திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

18. குயிற்பத்து ஆத்தும விரக்கம் திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது Dat பொழிலகத்துக் குயில்கள் கூவுதலைக் கண்ட அடிகள் அவற்றைப் பார்த்து இறைவன் வரும் வண்ணம் கவுக எனக்கூறும் முகத்தால் தம்மை ஒரு பெண்ணாகவும் இறைவனை நாயகனாகவும் அவன்மேற் கொண்ட அன்பின் மிகுதியால் அவன் அருட் பேற்றை விரும்பிக் குயி லைப்பார்த்து இறைவன் வரும்வண்ணம் கூவுக என்று வேண்டிக்கொண் டதாக அமைந்துள்ளது. இதன் உட்பொருள் ஆத்தும விரக்கம் என்பது உயிர் சிவனருளை வேண்டி இரங்குதல். இதனைத் திருவாசகச் சிறப்புடையார் "தூய வருட்குயிலே சோதியெனைக் கூடுதற்குன், வாயினாற் கூவெனமுன் வாழ்த்தல் குயிற் பத்தாமே" எனக் குறித்துள்ளார். இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். 346 அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் சரியான திருச்சிற்றம்பலம் கீத மினிய குயிலே கேட்டியே லெங்கள் பெருமான் பாத மிரண்டும் வினவிற் பாதாள மேழினுக் கப்பாற் சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற ஆதிகுணமொன்று மில்லான் அந்தமிலான் வரக் கூவாய். தொன்மை ப -ரை. கீதம் இனிய குயிலே - இனிய இசையையுடைய குயிலே. கேட்டியேல் - நான் சொல்வதைக்கேட்டு எனக்கு உதவுவாயாயின்; எங்கள் பெருமான் பாதம் இரண்டும் வினவில் - எங்கள் இறைவனது திருவடிகள் இரண்டும் எவ்வளவின என்றுவினவில்; பாதாளம் ஏழி னுக்கு அப்பால் - அவை பாதாள உலகங்கள் ஏழினுக்கும் அப்பாலாக வுள்ளன; சோதி மணி முடி சொல்லின் - ஒளிபொருந்திய மணிமுடி யின் இயல்பினைச் சொன்னால், சொல் இறந்து நின்ற தொன்மை - அது சொல்லின் அளவைக்கு அப்பாற்பட்டு நின்ற பழமையையுடையது. ஆதி குணம் ஒன்றும் இல்லான் - தோற்றமும் முக்குணங்களும் சிறிதும் தன்பாலில்லாதவன், அந்தம் இலான் - அழிவற்றவன்; வரகூவாய் - அவ்வியல்பினன் இங்கு வரும்வண்ணம் நீ கூவி அழைப்பாயாக. Abar குயிலே! நான் சொல்வதைக்கேட்டு எனக்கு உதவுவாயாயின் எங்கள் பெருமானது பாதம் இரண்டும் பாதாள உலகங்கள் ஏழினுக் கும் அப்பாலாகவுள்ளன; முடிசொல்லின் சொல்லளவைக் கடந்து
18. குயிற்பத்து ஆத்தும விரக்கம் திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது Dat பொழிலகத்துக் குயில்கள் கூவுதலைக் கண்ட அடிகள் அவற்றைப் பார்த்து இறைவன் வரும் வண்ணம் கவுக எனக்கூறும் முகத்தால் தம்மை ஒரு பெண்ணாகவும் இறைவனை நாயகனாகவும் அவன்மேற் கொண்ட அன்பின் மிகுதியால் அவன் அருட் பேற்றை விரும்பிக் குயி லைப்பார்த்து இறைவன் வரும்வண்ணம் கூவுக என்று வேண்டிக்கொண் டதாக அமைந்துள்ளது . இதன் உட்பொருள் ஆத்தும விரக்கம் என்பது உயிர் சிவனருளை வேண்டி இரங்குதல் . இதனைத் திருவாசகச் சிறப்புடையார் தூய வருட்குயிலே சோதியெனைக் கூடுதற்குன் வாயினாற் கூவெனமுன் வாழ்த்தல் குயிற் பத்தாமே எனக் குறித்துள்ளார் . இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் . 346 அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் சரியான திருச்சிற்றம்பலம் கீத மினிய குயிலே கேட்டியே லெங்கள் பெருமான் பாத மிரண்டும் வினவிற் பாதாள மேழினுக் கப்பாற் சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற ஆதிகுணமொன்று மில்லான் அந்தமிலான் வரக் கூவாய் . தொன்மை -ரை . கீதம் இனிய குயிலே - இனிய இசையையுடைய குயிலே . கேட்டியேல் - நான் சொல்வதைக்கேட்டு எனக்கு உதவுவாயாயின் ; எங்கள் பெருமான் பாதம் இரண்டும் வினவில் - எங்கள் இறைவனது திருவடிகள் இரண்டும் எவ்வளவின என்றுவினவில் ; பாதாளம் ஏழி னுக்கு அப்பால் - அவை பாதாள உலகங்கள் ஏழினுக்கும் அப்பாலாக வுள்ளன ; சோதி மணி முடி சொல்லின் - ஒளிபொருந்திய மணிமுடி யின் இயல்பினைச் சொன்னால் சொல் இறந்து நின்ற தொன்மை - அது சொல்லின் அளவைக்கு அப்பாற்பட்டு நின்ற பழமையையுடையது . ஆதி குணம் ஒன்றும் இல்லான் - தோற்றமும் முக்குணங்களும் சிறிதும் தன்பாலில்லாதவன் அந்தம் இலான் - அழிவற்றவன் ; வரகூவாய் - அவ்வியல்பினன் இங்கு வரும்வண்ணம் நீ கூவி அழைப்பாயாக . Abar குயிலே ! நான் சொல்வதைக்கேட்டு எனக்கு உதவுவாயாயின் எங்கள் பெருமானது பாதம் இரண்டும் பாதாள உலகங்கள் ஏழினுக் கும் அப்பாலாகவுள்ளன ; முடிசொல்லின் சொல்லளவைக் கடந்து