திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை 838 வந்து என மாறிக்கூட்டிப் பொருளுரைக்க. கோலவரை குடுமி - அழ கிய திருக்காளத்தி மலையின் உச்சி. 'நாணனே! தோன்றுங் குன்றி எண்ணுவோ மென்ன நாணன் காண நீ போதி நல்ல காட்சியே காணும்" (பரிய. கண்ணப்.96) என வருதல் காண்க. குடுமி - மலையுச்சி ''வடவரைக் குடுமியின் நடு வண்" (கம்ப.திருவவ.8) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. வந்து என்றது காளத்தி மலையுச்சியில் குடுமித்தேவராக வந்து என் றவாறு. (கண்ணப்ப - 95, செங்க ணேறுடையார் வைகுந் திருமலை" ''சேணுயர் திருக்கா ளத்தி மலைமிசை யெழுந்து செவ்வே கோணமில் குடுமித் தேவ ரிருப்பர்'' (கண்ணப்ப - 96) என வருவன காண்க. திருமலை - காளத்தி. திருமலைச்சருக்கத்தில் திரு மலை கயிலையைக் குறிக்கும். காளத்தியும் கயிலையாம். இது தென்கயிலை எனப்படும். கயிலைபாதி காளத்திபாதி அந்தாதியும் இக்கருத்தே பற் றியது. (கண்ணப்ப. 95 வி - ரை பார்க்க.) திருமலைச்சருக்கம் 26-ம் பாட்டு விளக்கவுரையும் சிந்திக்கற்பாலது. திருஞானசம்பந்த சுவாமி களும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அப்பர் சுவாமிகளும் இம்மலையிற் தரிசித்துப் பாடிய வரலாறுகளாலுமறியலாம். சாலம் - கூட்டம். 'திரிந்தன சாலமீன் சாலம்' (கம்ப. வருணனை 25) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. சால அமுதுண்டு என் றார் கண்ணப்ப நாயனாராற் படைக்கப் பட்ட மிருகக் கூட்டங்களின் ஊனாகிய அமுதினை உண்டாராதலின். *"பழகிய வினிமை பார்த்துப் படைத்தவில் விறைச்சி சால அழகிது; நாயனீரே! யமுது செய்தருளும்" என்றார். (கண் - 125) "அன்ன விப்மொழிகள் சொல்லி யமுதுசெய் வித்தவேடர் (கண்-126) ஊனமுது நல்லையுடன் வைத் "திதுமுன்னையினன்றால், ஏனமொடு மான்கலைகண் மரைகடமை யிவையிற்றி லானவுறுப் பிறைச்சியமு, தடியேனுஞ் சுவைகண்டேன்; தேனுமுடன் கலந்ததிது தித்திக்கு" மென மொழிந்தார். (கண் - 150) எனப் பெரியபுராணத்து வருவன காண்க. சால அமுது உண்டு என்பதற்கு மதுரையில் வந்திபால் கொடுக் கப்பட்ட பிட்டமுதினை மிகவும் உண்டு என உரைப்பாருமுளர். அன் றியும், தாழ்கடலின் மீது எழுந்து சால் அ அமுதுண்டு என இயைத்து- ஆழமாகிய திருப்பாற் கடலில் எழுந்து பரந்த அந்தக் கொடிய விடத் தினை அமுதாக உண்டு எனவும் உரைக்கலாம். ஈண்டுச் சால்தல் - பரத் தல்,அ - நஞ்சின் கொடுமை மிகுதியை உணர்த்திய பண்டறிசுட்டு.
திருவாசக ஆராய்ச்சியுரை 838 வந்து என மாறிக்கூட்டிப் பொருளுரைக்க . கோலவரை குடுமி - அழ கிய திருக்காளத்தி மலையின் உச்சி . ' நாணனே ! தோன்றுங் குன்றி எண்ணுவோ மென்ன நாணன் காண நீ போதி நல்ல காட்சியே காணும் ( பரிய . கண்ணப் .96 ) என வருதல் காண்க . குடுமி - மலையுச்சி ' ' வடவரைக் குடுமியின் நடு வண் ( கம்ப.திருவவ .8 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . வந்து என்றது காளத்தி மலையுச்சியில் குடுமித்தேவராக வந்து என் றவாறு . ( கண்ணப்ப - 95 செங்க ணேறுடையார் வைகுந் திருமலை ' ' சேணுயர் திருக்கா ளத்தி மலைமிசை யெழுந்து செவ்வே கோணமில் குடுமித் தேவ ரிருப்பர் ' ' ( கண்ணப்ப - 96 ) என வருவன காண்க . திருமலை - காளத்தி . திருமலைச்சருக்கத்தில் திரு மலை கயிலையைக் குறிக்கும் . காளத்தியும் கயிலையாம் . இது தென்கயிலை எனப்படும் . கயிலைபாதி காளத்திபாதி அந்தாதியும் இக்கருத்தே பற் றியது . ( கண்ணப்ப . 95 வி - ரை பார்க்க . ) திருமலைச்சருக்கம் 26 - ம் பாட்டு விளக்கவுரையும் சிந்திக்கற்பாலது . திருஞானசம்பந்த சுவாமி களும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அப்பர் சுவாமிகளும் இம்மலையிற் தரிசித்துப் பாடிய வரலாறுகளாலுமறியலாம் . சாலம் - கூட்டம் . ' திரிந்தன சாலமீன் சாலம் ' ( கம்ப . வருணனை 25 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . சால அமுதுண்டு என் றார் கண்ணப்ப நாயனாராற் படைக்கப் பட்ட மிருகக் கூட்டங்களின் ஊனாகிய அமுதினை உண்டாராதலின் . * பழகிய வினிமை பார்த்துப் படைத்தவில் விறைச்சி சால அழகிது ; நாயனீரே ! யமுது செய்தருளும் என்றார் . ( கண் - 125 ) அன்ன விப்மொழிகள் சொல்லி யமுதுசெய் வித்தவேடர் ( கண் -126 ) ஊனமுது நல்லையுடன் வைத் திதுமுன்னையினன்றால் ஏனமொடு மான்கலைகண் மரைகடமை யிவையிற்றி லானவுறுப் பிறைச்சியமு தடியேனுஞ் சுவைகண்டேன் ; தேனுமுடன் கலந்ததிது தித்திக்கு மென மொழிந்தார் . ( கண் - 150 ) எனப் பெரியபுராணத்து வருவன காண்க . சால அமுது உண்டு என்பதற்கு மதுரையில் வந்திபால் கொடுக் கப்பட்ட பிட்டமுதினை மிகவும் உண்டு என உரைப்பாருமுளர் . அன் றியும் தாழ்கடலின் மீது எழுந்து சால் அமுதுண்டு என இயைத்து ஆழமாகிய திருப்பாற் கடலில் எழுந்து பரந்த அந்தக் கொடிய விடத் தினை அமுதாக உண்டு எனவும் உரைக்கலாம் . ஈண்டுச் சால்தல் - பரத் தல் - நஞ்சின் கொடுமை மிகுதியை உணர்த்திய பண்டறிசுட்டு .