திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இறைவன் பேரருளுடையான் என்பதும் "சிற்றம்பலத்தான் தரும் பேரருள் போல்" (160) என்பதும் "சுரந்ததன் பேரருளாற் றொழும் பிற் பரிந்தெனை யாண்ட சிற்றம்பலத்தான்" (279) எனத் திருக்கோ வையாரிலும், பேரருளால் இன்பமளித்தல் "பிறவியென்னுமிக் கடலை நீந்தத்தன் பேரருள் தந்தருளினான்'' (சென்னிப். 7) அடற் களி யாவர்க்கு மன்பர்க் களிப்பவன் றுன்பவின்பம் பட" (கோவை 297) என வருவனவற்றாலுமறிக. E 856 இதன்கண், தன்பால் அன்புடையார் யாண்டுளராயினும் ஆண் டுச் சென்று அவர்க்கருளும் இயல்புடையான் இறைவனாதலின் என் பாலும் வாராதொழியான் ஆதலால் குயிலே நின் சீரிய வாயால் கூவியழைப்பாயாகவென ஆத்துமவிரக்கம் என்னும் பதிகநுதலிய பொருள் வெளிப்பட்டவாறு காண்க. 348 நீல வுருவிற் குயிலே நீண்மணி மாட நிலாவுங் கோல வழகிற் றிகழும் கொடிமங்கை யுள்ளுறை கோயிற் சீலம் பெரிது மினிய திருவுத் தரகோச மங்கை ஞாலம் விளங்க விருந்த நாயக னைவரக் கூவாய். 2 ப - ரை நீல உருவின் குயிலே -நீலநிறத்தையுடைய குயிலே. நீள்மணி மாடம் நிலாவும் - நீண்ட மணிகள் மேல்நிலைகள் விளங்கும். கோல அழகின் திகழும் - வடிவழகோடு விளங்கும், கொடி மங்கை உள் உறை கோயில் - பசுங்கொடி போன்ற உமையம்மை உள்ளே எழுந்தருளியிருக்கின்ற கோயிலையுடைய, சீலம் பெரிதும் இனிய திரு வுத்தரகோசமங்கை - நல்லொழுக்கம் மிகவும் செவ்விதாகவுள்ள திரு வுத்தரகோசமங்கையின்கண்ணே, ஞாலம் விளங்க இருந்த நாயகனை வர கூவாய் - உலகமெல்லாம் சிவஞானம் பெற்று விளங்க எழுந் தருளியிருந்த தலைவனை வரும்படி கூவியழைப்பாயாக. குயிலே, நீண்மணி மாடங்கள் விளங்கும் திருவுத்தரகோசமங் கையில் ஞாலம் விளங்கும்படி எழுந்தருளியிருந்த இறைவனை இங்கே வரும்படி கூவியழைப்பாயாக என்பதாம். நீலவுருவிற் குயில் - நீலநிறத்தையுடைய குயில் "மணி நிற, விருங் குயில், (அக. 25-6) எனப்பிறரும் கூறுதல் காண்க. "நீண்மணி மாட நிலாவும் திருவுத்தரகோசமங்கை யெனவும், "மங்கையுள்ளுறை கோயிற்றிருவுத்தரகோசமங்கை' யெனவும் தனித்தனி இயையும். மஞ்சுதோய் மாடமணி யுத்தரகோசமங்கை" (பொன்னூ. 4) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க. கோலவழகிற் றிகழும் கொடிமங்கை என்றது வடிவழகோடு விளங்கும் பசுங்கொடி போன்ற உமையம்மையை. சீலம் - நல்லொ
திருவாசக ஆராய்ச்சியுரை இறைவன் பேரருளுடையான் என்பதும் சிற்றம்பலத்தான் தரும் பேரருள் போல் ( 160 ) என்பதும் சுரந்ததன் பேரருளாற் றொழும் பிற் பரிந்தெனை யாண்ட சிற்றம்பலத்தான் ( 279 ) எனத் திருக்கோ வையாரிலும் பேரருளால் இன்பமளித்தல் பிறவியென்னுமிக் கடலை நீந்தத்தன் பேரருள் தந்தருளினான் ' ' ( சென்னிப் . 7 ) அடற் களி யாவர்க்கு மன்பர்க் களிப்பவன் றுன்பவின்பம் பட ( கோவை 297 ) என வருவனவற்றாலுமறிக . E 856 இதன்கண் தன்பால் அன்புடையார் யாண்டுளராயினும் ஆண் டுச் சென்று அவர்க்கருளும் இயல்புடையான் இறைவனாதலின் என் பாலும் வாராதொழியான் ஆதலால் குயிலே நின் சீரிய வாயால் கூவியழைப்பாயாகவென ஆத்துமவிரக்கம் என்னும் பதிகநுதலிய பொருள் வெளிப்பட்டவாறு காண்க . 348 நீல வுருவிற் குயிலே நீண்மணி மாட நிலாவுங் கோல வழகிற் றிகழும் கொடிமங்கை யுள்ளுறை கோயிற் சீலம் பெரிது மினிய திருவுத் தரகோச மங்கை ஞாலம் விளங்க விருந்த நாயக னைவரக் கூவாய் . 2 - ரை நீல உருவின் குயிலே -நீலநிறத்தையுடைய குயிலே . நீள்மணி மாடம் நிலாவும் - நீண்ட மணிகள் மேல்நிலைகள் விளங்கும் . கோல அழகின் திகழும் - வடிவழகோடு விளங்கும் கொடி மங்கை உள் உறை கோயில் - பசுங்கொடி போன்ற உமையம்மை உள்ளே எழுந்தருளியிருக்கின்ற கோயிலையுடைய சீலம் பெரிதும் இனிய திரு வுத்தரகோசமங்கை - நல்லொழுக்கம் மிகவும் செவ்விதாகவுள்ள திரு வுத்தரகோசமங்கையின்கண்ணே ஞாலம் விளங்க இருந்த நாயகனை வர கூவாய் - உலகமெல்லாம் சிவஞானம் பெற்று விளங்க எழுந் தருளியிருந்த தலைவனை வரும்படி கூவியழைப்பாயாக . குயிலே நீண்மணி மாடங்கள் விளங்கும் திருவுத்தரகோசமங் கையில் ஞாலம் விளங்கும்படி எழுந்தருளியிருந்த இறைவனை இங்கே வரும்படி கூவியழைப்பாயாக என்பதாம் . நீலவுருவிற் குயில் - நீலநிறத்தையுடைய குயில் மணி நிற விருங் குயில் ( அக . 25-6 ) எனப்பிறரும் கூறுதல் காண்க . நீண்மணி மாட நிலாவும் திருவுத்தரகோசமங்கை யெனவும் மங்கையுள்ளுறை கோயிற்றிருவுத்தரகோசமங்கை ' யெனவும் தனித்தனி இயையும் . மஞ்சுதோய் மாடமணி யுத்தரகோசமங்கை ( பொன்னூ . 4 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க . கோலவழகிற் றிகழும் கொடிமங்கை என்றது வடிவழகோடு விளங்கும் பசுங்கொடி போன்ற உமையம்மையை . சீலம் - நல்லொ