திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "தாளங்கள் கொண்டுங் குழல் கொண்டுமியாழ்கொண்டுந் தாமங்ஙனே வேடங்கள் கொண்டும் விசும்பு செல்வாரவர் வீரட்டரே" (நாவு 104-7) 850 எனத் தேவாரத்தும் வருவன காண்க. அன்றி, தாளத்திற்கு இசைய ஒலிக்கும் உடுக்கை இருந்தவாறு என்னே எனவும் உரைக்கலாம். தாளமிருந்தவாறு யாதோ என்றது தாளவறுதியமைய இறைவர் இசைக்கும் இசைக்கருவி ஒலி என்னை இறைவர்பால் ஈர்க்கின்றது என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு. இதன் கண், ''ஆளெம்மை யாளும் அடிகளார் தங்கையில் தாள மிருந்தவாறு" என்பதனால் ஆத்துமபூரணம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 8 344 தையலோர் பங்கினர் தாபத வேடத்தர் ஐயம் புகுவரால் அன்னே யென்னும் ஐயம் புகுந்தவர் போதலு மென்னுள்ளம் நையுமிது வென்னே அன்னே யென்னும். ப - ரை : தையல் ஓர் பங்கினன் - உமாதேவியாரை ஒரு பாகத்தி லுடையவர்; தாபதவேடத்தர் - அதற்கு முரணாகத் தவவேடத்தினை யுடையர்; ஐயம் புகுவர் - அவர் அவ்வளவில் அமையாது பிச்சையேற் கவும் செல்வர்; அன்னே என்னும் - தாயே என்பாள்; ஐயம் புகுந்த வர் போதலும் - பிச்சை எடுக்கப் புகுந்தவர் செல்லுதலும், என் உள் ளம் நையும் - என்னுடைய மனமானது வருந்துகின்றது; இதுஎன்னே - இஃதென்னையோ? அன்னே என்னும் - தாயே என்பாள். இறைவர் உமாதேவியாரை ஒருபாகத்திலுடையவரும் தவவடி வத்தையுடையவருமாயிருப்பதன்றி ஐயம் புகுவாருமாயிருக்கின்ற னர்; தாயே என்பாள். ஐயம்புகுந்தவர் போதலும் என்மனம் வருந்தா நிற்கும். இஃதென்னையோ? தாயே, என்பாள் என்பதாம். தையலோர் பங்கினர் -உமாதேவியாரை ஒருபாகத்திலுடை யவர். "தையல் பாகத்தீர்"(ஞான. 192-8) "தையலோர் பங்கினனை" (நாவு.273-9) எனத் தேவாரத்து வருவன காண்க. ஓர் பங்கு என்றது இடப்பாகத்தை. "மாதினை யிடமா வைத்த வள்ளல்' ' (தே: ஞான். 41-6) என வருதல் காண்க. தையலோர் பங்கினராயினும் தாபத வேடத்தர் என்க. "மாதொர் கூறுடை நற்றவனை" (ஞான. 140-11) என வருதலுங் காண்க. நீரற வறியாக் கரகமும் தாழ்ந்த திருச்சடையுமுடைமையான் "தாபத வேடத்தர்" என்றார். "நீரறவறியாக் கரகத்துத் தாழ்சடைப் பொலிந்த வருந்தவத்தோற்கே" (புற: கடவுள்) என்று சான்றோர்
திருவாசக ஆராய்ச்சியுரை தாளங்கள் கொண்டுங் குழல் கொண்டுமியாழ்கொண்டுந் தாமங்ஙனே வேடங்கள் கொண்டும் விசும்பு செல்வாரவர் வீரட்டரே ( நாவு 104-7 ) 850 எனத் தேவாரத்தும் வருவன காண்க . அன்றி தாளத்திற்கு இசைய ஒலிக்கும் உடுக்கை இருந்தவாறு என்னே எனவும் உரைக்கலாம் . தாளமிருந்தவாறு யாதோ என்றது தாளவறுதியமைய இறைவர் இசைக்கும் இசைக்கருவி ஒலி என்னை இறைவர்பால் ஈர்க்கின்றது என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு . இதன் கண் ' ' ஆளெம்மை யாளும் அடிகளார் தங்கையில் தாள மிருந்தவாறு என்பதனால் ஆத்துமபூரணம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 8 344 தையலோர் பங்கினர் தாபத வேடத்தர் ஐயம் புகுவரால் அன்னே யென்னும் ஐயம் புகுந்தவர் போதலு மென்னுள்ளம் நையுமிது வென்னே அன்னே யென்னும் . - ரை : தையல் ஓர் பங்கினன் - உமாதேவியாரை ஒரு பாகத்தி லுடையவர் ; தாபதவேடத்தர் - அதற்கு முரணாகத் தவவேடத்தினை யுடையர் ; ஐயம் புகுவர் - அவர் அவ்வளவில் அமையாது பிச்சையேற் கவும் செல்வர் ; அன்னே என்னும் - தாயே என்பாள் ; ஐயம் புகுந்த வர் போதலும் - பிச்சை எடுக்கப் புகுந்தவர் செல்லுதலும் என் உள் ளம் நையும் - என்னுடைய மனமானது வருந்துகின்றது ; இதுஎன்னே - இஃதென்னையோ ? அன்னே என்னும் - தாயே என்பாள் . இறைவர் உமாதேவியாரை ஒருபாகத்திலுடையவரும் தவவடி வத்தையுடையவருமாயிருப்பதன்றி ஐயம் புகுவாருமாயிருக்கின்ற னர் ; தாயே என்பாள் . ஐயம்புகுந்தவர் போதலும் என்மனம் வருந்தா நிற்கும் . இஃதென்னையோ ? தாயே என்பாள் என்பதாம் . தையலோர் பங்கினர் -உமாதேவியாரை ஒருபாகத்திலுடை யவர் . தையல் பாகத்தீர் ( ஞான . 192-8 ) தையலோர் பங்கினனை ( நாவு.273-9 ) எனத் தேவாரத்து வருவன காண்க . ஓர் பங்கு என்றது இடப்பாகத்தை . மாதினை யிடமா வைத்த வள்ளல் ' ' ( தே : ஞான் . 41-6 ) என வருதல் காண்க . தையலோர் பங்கினராயினும் தாபத வேடத்தர் என்க . மாதொர் கூறுடை நற்றவனை ( ஞான . 140-11 ) என வருதலுங் காண்க . நீரற வறியாக் கரகமும் தாழ்ந்த திருச்சடையுமுடைமையான் தாபத வேடத்தர் என்றார் . நீரறவறியாக் கரகத்துத் தாழ்சடைப் பொலிந்த வருந்தவத்தோற்கே ( புற : கடவுள் ) என்று சான்றோர்