திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பொன்னூசல் 'பொன்னேர் மேனி" "பொன்போல் விறற்கவின்” என வருவனவற்றாலுங் காண்க. 334 இதன்கண், "பாவங்கள் பற்றறுப்பான் என்னையும் ஆட்கொண் டான்' என்பனவற்றால் அருட்சுத்தி போதருதல் காண்க. 837 (நற். 10:2) (ஐங்.230-4) கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச் சால வமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான் சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை மாலுக் கரியானை வாயார நாம்பாடிப் பூலித் தகங் குழைந்து பொன்னூசலாடாமோ. 7 ப- ரை. குவலயத்தில் - பூமண்டலத்தில், கோலவரை குடுமி வந்து - அழகிய திருக்கயிலாயமலையின் சிகரத்திலுள்ள செம்பொற் றிருக்கோயிலினின்றும் எழுந்தருளிவந்து திருக்காளத்திமலையில் குடு மித்தேவராக எழுந்தருளியிருந்து, சாலம் அமுது உண்டு - கண்ணப்ப நாயனாராற் படைக்கப்பட்ட விலங்குக் கூட்டங்களின் ஊனாகிய அமு தினை உண்டருளியும், தாழ் கடலின் மீது எழுந்து - ஆழமாகிய மேற் றிசைக் கடலின்மீது கலத்திற் சென்று கேவேட ராகிக் கெளிறதுபடுத் தும், ஞால மிக பரி மேற்கொண்டு -பூவுலகு உயர்வடையும்படி குதிரை மீது எழுந்தருளி வந்தும், நமை ஆண்டான் - நம்மையெல் லாம் ஆட்கொண்டருளியவனும், சீலம் திகழும் திரு உத்தரகோச மங்கை மாலுக்கு அரியானை - நல்லொழுக்க நெறி விளங்கும் திருவுத் தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கின்ற திருமாலுக்கும் அறிதற் கரியவனுமாகிய இறைவனை, வாய் ஆர நாம்பாடி பூலித்து அகம் குழைந்து -நாம் மிகுதியாகப் புகழ்ந்து பாடி உடல்புளகித்து மன முருகி, பொன் ஊசல் ஆடாமோ - பொன்னூசல் ஆடுவோமாக. பூமண்டலத்தில் திருக்காளத்தி மலையுச்சியில் குடுமித்தேவராக வந்து கண்ணப்பராற் படைக்கப்பட்ட மிருகக் கூட்டங்களின் ஊனா கிய அமுதத்தினை உண்டருளியும், கடலின் மேலே கேவேடராகச் சென் றும், பூவுலகு உயர்வடையும்படி பரிமேற்கொண்டும் நம்மை ஆட் கொண்டருளியவரும் திருவுத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக் கின்ற, திருமாலுக்கும் அறிதற்கரியவருமாகிய சிவபெருமானை நாம் பாடிப் பூலித்து அகங்குழைந்து பொன்னூசல் ஆடுவோமாக என் பதாம். கோலம்-அழகு, 'கோலத்தனிக்கொம்பர்" (கோவை. 45) என் புழியும் இப்பொருட்டாதல் காண்க. குவலயத்துக் கோலவரை குடுமி
திருப்பொன்னூசல் ' பொன்னேர் மேனி பொன்போல் விறற்கவின் என வருவனவற்றாலுங் காண்க . 334 இதன்கண் பாவங்கள் பற்றறுப்பான் என்னையும் ஆட்கொண் டான் ' என்பனவற்றால் அருட்சுத்தி போதருதல் காண்க . 837 ( நற் . 10 : 2 ) ( ஐங்.230-4 ) கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச் சால வமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான் சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை மாலுக் கரியானை வாயார நாம்பாடிப் பூலித் தகங் குழைந்து பொன்னூசலாடாமோ . 7 ப- ரை . குவலயத்தில் - பூமண்டலத்தில் கோலவரை குடுமி வந்து - அழகிய திருக்கயிலாயமலையின் சிகரத்திலுள்ள செம்பொற் றிருக்கோயிலினின்றும் எழுந்தருளிவந்து திருக்காளத்திமலையில் குடு மித்தேவராக எழுந்தருளியிருந்து சாலம் அமுது உண்டு - கண்ணப்ப நாயனாராற் படைக்கப்பட்ட விலங்குக் கூட்டங்களின் ஊனாகிய அமு தினை உண்டருளியும் தாழ் கடலின் மீது எழுந்து - ஆழமாகிய மேற் றிசைக் கடலின்மீது கலத்திற் சென்று கேவேட ராகிக் கெளிறதுபடுத் தும் ஞால மிக பரி மேற்கொண்டு -பூவுலகு உயர்வடையும்படி குதிரை மீது எழுந்தருளி வந்தும் நமை ஆண்டான் - நம்மையெல் லாம் ஆட்கொண்டருளியவனும் சீலம் திகழும் திரு உத்தரகோச மங்கை மாலுக்கு அரியானை - நல்லொழுக்க நெறி விளங்கும் திருவுத் தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கின்ற திருமாலுக்கும் அறிதற் கரியவனுமாகிய இறைவனை வாய் ஆர நாம்பாடி பூலித்து அகம் குழைந்து -நாம் மிகுதியாகப் புகழ்ந்து பாடி உடல்புளகித்து மன முருகி பொன் ஊசல் ஆடாமோ - பொன்னூசல் ஆடுவோமாக . பூமண்டலத்தில் திருக்காளத்தி மலையுச்சியில் குடுமித்தேவராக வந்து கண்ணப்பராற் படைக்கப்பட்ட மிருகக் கூட்டங்களின் ஊனா கிய அமுதத்தினை உண்டருளியும் கடலின் மேலே கேவேடராகச் சென் றும் பூவுலகு உயர்வடையும்படி பரிமேற்கொண்டும் நம்மை ஆட் கொண்டருளியவரும் திருவுத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக் கின்ற திருமாலுக்கும் அறிதற்கரியவருமாகிய சிவபெருமானை நாம் பாடிப் பூலித்து அகங்குழைந்து பொன்னூசல் ஆடுவோமாக என் பதாம் . கோலம் - அழகு ' கோலத்தனிக்கொம்பர் ( கோவை . 45 ) என் புழியும் இப்பொருட்டாதல் காண்க . குவலயத்துக் கோலவரை குடுமி