திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பொன்னூசல் டருளி அத்தேவர்களது தொண்டினை ஏற்றுக்கொண்டருளிய, உத்தர கோசமங்கை கோண் ஆர் பிறை சென்னி கூத்தன் - திருவுத்தரகோச மங்கையில் எழுந்தருளியிருக்கின்ற வளைவு பொருந்திய பிறைச்சந்திர னைச் சடையில் அணிந்த கூத்தப் பெருமானது, குணம்பரவி எண் குணங்களையும் புகழ்ந்து பாடிக்கொண்டு, பொன்னூசல் ஆடாமோ - பொன்னூசலை யாடுவோமாக. 833 வனமுலையீர்! தம்மிடையே தோன்றிய சோதிவடிவம் ஆணோ. அரிவையோ, அலியோ என்று அயன் அரி என்னும் இருவரும் அறிய முடியாத கடவுளும்,தன்பேரருளினால் தேவர் குழாம் நாணினால் அழிந்துபடாமல் உய்யும் வண்ணம் அவர்களை அழிக்கும் வண்ணம் எழுந்த அவ்விடத்தினை உணவாக உட்கொண்டருளி அத்தேவர்களது தொண்டினை ஏற்றுக்கொண்டருளிய, திருவுத்தரகோச மங்கையில் எழுந்தருளியிருக்கின்ற கூத்தப்பெருமானது, எண் குணங்களையும் புகழ்ந்து பாடிக்கொண்டு பொன்னூசல் ஆடுவோமாக என்பதாம். ஆணோ அரிவையோ அலியோ என மாறிக் கூட்டிப்பொருள் கொள்க. அரிவை என்பது ஈண்டுப் பருவம் குறியாது பெண் என்னும் துணையாய் நின்றது. இருவர் என்பது குறிப்பினால் அயன் அரியை உணர்த்தியது. இருவர்காணா என்றது அயன் அரி என்னும் இருவ ரும் தம்முட் பொருதபோது அவர் மத்தியில் தோன்றிய ஒளி உருவம் ஆணின் உருவமோ பெண்ணின் உருவமோ அவையல்லாதவற்றின் உருவமோ என்று காணமுடியாத என்றவாறு. "இருவராலறி யொண்ணா இறைவன்" "திருமாலும் மலர்மேலயனுங் காண்கிலா" (சுந்.76-7;77-10) கடவுள்-கடந்தபரம்பொருள். கருணையினால் தேவர் குழாம் நாணாமே உய்ய நஞ்சுதனை ஊணாக உண்டருளி ஆட்கொண்டரு ளும் என விகுதி பிரித்து மாறிக் கூட்டிப் பொருள் உரைக்கப்பட்டது. தேவர் உய்ய நஞ்சுண்டது 'உம்பர் உய்யக் களமாம் விடமமிர் தாக்கிய தில்லைத் தொல்லோன்" (கோவை.22) "நஞ்சமஞ்சி மறுகி விண்ணோர் பணியக் கருணை தரும் பரன்'' (கோவை:195) என வரும். ஆட்கொண்டருளுதல் - அவர்கள் செய்யும் தொண்டினை ஏற்றுக்கொண்டருளுதல். ஆட்கொண்டருளும் கூத்தன் என இயை யும். கோணார் பிறை - வளைவு பொருந்திய பிறை என அதன் இயல் பினைக் குறித்தது. கோணார் பிறை என்றது ஒரு கலையாகிய பிறை. "கலைச்சிறு திங்கண் மிலைத்த சிற்றம்பலவன்'' (கோவை. 25) குணம் - இறைவனுக்குரிய இறைமைக் குணங்கள் எட்டு. அவை, 83
திருப்பொன்னூசல் டருளி அத்தேவர்களது தொண்டினை ஏற்றுக்கொண்டருளிய உத்தர கோசமங்கை கோண் ஆர் பிறை சென்னி கூத்தன் - திருவுத்தரகோச மங்கையில் எழுந்தருளியிருக்கின்ற வளைவு பொருந்திய பிறைச்சந்திர னைச் சடையில் அணிந்த கூத்தப் பெருமானது குணம்பரவி எண் குணங்களையும் புகழ்ந்து பாடிக்கொண்டு பொன்னூசல் ஆடாமோ - பொன்னூசலை யாடுவோமாக . 833 வனமுலையீர் ! தம்மிடையே தோன்றிய சோதிவடிவம் ஆணோ . அரிவையோ அலியோ என்று அயன் அரி என்னும் இருவரும் அறிய முடியாத கடவுளும் தன்பேரருளினால் தேவர் குழாம் நாணினால் அழிந்துபடாமல் உய்யும் வண்ணம் அவர்களை அழிக்கும் வண்ணம் எழுந்த அவ்விடத்தினை உணவாக உட்கொண்டருளி அத்தேவர்களது தொண்டினை ஏற்றுக்கொண்டருளிய திருவுத்தரகோச மங்கையில் எழுந்தருளியிருக்கின்ற கூத்தப்பெருமானது எண் குணங்களையும் புகழ்ந்து பாடிக்கொண்டு பொன்னூசல் ஆடுவோமாக என்பதாம் . ஆணோ அரிவையோ அலியோ என மாறிக் கூட்டிப்பொருள் கொள்க . அரிவை என்பது ஈண்டுப் பருவம் குறியாது பெண் என்னும் துணையாய் நின்றது . இருவர் என்பது குறிப்பினால் அயன் அரியை உணர்த்தியது . இருவர்காணா என்றது அயன் அரி என்னும் இருவ ரும் தம்முட் பொருதபோது அவர் மத்தியில் தோன்றிய ஒளி உருவம் ஆணின் உருவமோ பெண்ணின் உருவமோ அவையல்லாதவற்றின் உருவமோ என்று காணமுடியாத என்றவாறு . இருவராலறி யொண்ணா இறைவன் திருமாலும் மலர்மேலயனுங் காண்கிலா ( சுந்.76-7 ; 77-10 ) கடவுள் - கடந்தபரம்பொருள் . கருணையினால் தேவர் குழாம் நாணாமே உய்ய நஞ்சுதனை ஊணாக உண்டருளி ஆட்கொண்டரு ளும் என விகுதி பிரித்து மாறிக் கூட்டிப் பொருள் உரைக்கப்பட்டது . தேவர் உய்ய நஞ்சுண்டது ' உம்பர் உய்யக் களமாம் விடமமிர் தாக்கிய தில்லைத் தொல்லோன் ( கோவை .22 ) நஞ்சமஞ்சி மறுகி விண்ணோர் பணியக் கருணை தரும் பரன் ' ' ( கோவை : 195 ) என வரும் . ஆட்கொண்டருளுதல் - அவர்கள் செய்யும் தொண்டினை ஏற்றுக்கொண்டருளுதல் . ஆட்கொண்டருளும் கூத்தன் என இயை யும் . கோணார் பிறை - வளைவு பொருந்திய பிறை என அதன் இயல் பினைக் குறித்தது . கோணார் பிறை என்றது ஒரு கலையாகிய பிறை . கலைச்சிறு திங்கண் மிலைத்த சிற்றம்பலவன் ' ' ( கோவை . 25 ) குணம் - இறைவனுக்குரிய இறைமைக் குணங்கள் எட்டு . அவை 83