்னாலாகிய பலகையில் ஏறி இனிதாக அமர்ந்து கொண்டு, திருமாலும் தேடியறிய முடியாத தாமரை மலர் போன்ற திருவடிகளை நாய் அடியேற்கு ஊராகத்தந்தருளும் திருவுத்தரகோச மங்கையில் எழுந்தருளியிருக்கும் இறைவனது அருளுருவமான திரு வடிகள் இரண்டினையும் பாடிக்கொண்டு பொன்னூசல் ஆடுவோமாக என்பதாம். 828 பவளம் கால் என்றமையால், பவளத்துண்டங்களைக் கால்களாக நாட்டி அவற்றின் மீது வைரத்துண்டங்களை விட்டமாக இட்டு அவ் விட்டத்தில் முத்து வடங்களைக் கயிறாக மாட்டி, அக்கயிற்றில் பொற் பலகையிட்டு அமைக்கப்பட்ட ஊசல் என்பதுபோதரும். இனிதமர்ந்து -செவ்விதாக இருந்து. நாராயணன் அறியா தாள் - திருமாலும் பன்றி யாகச் சென்றிடந்தும் காண்பரிய தாள். நாண்மலர் - அன்றலர்ந்தமலர். மலர்த்தாள் - தாமரைமலர்போலும் தாள். ஊராகத் தந்தருளும்- இடையீடு இன்றி என்றும் வாழும் பதியாகத் தந்தருளும், என்றது வீடு பேறாகத் தந்தருளும் என்றபடி. உத்தரகோச மங்கை ஆரா அமுதின் என்றமை கொண்டு இது உத்தரகோசமங்கையில் அருளிச்செய்யப்பட் டது என்பாருமுளர். உண்ணும் அமுது எதுவும் ஓரளவில் தெவிட்டுத லடைய இறைவனாகிய தெள்ளமுது நுகர நுகர பின்னும் புதிதாய் இனிமை தந்துகொண்டேயிருத்தலின் ‘ஆரா அமுதாய்" என்றார். போர் ஆர் வேற்கண்மடவீர் என விளித்தமையால் ஊசலாடும் மகளி ரும் ஆட்டும் மகளிரும் தம்முட் பொதுமையில் ஒருவரை யொருவர் அழைத்துக்கொண்டு ஊசலாடினர் என்பது போதரும். போர் ஆர் வேற்கண் 'போரணி வேற்கண் புனற்படம் போர்த்தன" (பொன் வண்ணத்.16) என வருவன காண்க. ஆடாமோ என்பதில் மோ முன் னிலையசை. ஆடுவாம் என்பது ஆடாம் என மரீயிற்று. மடவார் என் பது மடவீர் என விளியேற்றது. இதன்கண், "மலர்த்தாள் ஊராகத் தந்தருளும்" என்பதனால் அருட்சுத்தி பெறப்படும். 328 மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத வான்றங்கு தேவர்களும் காணா மலரடிகள் தேன்றங்கித் தித்தித் தமுதூறித் தான்றெளிந்தங் கூன்றங்கி நின்றுருக்கு முத்தர கோசம ங்கைக் கோன்றங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை போன்றங் கனநடையீர் பொன்னூச லாடாமோ. 1 ப-ரை. குல மஞ்ஞை போன்று அங்கு அன்ன நடையீர்- உயர்ந்த தோகைமயில் போன்ற சாயலைப்பொருந்தி அந்நிலையில் அன்
திருவாசக ஆராய்ச்சியுரை வேல்போலும் கண்களையுடைய மங்கையர்களே பவளத்துண்டங் கள் கால்களாகவும் முத்துவடங்கள் கயிறாகவும் அமைந்த ஊசலில் இடப்பட்ட பொன்னாலாகிய பலகையில் ஏறி இனிதாக அமர்ந்து கொண்டு திருமாலும் தேடியறிய முடியாத தாமரை மலர் போன்ற திருவடிகளை நாய் அடியேற்கு ஊராகத்தந்தருளும் திருவுத்தரகோச மங்கையில் எழுந்தருளியிருக்கும் இறைவனது அருளுருவமான திரு வடிகள் இரண்டினையும் பாடிக்கொண்டு பொன்னூசல் ஆடுவோமாக என்பதாம் . 828 பவளம் கால் என்றமையால் பவளத்துண்டங்களைக் கால்களாக நாட்டி அவற்றின் மீது வைரத்துண்டங்களை விட்டமாக இட்டு அவ் விட்டத்தில் முத்து வடங்களைக் கயிறாக மாட்டி அக்கயிற்றில் பொற் பலகையிட்டு அமைக்கப்பட்ட ஊசல் என்பதுபோதரும் . இனிதமர்ந்து -செவ்விதாக இருந்து . நாராயணன் அறியா தாள் - திருமாலும் பன்றி யாகச் சென்றிடந்தும் காண்பரிய தாள் . நாண்மலர் - அன்றலர்ந்தமலர் . மலர்த்தாள் - தாமரைமலர்போலும் தாள் . ஊராகத் தந்தருளும் இடையீடு இன்றி என்றும் வாழும் பதியாகத் தந்தருளும் என்றது வீடு பேறாகத் தந்தருளும் என்றபடி . உத்தரகோச மங்கை ஆரா அமுதின் என்றமை கொண்டு இது உத்தரகோசமங்கையில் அருளிச்செய்யப்பட் டது என்பாருமுளர் . உண்ணும் அமுது எதுவும் ஓரளவில் தெவிட்டுத லடைய இறைவனாகிய தெள்ளமுது நுகர நுகர பின்னும் புதிதாய் இனிமை தந்துகொண்டேயிருத்தலின் ஆரா அமுதாய் என்றார் . போர் ஆர் வேற்கண்மடவீர் என விளித்தமையால் ஊசலாடும் மகளி ரும் ஆட்டும் மகளிரும் தம்முட் பொதுமையில் ஒருவரை யொருவர் அழைத்துக்கொண்டு ஊசலாடினர் என்பது போதரும் . போர் ஆர் வேற்கண் ' போரணி வேற்கண் புனற்படம் போர்த்தன ( பொன் வண்ணத் .16 ) என வருவன காண்க . ஆடாமோ என்பதில் மோ முன் னிலையசை . ஆடுவாம் என்பது ஆடாம் என மரீயிற்று . மடவார் என் பது மடவீர் என விளியேற்றது . இதன்கண் மலர்த்தாள் ஊராகத் தந்தருளும் என்பதனால் அருட்சுத்தி பெறப்படும் . 328 மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத வான்றங்கு தேவர்களும் காணா மலரடிகள் தேன்றங்கித் தித்தித் தமுதூறித் தான்றெளிந்தங் கூன்றங்கி நின்றுருக்கு முத்தர கோசம ங்கைக் கோன்றங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை போன்றங் கனநடையீர் பொன்னூச லாடாமோ . 1 - ரை . குல மஞ்ஞை போன்று அங்கு அன்ன நடையீர் உயர்ந்த தோகைமயில் போன்ற சாயலைப்பொருந்தி அந்நிலையில் அன்