திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

17. அன்னைப்பத்து ஆத்துமபூரணம் திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது இதன் வரலாற்றினை அடிகளின் புராணகாரர்"ஆங்கொரு சிறுமி தன் சீரன்னையை நோக்கிக் கூறுந், தாங்கிசை மொழியேயாகத் தகு மவை யீரைந்தோதி" என்பர். இதனால், ஒருமங்கை தன் செவிலித் தாயை நோக்கி இறைவன்மாட்டுத் தான் கொண்ட ஒரு தலைக்காமம் பற்றிய உள்ள நிகழ்ச்சியைக் கூறுவதுபோலாக இது அமைந்துள்ளது. இங்கே மங்கை அடிகளாகவும் செவிலித்தாய் திருவருட்சத்தியாக வும் அமைந்தன எனக்கொள்ளல் இயைபுடைத்து. இதன் உட்பொருள் ஆத்துமபூரணம் என்பது. அஃதாவது உயிர் இறைவனது நிறைவில் அமைதல். இதனைத் திருவாசகச் சிறப்புடை யார் ''நேயம்மிகுந்த நிலை குலையக் கூடுதலை, ஆய அருட்டாய்க்கு அங் கறைதல் அன்னைப்பத்தாகும்' என்பர். இது கலிவிருத்தத்தால் அமைந்ததாகும். 336 கலி விருத்தம் திருச்சிற்றம்பலம் வேத மொழியர் வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே யென்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதரிந் நாதனார் அன்னேயென்னும். ப-ரை. வேதமொழியர் - வேதமாகிய மொழியினை அருளிச் செய்தவர்; வெண்ணீற்றர் திருவெண்ணீற்றையுடையவர்: செம் மேனியர் - செம்மையாகிய திருமேனியையுடையவர்; நாத பறையி னர் - நாததத்துவமாகிய பறையினையுடையவர், அன்னே என்னும்- தாயே என்பாள்; நாதபறையினர் இ நாதனார் - அந்நாததத்துவமா கிய பறையினராகிய இத்தலைவர். நான்முகன் மாலுக்கும் நாதர்- தேவத் தலைவர்களாகிய நான் முகப் பிரமனுக்கும் திருமாலுக்கும் தலைவர்; அன்னே என்னும் - தாயேஎன்பாள். வேதமாகிய மொழியினையுடையர்; திருவெண்ணீற்றையுடைய வர்; செம்மையாகிய திருமேனியையுடையவர்; நாதப்பறையினை யுடையவர் அன்னே என்பாள்; நாதப் பறையினராகிய இத்தலைவர் பிரமனுக்கும் திருமாலுக்கும் தலைவர் அன்னே என்பாள் என்பதாம்.
17. அன்னைப்பத்து ஆத்துமபூரணம் திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது இதன் வரலாற்றினை அடிகளின் புராணகாரர் ஆங்கொரு சிறுமி தன் சீரன்னையை நோக்கிக் கூறுந் தாங்கிசை மொழியேயாகத் தகு மவை யீரைந்தோதி என்பர் . இதனால் ஒருமங்கை தன் செவிலித் தாயை நோக்கி இறைவன்மாட்டுத் தான் கொண்ட ஒரு தலைக்காமம் பற்றிய உள்ள நிகழ்ச்சியைக் கூறுவதுபோலாக இது அமைந்துள்ளது . இங்கே மங்கை அடிகளாகவும் செவிலித்தாய் திருவருட்சத்தியாக வும் அமைந்தன எனக்கொள்ளல் இயைபுடைத்து . இதன் உட்பொருள் ஆத்துமபூரணம் என்பது . அஃதாவது உயிர் இறைவனது நிறைவில் அமைதல் . இதனைத் திருவாசகச் சிறப்புடை யார் ' ' நேயம்மிகுந்த நிலை குலையக் கூடுதலை ஆய அருட்டாய்க்கு அங் கறைதல் அன்னைப்பத்தாகும் ' என்பர் . இது கலிவிருத்தத்தால் அமைந்ததாகும் . 336 கலி விருத்தம் திருச்சிற்றம்பலம் வேத மொழியர் வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே யென்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதரிந் நாதனார் அன்னேயென்னும் . - ரை . வேதமொழியர் - வேதமாகிய மொழியினை அருளிச் செய்தவர் ; வெண்ணீற்றர் திருவெண்ணீற்றையுடையவர் : செம் மேனியர் - செம்மையாகிய திருமேனியையுடையவர் ; நாத பறையி னர் - நாததத்துவமாகிய பறையினையுடையவர் அன்னே என்னும் தாயே என்பாள் ; நாதபறையினர் நாதனார் - அந்நாததத்துவமா கிய பறையினராகிய இத்தலைவர் . நான்முகன் மாலுக்கும் நாதர் தேவத் தலைவர்களாகிய நான் முகப் பிரமனுக்கும் திருமாலுக்கும் தலைவர் ; அன்னே என்னும் - தாயேஎன்பாள் . வேதமாகிய மொழியினையுடையர் ; திருவெண்ணீற்றையுடைய வர் ; செம்மையாகிய திருமேனியையுடையவர் ; நாதப்பறையினை யுடையவர் அன்னே என்பாள் ; நாதப் பறையினராகிய இத்தலைவர் பிரமனுக்கும் திருமாலுக்கும் தலைவர் அன்னே என்பாள் என்பதாம் .