திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ''முந்து நடுவு முடிவுமாகிய சேவடியான்' எனவும், மூவரறி யாச் சேவடியான்" எனவும் கூட்டியுரைப்பினு மமையும். 860 (நாவு. 217-3) "முதலாகி நடுவாகி முடிவானானே" ஈறுந் நடுவு முதலுமாவர்" (நாவு.230-1) "முந்திய முதல்நடு விறுதியுமானாய் மூவரு மறிகிலர்" (திருப்பள்.8) 'மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான்' என வருவன காண்க. சிந்துரம் - செம்மை. ''சிந்துரப் பொடிகளும்'' (சீவக.86) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. (திருவெண்பா 9) இதன்கண், 'சேவடியானைச் சேவகனை வரக்கூவாய்" என்பனவற் றால் ஆத்துமவிரக்கம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 351 * இன்பந் தருவன் குயிலே யேழுல கும்முழு தாளி அன்ப னமுதளித் தூறு மானந்தன் வான்வந்த தேவன் நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி மேல்வரு வானைக் கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி நாதனைக் கூவாய். 5 ப-ரை. கொம்பில் மிழற்றும் குயிலே - மாமரக்கொம்பிலிருந்து மழலைச் சொற்களைப் பேசும் குயிலே, உனக்கு இன்பம் தருவன்- உனக்கு மகிழ்ச்சியைத் தரும் பரிசில் தருவேன்; குயிலே - குயிலே. ஏழ் உலகும் முழுது ஆளி - எழுவகைப்பட்ட உலகங்கள் முழுவதையும் ஆள்பவனும், அன்பன் - உயிர்களின் அன்பே தன்னுருவாக உடைய வனும், அமுது அளித்து ஊறும் ஆனந்தன் - உள்ளத்திலே அமுதின் இனிமையை அளித்து மேலும் மேலும் பெருகும் இன்ப வடிவினனும், வான்வந்த தேவன் - நம்மை ஆட்கொள்ளும்பொருட்டுச் சிதாகாயத்தி னின்றும் வலிய எழுந்தருளி வந்த ஒளியுருவனும், நன் பொன் மணி சுவடு ஒத்த நல் பரிமேல் வருவானை - மாற்றுயர்ந்த பொன்னாலும் மாணிக்கத்தாலும் அமைந்த அங்கியை இட்டாற் போன்ற வடிவத் தினையுடைய நல்ல குதிரையின்மேல் எழுந்தருளிவந்தவனும், கோகழி நாதனை - திருவாவடு துறையில் எழுந்தருளியிருக்கும் தலைவனுமாகிய இறைவனை,கூவாய் - நீ வரும்படி கூவி அழைப்பாயாக. பதி குயிலே, உனக்கு இன்பந்தருவன்; ஏழுலகும் முழுதும் ஆள்பவனும், அன்பனும், உள்ளத்திலே அமுதின் இனிமையை அளித்து மென்மேலும் பெருகும் இன்ப வடிவினனும், நம்மை ஆட்கொள்ளும் பொருட்டு வானினின்று தானே வலிய எழுந்தருளிவந்த ஒளியுருவனும், நல்ல குதிரையின் மேல் எழுந்தருளி வந்தவனும், கோகழிநாதனுமாகிய இறைவனை வரும்படி கூவியழைப்பாயாக என்பதாம்.
திருவாசக ஆராய்ச்சியுரை ' ' முந்து நடுவு முடிவுமாகிய சேவடியான் ' எனவும் மூவரறி யாச் சேவடியான் எனவும் கூட்டியுரைப்பினு மமையும் . 860 ( நாவு . 217-3 ) முதலாகி நடுவாகி முடிவானானே ஈறுந் நடுவு முதலுமாவர் ( நாவு.230-1 ) முந்திய முதல்நடு விறுதியுமானாய் மூவரு மறிகிலர் ( திருப்பள் .8 ) ' மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான் ' என வருவன காண்க . சிந்துரம் - செம்மை . ' ' சிந்துரப் பொடிகளும் ' ' ( சீவக .86 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . ( திருவெண்பா 9 ) இதன்கண் ' சேவடியானைச் சேவகனை வரக்கூவாய் என்பனவற் றால் ஆத்துமவிரக்கம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 351 * இன்பந் தருவன் குயிலே யேழுல கும்முழு தாளி அன்ப னமுதளித் தூறு மானந்தன் வான்வந்த தேவன் நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி மேல்வரு வானைக் கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி நாதனைக் கூவாய் . 5 - ரை . கொம்பில் மிழற்றும் குயிலே - மாமரக்கொம்பிலிருந்து மழலைச் சொற்களைப் பேசும் குயிலே உனக்கு இன்பம் தருவன் உனக்கு மகிழ்ச்சியைத் தரும் பரிசில் தருவேன் ; குயிலே - குயிலே . ஏழ் உலகும் முழுது ஆளி - எழுவகைப்பட்ட உலகங்கள் முழுவதையும் ஆள்பவனும் அன்பன் - உயிர்களின் அன்பே தன்னுருவாக உடைய வனும் அமுது அளித்து ஊறும் ஆனந்தன் - உள்ளத்திலே அமுதின் இனிமையை அளித்து மேலும் மேலும் பெருகும் இன்ப வடிவினனும் வான்வந்த தேவன் - நம்மை ஆட்கொள்ளும்பொருட்டுச் சிதாகாயத்தி னின்றும் வலிய எழுந்தருளி வந்த ஒளியுருவனும் நன் பொன் மணி சுவடு ஒத்த நல் பரிமேல் வருவானை - மாற்றுயர்ந்த பொன்னாலும் மாணிக்கத்தாலும் அமைந்த அங்கியை இட்டாற் போன்ற வடிவத் தினையுடைய நல்ல குதிரையின்மேல் எழுந்தருளிவந்தவனும் கோகழி நாதனை - திருவாவடு துறையில் எழுந்தருளியிருக்கும் தலைவனுமாகிய இறைவனை கூவாய் - நீ வரும்படி கூவி அழைப்பாயாக . பதி குயிலே உனக்கு இன்பந்தருவன் ; ஏழுலகும் முழுதும் ஆள்பவனும் அன்பனும் உள்ளத்திலே அமுதின் இனிமையை அளித்து மென்மேலும் பெருகும் இன்ப வடிவினனும் நம்மை ஆட்கொள்ளும் பொருட்டு வானினின்று தானே வலிய எழுந்தருளிவந்த ஒளியுருவனும் நல்ல குதிரையின் மேல் எழுந்தருளி வந்தவனும் கோகழிநாதனுமாகிய இறைவனை வரும்படி கூவியழைப்பாயாக என்பதாம் .