திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

155. திருவெம்பாவை தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாளென் னேயென்னே ஈதேயெந் தோழி பரிசேலோர் எம்பாவாய். ப -ரை. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை - முதலும் முடிவும் இல்லாத அரிய பெரிய ஒளி வடிவினனாகிய இறை வனை, யாம் பாடக்கேட்டேயும் - நாங்கள் புகழ்ந்து வாழ்த்திய வாழ்த்துப் பாடலைக் கேட்டும், வாள் தட கண் மாதே வளருதியோ ஒளி பொருந்திய அகன்ற கண்களையுடைய பெண்ணே உறங்குகின் றனையோ? நின் செவிதான் வன்செவியோ -உன்னுடைய காதுகள் கேட்கும் தன்மையில்லாத வலிய காதுகளோ (என்று துயிலெழுப்ப வந்த மகளிர் வினாவுதலும் அதற்கு விடை யாது மின்மையால் வீட் டினுள்ளே சென்றவர்கள் தம் தோழியின் நிலை கண்டு) வீதிவாய் மாதேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலிபோய் கேட்ட லும் - வீதியினிடத்து மகாதேவனாகிய இறைவனுடைய நீண்ட கழலை யுடைய திருவடிகளை யாங்கள் புகழ்ந்து வாழ்த்திய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று கேட்கப்பட்ட அளவில், போது ஆர் அம ளியின் மேல் நின்றும் புரண்டு - மலர்கள் நிறைந்த படுக்கையின் மேனின்று புரண்டு விழுந்து, விம்மி விம்மி மெய்ம் மறந்து - பத்தி மிகுதியாற் பொருமிப் பொருமி அழுது தன்னை மறந்து, இங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் - இவ்வாறு யாதொன்றும் செய்ய இய காதவளாய்ப் பரவசமாய்க் கிடந்தாள், என்னே என்னே-இஃதென்ன வியப்பு வியப்பு, எம் தோழி பரிசு ஈதே - எங்கள் தோழியின் பத் தித் திறம் இதுவா ( என்று தம்முட் கூறி வியந்து) எம் பாவாய்- எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதி தேவீ, இவள் போன்ற பத்தித் திறத்தை எங்களுக்கும் அருளுதி (என வேண்டுதல் செய்து ஏதேனுமாகாளாய்க் கிடந்த தமது தோழியைத் தெளி வித்து அழைத்துக்கொண்டு நீராடப் புறப்பட்டனர்.) என்பதாம்.
155 . திருவெம்பாவை தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாளென் னேயென்னே ஈதேயெந் தோழி பரிசேலோர் எம்பாவாய் . -ரை . ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை - முதலும் முடிவும் இல்லாத அரிய பெரிய ஒளி வடிவினனாகிய இறை வனை யாம் பாடக்கேட்டேயும் - நாங்கள் புகழ்ந்து வாழ்த்திய வாழ்த்துப் பாடலைக் கேட்டும் வாள் தட கண் மாதே வளருதியோ ஒளி பொருந்திய அகன்ற கண்களையுடைய பெண்ணே உறங்குகின் றனையோ ? நின் செவிதான் வன்செவியோ -உன்னுடைய காதுகள் கேட்கும் தன்மையில்லாத வலிய காதுகளோ ( என்று துயிலெழுப்ப வந்த மகளிர் வினாவுதலும் அதற்கு விடை யாது மின்மையால் வீட் டினுள்ளே சென்றவர்கள் தம் தோழியின் நிலை கண்டு ) வீதிவாய் மாதேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலிபோய் கேட்ட லும் - வீதியினிடத்து மகாதேவனாகிய இறைவனுடைய நீண்ட கழலை யுடைய திருவடிகளை யாங்கள் புகழ்ந்து வாழ்த்திய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று கேட்கப்பட்ட அளவில் போது ஆர் அம ளியின் மேல் நின்றும் புரண்டு - மலர்கள் நிறைந்த படுக்கையின் மேனின்று புரண்டு விழுந்து விம்மி விம்மி மெய்ம் மறந்து - பத்தி மிகுதியாற் பொருமிப் பொருமி அழுது தன்னை மறந்து இங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் - இவ்வாறு யாதொன்றும் செய்ய இய காதவளாய்ப் பரவசமாய்க் கிடந்தாள் என்னே என்னே - இஃதென்ன வியப்பு வியப்பு எம் தோழி பரிசு ஈதே - எங்கள் தோழியின் பத் தித் திறம் இதுவா ( என்று தம்முட் கூறி வியந்து ) எம் பாவாய் எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதி தேவீ இவள் போன்ற பத்தித் திறத்தை எங்களுக்கும் அருளுதி ( என வேண்டுதல் செய்து ஏதேனுமாகாளாய்க் கிடந்த தமது தோழியைத் தெளி வித்து அழைத்துக்கொண்டு நீராடப் புறப்பட்டனர் . ) என்பதாம் .