திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பொன்னூசல் 829 னத்தின் நடை போன்ற நடையினையுடைய மங்கையரே! மூன்று அங்கு இலங்கு நயனத்தன் - மூன்றாக முகத்தில் விளங்கும் கண்களை யுடையவனும், மூவாத வான் தங்கு தேவர்களும் காணா மலர் அடிகள்- அமுதுண்டமையால் நரை திரை நோய் மூப்புச் சாக்காடு அற்ற விண் ணுலகத்தில் உறைகின்ற தேவர்களும் அவர்கள் தலைவர்களும் காண முடியாத தாமரைமலர்போன்ற திருவடிகள், தேன் தங்கி தித்தித்து அமுது ஊறி தெளிந்து - தேனின் கவை அமைந்து இனித்து அமுதினை ஊறச்செய்து உள்ளத்தினைத் தெளிவித்து, அங்கு ஊன் தங்கி நின்று உருக்கும் - அவ்வுடலிற் பொருந்தி நின்று அதனை உருகச் செய்யும், உத்தரகோசமங்கை கோன் தங்கு இடை மருது பாடி - திருவுத்தர கோசமங்கைக்குத் தலைவனுமாகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் திருவிடை மருதூர் என்னும் தலத்தின் சிறப்பினைப் பாடிக்கொண்டு, பொன் ஊசல் ஆடாமோ - திருப்பொன்னூசலை ஆடுவோமாக. அன்னநடையீர், மூன்றாக முகத்தில் விளங்கும் கண்களையுடைய வனும், தேவர்களும் காணமுடியாத தாமரைமலர்போலும் திருவடி கள் தேனின் சுவை அமைந்து இனித்து அமுதினை ஊறச்செய்து உள் ளத்தினைத் தெளிவித்து அவ்வுடலிற் பொருந்தி நின்று அதனை உருகச் செய்யும் உத்தரகோசமங்கைக்குத் தலைவனுமாகிய இறைவன் எழுந் தருளியிருக்கும் திருவிடைமருதூர் என்னும் தலத்தின் சிறப்பினைப் பாடிக்கொண்டு பொன்னூசல் ஆடுவோமாக என்பதாம். மூன்று நயனத்தன் என இயையும். இறைவனது மூன்று கண்கள் சூரியன் சந்திரன் அக்கினி என்பன. "சுடர் மூன்றும் கண் மூன்றாக் கொண்டான் காண் '(நாவு.237-3). அங்கு என்பது முகத்தினைக் குறித் தது. மூவாத தேவர்களும் என இயையும். மூவாத என்றதன் உபலக் கணத்தால் நரை திரை நோய் மூப்புச் சாக்காடற்ற என உரைக்கப் பட்டது. தேவர்களும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பாதலின் தேவத் தலைவர்களும் காணாமையைத் தேவர்கள்மீது ஏற்றிக்கூறப்பட்டது. மலரடிகள் இனிமைசெய்தலின் 'தேன்தங்கி" என்றார். ஊன்தங்கி நினைவிற்றங்கி. திருவடிகள் தங்கி தித்தித்து ஊறி தெளிவித்து ஊன்தங்கி நின் றுருக்கும் கோன் எனமுடிக்க. உருக்கும் கோன் என சினைவினை முத லொடு முடிந்தது. இதன்கண், 'மலரடிகள் தேன் தங்கித் தித்தித் தமுதூறித் தான் தெளிந்தங்கு ஊன்தங்கி நின்றுருக்கும்" என்பதனால் அருட்சுத்தி என் னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 2
திருப்பொன்னூசல் 829 னத்தின் நடை போன்ற நடையினையுடைய மங்கையரே ! மூன்று அங்கு இலங்கு நயனத்தன் - மூன்றாக முகத்தில் விளங்கும் கண்களை யுடையவனும் மூவாத வான் தங்கு தேவர்களும் காணா மலர் அடிகள் அமுதுண்டமையால் நரை திரை நோய் மூப்புச் சாக்காடு அற்ற விண் ணுலகத்தில் உறைகின்ற தேவர்களும் அவர்கள் தலைவர்களும் காண முடியாத தாமரைமலர்போன்ற திருவடிகள் தேன் தங்கி தித்தித்து அமுது ஊறி தெளிந்து - தேனின் கவை அமைந்து இனித்து அமுதினை ஊறச்செய்து உள்ளத்தினைத் தெளிவித்து அங்கு ஊன் தங்கி நின்று உருக்கும் - அவ்வுடலிற் பொருந்தி நின்று அதனை உருகச் செய்யும் உத்தரகோசமங்கை கோன் தங்கு இடை மருது பாடி - திருவுத்தர கோசமங்கைக்குத் தலைவனுமாகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் திருவிடை மருதூர் என்னும் தலத்தின் சிறப்பினைப் பாடிக்கொண்டு பொன் ஊசல் ஆடாமோ - திருப்பொன்னூசலை ஆடுவோமாக . அன்னநடையீர் மூன்றாக முகத்தில் விளங்கும் கண்களையுடைய வனும் தேவர்களும் காணமுடியாத தாமரைமலர்போலும் திருவடி கள் தேனின் சுவை அமைந்து இனித்து அமுதினை ஊறச்செய்து உள் ளத்தினைத் தெளிவித்து அவ்வுடலிற் பொருந்தி நின்று அதனை உருகச் செய்யும் உத்தரகோசமங்கைக்குத் தலைவனுமாகிய இறைவன் எழுந் தருளியிருக்கும் திருவிடைமருதூர் என்னும் தலத்தின் சிறப்பினைப் பாடிக்கொண்டு பொன்னூசல் ஆடுவோமாக என்பதாம் . மூன்று நயனத்தன் என இயையும் . இறைவனது மூன்று கண்கள் சூரியன் சந்திரன் அக்கினி என்பன . சுடர் மூன்றும் கண் மூன்றாக் கொண்டான் காண் ' ( நாவு.237-3 ) . அங்கு என்பது முகத்தினைக் குறித் தது . மூவாத தேவர்களும் என இயையும் . மூவாத என்றதன் உபலக் கணத்தால் நரை திரை நோய் மூப்புச் சாக்காடற்ற என உரைக்கப் பட்டது . தேவர்களும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பாதலின் தேவத் தலைவர்களும் காணாமையைத் தேவர்கள்மீது ஏற்றிக்கூறப்பட்டது . மலரடிகள் இனிமைசெய்தலின் ' தேன்தங்கி என்றார் . ஊன்தங்கி நினைவிற்றங்கி . திருவடிகள் தங்கி தித்தித்து ஊறி தெளிவித்து ஊன்தங்கி நின் றுருக்கும் கோன் எனமுடிக்க . உருக்கும் கோன் என சினைவினை முத லொடு முடிந்தது . இதன்கண் ' மலரடிகள் தேன் தங்கித் தித்தித் தமுதூறித் தான் தெளிந்தங்கு ஊன்தங்கி நின்றுருக்கும் என்பதனால் அருட்சுத்தி என் னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 2