திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பொன்னூசல் 831 கொள்ளப்பட்டது; பன்னூறு கோடி என்பது மிகுதி பற்றிய அளவு. தாம் - அசை. அருள் வேண்டி நிற்கும் முனிவர் தேவர்களுக்கு அப் போது பக்குவமின்மையின் அவர்கள் முன்னிலையில் தன் நீறு எனக் கருளினன் என்க. நீறு - திருவருட்பேற்றிற்கு அறிகுறி. வெள்ளத்து மன்ஊற என்றது அருள் வெள்ளத்தில் மிகுதியாகத்திளைக்கும் வண் ணம் என்றவாறு.இனி, மன்னுறஎன்பது எதுகைநோக்கி நீண்டது எனக் கொண்டு நிலைபெற எனப்பொருள் உரைப்பினுமமையும். மன்னும் - எழுந்தருளியிருக்கும். மின்னேறு மாடம் - மின்னலோடு கூடிய முகில் ஏறித்தங்கும் மாடம்."மஞ்சுதோய் மாடமணி யுத்தரகோசமங்கை" (பொன்னூசல் 4) என அடிகள் கூறுதல் காண்க, வியன் மாளிகை - திருக்கோயில். இதன்கண், ''தன்னீறெனக் கருளித் தன் கருணை வெள்ளத்து மன் னூற" என்றதனால் அருட்சுத்தி பெறப்படுதல் காண்க. 3 330 அன்பர் நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர் நாதன் மஞ்சுதோய் மாடமணி யுத்தர கோசமங்கை அஞ்சொலால் தன்னோடுங் கூடி யடியவர்கள் நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப் புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூச லாடாமோ. ப-ரை. புஞ்சம் ஆர் வெள் வளையீர் - திரட்சி பொருந்திய வெள்ளிய சங்கு வளையல்களை அணிந்த மங்கையர்களே, நஞ்சு அமர் கண்டத்தன் - நஞ்சு பொருந்திய திருக்கண்டத்தை யுடையவனும், அண்டத்தவர் நாதன்-தேவர்களுக்குத் தலைவனும், மஞ்சுதோய்மாட மணி உத்தரகோச மங்கை - மேகங்கள் படிகின்ற உப்பரிகைகளை யுடைய அழகிய திருவுத்தரகோசமங்கைத் திருக்கோயிலில், அம் சொல்லாள் தன்னோடும் கூடி - அழகிய சொற்களையுடைய உமை யம்மையாரொடும் எழுந்தருளியிருந்து, அடியவர்கள் நெஞ்சுளே நின்று - அடியவர்களுடைய மனத்தின் கண்ணே நிலைபெற்று, அமுதம் ஊறி கருணை செய்து - அமுதம்போன்ற இனிமை உண்டாகச்செய்து அருள்புரிந்து. துஞ்சல் பிறப்பு அறுப்பான் தூய புகழ்பாடி - இறத்தல் பிறத்தல்களை நீக்கியருள்பவனுமாகிய இறைவனது பொருள்சேர் புகழினைப்பாடி, பொன்ஊசல் ஆடாமோ - பொன்னூர்சலை ஆடுவோ மாக. வெள்வளையீர், நஞ்சுபொருந்திய கண்டத்தையுடையவனும் தேவர்களுக்கு நாதனும் உத்தரகோச மங்கைக்கண் உமையம்மையா ரொடும் எழுந்தருளியிருந்து அடியவர்களுடைய மனத்தின்கண் நிலை பெற்று அமுதம்போன்ற இனிமை உண்டாகச்செய்து அருள்புரிந்து இறப்புப் பிறப்புக்களை நீக்கியருள்பவனுமாகிய இறைவனது பொருள் சேர் புகழினைப் பாடிக்கொண்டு பொன்னூசலை ஆடுவோமாக என்ப தாம்.
திருப்பொன்னூசல் 831 கொள்ளப்பட்டது ; பன்னூறு கோடி என்பது மிகுதி பற்றிய அளவு . தாம் - அசை . அருள் வேண்டி நிற்கும் முனிவர் தேவர்களுக்கு அப் போது பக்குவமின்மையின் அவர்கள் முன்னிலையில் தன் நீறு எனக் கருளினன் என்க . நீறு - திருவருட்பேற்றிற்கு அறிகுறி . வெள்ளத்து மன்ஊற என்றது அருள் வெள்ளத்தில் மிகுதியாகத்திளைக்கும் வண் ணம் என்றவாறு.இனி மன்னுறஎன்பது எதுகைநோக்கி நீண்டது எனக் கொண்டு நிலைபெற எனப்பொருள் உரைப்பினுமமையும் . மன்னும் - எழுந்தருளியிருக்கும் . மின்னேறு மாடம் - மின்னலோடு கூடிய முகில் ஏறித்தங்கும் மாடம் . மஞ்சுதோய் மாடமணி யுத்தரகோசமங்கை ( பொன்னூசல் 4 ) என அடிகள் கூறுதல் காண்க வியன் மாளிகை - திருக்கோயில் . இதன்கண் ' ' தன்னீறெனக் கருளித் தன் கருணை வெள்ளத்து மன் னூற என்றதனால் அருட்சுத்தி பெறப்படுதல் காண்க . 3 330 அன்பர் நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர் நாதன் மஞ்சுதோய் மாடமணி யுத்தர கோசமங்கை அஞ்சொலால் தன்னோடுங் கூடி யடியவர்கள் நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப் புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூச லாடாமோ . - ரை . புஞ்சம் ஆர் வெள் வளையீர் - திரட்சி பொருந்திய வெள்ளிய சங்கு வளையல்களை அணிந்த மங்கையர்களே நஞ்சு அமர் கண்டத்தன் - நஞ்சு பொருந்திய திருக்கண்டத்தை யுடையவனும் அண்டத்தவர் நாதன் - தேவர்களுக்குத் தலைவனும் மஞ்சுதோய்மாட மணி உத்தரகோச மங்கை - மேகங்கள் படிகின்ற உப்பரிகைகளை யுடைய அழகிய திருவுத்தரகோசமங்கைத் திருக்கோயிலில் அம் சொல்லாள் தன்னோடும் கூடி - அழகிய சொற்களையுடைய உமை யம்மையாரொடும் எழுந்தருளியிருந்து அடியவர்கள் நெஞ்சுளே நின்று - அடியவர்களுடைய மனத்தின் கண்ணே நிலைபெற்று அமுதம் ஊறி கருணை செய்து - அமுதம்போன்ற இனிமை உண்டாகச்செய்து அருள்புரிந்து . துஞ்சல் பிறப்பு அறுப்பான் தூய புகழ்பாடி - இறத்தல் பிறத்தல்களை நீக்கியருள்பவனுமாகிய இறைவனது பொருள்சேர் புகழினைப்பாடி பொன்ஊசல் ஆடாமோ - பொன்னூர்சலை ஆடுவோ மாக . வெள்வளையீர் நஞ்சுபொருந்திய கண்டத்தையுடையவனும் தேவர்களுக்கு நாதனும் உத்தரகோச மங்கைக்கண் உமையம்மையா ரொடும் எழுந்தருளியிருந்து அடியவர்களுடைய மனத்தின்கண் நிலை பெற்று அமுதம்போன்ற இனிமை உண்டாகச்செய்து அருள்புரிந்து இறப்புப் பிறப்புக்களை நீக்கியருள்பவனுமாகிய இறைவனது பொருள் சேர் புகழினைப் பாடிக்கொண்டு பொன்னூசலை ஆடுவோமாக என்ப தாம் .