திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை மஞ்சு - மேகம், மாடம் - உப்பரிகை. அஞ்சொலாள் தன்னோடும் கூடி என்பதற்கு உமையம்மையொடும் பொருந்தி எனவும் உரைக்க லாம். ஊறி என்பது அமுதம் ஊறுவித்து எனப் பிறவினைப் பொரு ளில் வந்தது. துஞ்சல் - இறத்தல். துஞ்சல் பிறப்பு அறுத்தான்- பிறவா நெறியருளினன். "பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே" (திருமந். 1616). தூயபுகழ் - இறைவன் பொருள்சேர் புகழ். கண்டத் தன் நாதன் அறுப்பான் புகழ் என இயையும். நஞ்சமர் கண்டத்தன் என்பதனை, 832 "நாரணன் படரத் தேவர்கெட் டோட வளிசுழல் விசும் பின் கிளர்முக டணளிக் கருமுகில் வளைந்து பெருகிய போல நிலைகெடப் பரந்த +டல்கெழு விடத்தை மறித்தவ ருயிர்பெறக் குறித்துண் டருளித் திருக்களங் கறுத்த ருட்பெறு நாயகன். (கல். 51-26-31) எனவருவன காண்க. புஞ்சம் - திரட்சி. பலவளையல்கள் அணியப்படு தலின் கூட்டம் எனினுமமையும். வெள்வளை - சங்குவளை. இதன்கண்,''அடியவர்கள் நெஞ்சுளே நின்று அமுதமூறிக் கருணை செய்து துஞ்சல் பிறப்பறுப்பான்' என்றதனால் அருட்சுத்தி போந்த வாறு காண்க. 4 331 ஆணோ அலியோ அரினையோ என்றிருவர் காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம் நாணாமே யுய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை ஊணாகவுண்டருளு முத்தர கோசமங்கைக் கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப் பூணார் வனமுலையீர் பொன்னூசலாடாமோ. ப -ரை. பூண் ஆர் வனமுலையீர் - பூண்கள் அணிந்த அழகிய தனங்களையுடையவர்களே, ஆணோ அரிவையோ அலியோ என்று- தம்மிடையில் தோன்றிய சோதிவடிவம் ஆணின் வடிவமோ, பெண் ணின் வடிவமோ, இவ்விரண்டுமல்லாத அலியின் வடிவமோ என்று, இருவர் காணா கடவுள் கருணையினால் - அயன் அரி என்னும் இருவரும் அறியமுடியாத யாவற்றையும் கடந்த பரம்பொருள் தனது பேரருளி னாலே, தேவர்குழாம் நாணாமே உய்ய - தேவர்கூட்டம் தாம் எண்ணிய தற்கு மாறாக ஆகி காலவிடம் தோன்றியமையால் நாணம் கொண்டு அடங்கி அந்நாணீனால் அழிந்துபடாமல் உய்யும் வண்ணம், நஞ்சுதனை ஊணாக உண்டருளி ஆட்கொண்டருளும் -பாற்கடலில் அவர்களை அழிக்கும் வண்ணம் எழுந்த அந்தவிடத்தினை உணவாக உட்கொண்
திருவாசக ஆராய்ச்சியுரை மஞ்சு - மேகம் மாடம் - உப்பரிகை . அஞ்சொலாள் தன்னோடும் கூடி என்பதற்கு உமையம்மையொடும் பொருந்தி எனவும் உரைக்க லாம் . ஊறி என்பது அமுதம் ஊறுவித்து எனப் பிறவினைப் பொரு ளில் வந்தது . துஞ்சல் - இறத்தல் . துஞ்சல் பிறப்பு அறுத்தான் பிறவா நெறியருளினன் . பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே ( திருமந் . 1616 ) . தூயபுகழ் - இறைவன் பொருள்சேர் புகழ் . கண்டத் தன் நாதன் அறுப்பான் புகழ் என இயையும் . நஞ்சமர் கண்டத்தன் என்பதனை 832 நாரணன் படரத் தேவர்கெட் டோட வளிசுழல் விசும் பின் கிளர்முக டணளிக் கருமுகில் வளைந்து பெருகிய போல நிலைகெடப் பரந்த + டல்கெழு விடத்தை மறித்தவ ருயிர்பெறக் குறித்துண் டருளித் திருக்களங் கறுத்த ருட்பெறு நாயகன் . ( கல் . 51-26-31 ) எனவருவன காண்க . புஞ்சம் - திரட்சி . பலவளையல்கள் அணியப்படு தலின் கூட்டம் எனினுமமையும் . வெள்வளை - சங்குவளை . இதன்கண் ' ' அடியவர்கள் நெஞ்சுளே நின்று அமுதமூறிக் கருணை செய்து துஞ்சல் பிறப்பறுப்பான் ' என்றதனால் அருட்சுத்தி போந்த வாறு காண்க . 4 331 ஆணோ அலியோ அரினையோ என்றிருவர் காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம் நாணாமே யுய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை ஊணாகவுண்டருளு முத்தர கோசமங்கைக் கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப் பூணார் வனமுலையீர் பொன்னூசலாடாமோ . -ரை . பூண் ஆர் வனமுலையீர் - பூண்கள் அணிந்த அழகிய தனங்களையுடையவர்களே ஆணோ அரிவையோ அலியோ என்று தம்மிடையில் தோன்றிய சோதிவடிவம் ஆணின் வடிவமோ பெண் ணின் வடிவமோ இவ்விரண்டுமல்லாத அலியின் வடிவமோ என்று இருவர் காணா கடவுள் கருணையினால் - அயன் அரி என்னும் இருவரும் அறியமுடியாத யாவற்றையும் கடந்த பரம்பொருள் தனது பேரருளி னாலே தேவர்குழாம் நாணாமே உய்ய - தேவர்கூட்டம் தாம் எண்ணிய தற்கு மாறாக ஆகி காலவிடம் தோன்றியமையால் நாணம் கொண்டு அடங்கி அந்நாணீனால் அழிந்துபடாமல் உய்யும் வண்ணம் நஞ்சுதனை ஊணாக உண்டருளி ஆட்கொண்டருளும் -பாற்கடலில் அவர்களை அழிக்கும் வண்ணம் எழுந்த அந்தவிடத்தினை உணவாக உட்கொண்